Balasingam Kajenderan

ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசனத் திட்டத்தை வடக்கு மாகாண ஆளுநர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்

கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசனத் திட்டத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 08.05.2025 அன்று வியாழக்கிழமை நேரடியாகச் சென்று பார்வையிட்டார். இதன்போது ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசனத் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட மற்றொரு தொகுதி சோலர் பனலுக்கான இணைப்பு இலங்கை மின்சார சபையால் வழங்கப்படவில்லை என்ற விடயம் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. கூரைமேல் சோலர் பனல் பொருத்தப்படவில்லை என்றும் நீரோட்டத்தின் மேலேயே சோலர் பனல் பொருத்தப்பட்டுள்ளமையாலேயே அந்த அனுமதி வழங்கப்படவில்லை எனவும் இலங்கை மின்சார சபையால் […]

ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசனத் திட்டத்தை வடக்கு மாகாண ஆளுநர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார் Read More »

கிளிநொச்சி மாவட்டத்தின் புழுதியாறு ஏற்று நீர்பாசனத் திட்டத்தை மீண்டும் விரைந்து செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தின் புழுதியாறு ஏற்று நீர்பாசனத் திட்டத்தை மீண்டும் விரைந்து செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் 08.05.2025 அன்று வியாழக்கிழமை நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலர் சு.முரளிதரன், கிளிநொச்சி மாவட்டத்தில் திருவையாறு மற்றும் ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசனத் திட்டங்கள் வெற்றிகரமாக இயங்கும் நிலையில் புழுதியாறு ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும் இயக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தை

கிளிநொச்சி மாவட்டத்தின் புழுதியாறு ஏற்று நீர்பாசனத் திட்டத்தை மீண்டும் விரைந்து செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலம் தீர்க்கப்படாதுள்ள அரச காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் நடமாடும் சேவை

கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலம் தீர்க்கப்படாதுள்ள அரச காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் காணி நடமாடும் சேவை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் 08.05.2025 அன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. காணிப் பிணக்குத் தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்ட இணக்கப்பாட்டை ஏற்றுக்கொள்ளாமல் ஆளுநருக்கு முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையடுத்தே, காணி நடமாடும் சேவை நடத்தப்பட்டிருந்தது. இதன்போது சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைக்கு அமைவாக தீர்வுகள் வழங்கப்பட்டிருந்தன. பெரும்பாலான தரப்பினர்கள் அதனை ஏற்றுக்கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலம் தீர்க்கப்படாதுள்ள அரச காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் நடமாடும் சேவை Read More »

கிளிநொச்சி மாவட்ட மத்திய பேருந்து நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் இன்று காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டார்

கிளிநொச்சி மாவட்ட மத்திய பேருந்து நிலையக் காணியை உள்ளூராட்சி மன்றத்துக்கு கையளிப்பதற்கும், உள்ளூராட்சி மன்றத்தால் அங்கு கடைத்தொகுதி அமைக்கப்பட்ட பின்னர் தற்போது பேருந்து நிலையத்தில் கடைகளை அமைத்துள்ளவர்களுக்கு அதனை முன்னுரிமையில் வழங்குவதற்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் 08.05.2025 அன்று வியாழக்கிழமை தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட மத்திய பேருந்து நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் இன்று காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டார். பேருந்து நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை

கிளிநொச்சி மாவட்ட மத்திய பேருந்து நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் இன்று காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டார் Read More »

சீட்ழுப்பின் முதலாவது சீட்டை வடக்கு மாகாண ஆளுநர் சம்பிரதாயபூர்வமாகப் பெற்றுக்கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

கண்பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையத்தால் மாற்றுத்திறனாளிகள் தின மாபெரும் அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பு வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 2025ஆம் ஆண்டுக்கான சீட்ழுப்பின் முதலாவது சீட்டை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 06.05.2025 அன்று செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாகப் பெற்றுக்கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

