வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மே மாதத்துக்குரிய கலந்துரையாடல்
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மே மாதத்துக்குரிய கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (22.05.2025) நடைபெற்றது. உள்ளூராட்சி மன்றங்களை தமது சேவைகளை வினைத்திறனாக முன்னெடுக்குமாறும், மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய நிறுவனமாக மாற்றும் வகையில் செயலாற்றுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார். தெருமின்விளக்குகள் பொருத்துவதில் இலங்கை மின்சார சபையுடன் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உள்ள இடர்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. இதன் பின்னர் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்தினதும் முன்னேற்றங்கள் தனித்தனியாக ஆராயப்பட்டன. அதில் […]
