ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசனத் திட்டத்தை வடக்கு மாகாண ஆளுநர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசனத் திட்டத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 08.05.2025 அன்று வியாழக்கிழமை நேரடியாகச் சென்று பார்வையிட்டார். இதன்போது ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசனத் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட மற்றொரு தொகுதி சோலர் பனலுக்கான இணைப்பு இலங்கை மின்சார சபையால் வழங்கப்படவில்லை என்ற விடயம் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. கூரைமேல் சோலர் பனல் பொருத்தப்படவில்லை என்றும் நீரோட்டத்தின் மேலேயே சோலர் பனல் பொருத்தப்பட்டுள்ளமையாலேயே அந்த அனுமதி வழங்கப்படவில்லை எனவும் இலங்கை மின்சார சபையால் […]