சீட்ழுப்பின் முதலாவது சீட்டை வடக்கு மாகாண ஆளுநர் சம்பிரதாயபூர்வமாகப் பெற்றுக்கொண்டு ஆரம்பித்து வைத்தார். Read More »

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் ஏற்பாடு செய்த வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனது பிரிவுபசார நிகழ்வு

  வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் ஏற்பாடு செய்த வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனது பிரிவுபசார நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் 03.05.2025 அன்று சனிக்கிழமை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் அவர் தம் பாரியார் ஆகியோர் ஆளுநர் செயலக ஊழியர்களால் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆளுநர் செயலக கணக்காளர் சோ.பிரபு, ஆளுநரின்

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் ஏற்பாடு செய்த வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனது பிரிவுபசார நிகழ்வு Read More »

764 மற்றும் 769 வழித்தடங்களில் தனியார் பேருந்துச் சேவையை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

10.04.2025 அன்று பலாலி வீதி திறக்கப்பட்ட நிலையில், அதன் ஊடாக தனியார் பேருந்துச் சேவையை நடத்துவது தொடர்பில், 764 மற்றும் 769 வழித்தடங்களில் சேவையில் ஈடுபடும் சங்கங்களுடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (30.04.2025) இடம்பெற்றது. 764 வழித்தட பேருந்துச் சேவையை பலாலி வீதியூடாக காங்கேசன்துறை சந்தி வரையில் நடத்துவது என்றும், 769 வழித்தட பேருந்துச் சேவையை காங்கேசன்துறை வீதியூடாக காங்கேசன்துறை சந்தி வரையில் நடத்துவது

764 மற்றும் 769 வழித்தடங்களில் தனியார் பேருந்துச் சேவையை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடல் Read More »

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 01.05.2025 அன்று இறைவனடி சேர்ந்துள்ள நிலையில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

இந்து சமயத்துக்காக பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இறைவனடி சேர்ந்தமையறிந்து கவலையடைகின்றேன். இந்து சமயத்தின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அவரை மிக நீண்டகாலமாக நான் அறிவேன். நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனம் ஊடாக இந்து சமயத்தை வளர்ப்பதற்காக பல நிகழ்வுகளை நடத்தி வந்திருக்கின்றார். அவற்றுக்கு மேலாக சிறுவர்களிடத்தே இந்து சமயத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கவும், இந்து சமய அறநெறிகளைப் போதிக்கவும் பல

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 01.05.2025 அன்று இறைவனடி சேர்ந்துள்ள நிலையில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி Read More »

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு அஞ்சலி நிகழ்வு

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில் 22.04.2025 அன்று 26 பொதுமக்கள் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் 30.04.2025 அன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நிலையில் அதில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பங்கேற்றார். கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்திய ஆளுநர், தனது அஞ்சலி உரையில், இத்தகைய தாக்குதல்கள் கொடூரமானவை. கடந்த காலங்களில் நாங்களும் இதனை அனுபவித்திருக்கின்றோம். கொல்லப்பட்டவர்களின் ஆன்மா சாந்தியடையவேண்டுவதோடு,

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு அஞ்சலி நிகழ்வு Read More »

கொடிகாமம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் நவீன போத்தல் கள் அடைப்பு நிலைய திறப்பு விழா

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை உள்வாங்கிப் பயணித்தால்தான் முன்னோக்கிச் செல்ல முடியும் என்பதை கூட்டுறவுத்துறையினர் உணர்ந்துகொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியீட்டத்தின் கீழ் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தால் அமைக்கப்பட்ட கொடிகாமம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் நவீன போத்தல் கள் அடைப்பு நிலைய திறப்பு விழா 30.04.2025 அன்று புதன்கிழமை வரணி, நாவற்காட்டில் அமைந்துள்ள கூட்டுறவுச் சங்கத்தின் நிலையத்தில் நடைபெற்றது.

கொடிகாமம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் நவீன போத்தல் கள் அடைப்பு நிலைய திறப்பு விழா Read More »