வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை
முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இந்த ஆண்டு மாகாண விசேட குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ், 50% மானிய அடிப்படையில் திட்டங்களை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்காக 14 திட்டங்களை அடையாளப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் பயனடைய விரும்பும் பண்ணையாளர்கள் தமது பிரதேச கால்நடை வைத்திய அலுவலகங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். புல் வளர்ப்பு […]
