2024 ஆண்டுக்குரிய மாவட்ட விவசாய மேன்மை விருதுகள் மற்றும் மாவட்ட தொழில்துறை மேன்மை விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் என்பன வழங்கும் நிகழ்வு
இளையோர் விவசாயத்தை ஊக்குவிக்கவேண்டும் என விருதைப் பெற்ற இரண்டு இளைஞர்களும் கூறிய வார்த்தைகள் காதில் இனிக்கின்றன. இவர்களைப் போன்ற ஆயிரம் இளையோர் இருந்தால் போதும் எங்களது மாகாணம் வளர்ச்சியில் எங்கேயோ சென்றுவிடும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். நிலைபேறான உயர்தர வாழ்க்கைத் தரம் கொண்ட வளமான மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தை உருவாக்கும் இலட்சியப் பயணத்தில் மாவட்ட மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளான விவசாயம் மற்றும் தொழிற்துறையில் சவால்களை கடந்து சாதனை படைத்துவரும் முயற்சியாளர்களை […]
