Balasingam Kajenderan

யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

யாழ்ப்பாண நகரம் நெரிசல் மிக்கதாகவும் நெருக்கடி மிக்கதாகவும் மாறியுள்ளது. அவற்றை ஒழுங்கமைக்க – சீரமைக்க வேண்டியதேவை, பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அதற்கு அமைவாக நெடுந்தூர, குறுந்தூர பேருந்துச் சேவைகள் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படவேண்டியுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14.10.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், […]

யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

நாங்கள் தாய் மொழிக்கு மேலதிகமாக சிங்களம் மற்றும் ஆங்கிலத்தை கற்றிருப்பது எங்களுக்கு எப்போதுமே கைகொடுக்கும். – கௌரவ ஆளுநர்

நாம் இன்னொரு மொழியைக் கற்பதன் ஊடாக எமது சேவையை வினைத்திறனாக்குவதுடன் மாத்திரமல்லாது தொடர்பாடல் இடைவெளியையும் குறைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், வடக்கு மாகாண சபையுடன் இணைந்து மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கு நடத்திய சிங்கள டிப்ளோமா கற்கை நெறியின் பட்டமளிப்பு விழா வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை காலை (13.10.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில்

நாங்கள் தாய் மொழிக்கு மேலதிகமாக சிங்களம் மற்றும் ஆங்கிலத்தை கற்றிருப்பது எங்களுக்கு எப்போதுமே கைகொடுக்கும். – கௌரவ ஆளுநர் Read More »

இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையத்தின் பிரதிநிதிகளுக்கும், கௌரவ ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுரண்டலற்ற முறையில் விவசாயிகள் தங்களுடைய உற்பத்திகளுக்கு நியாய விலை கிடைப்பதற்கு வழியேற்படுத்துவதும் நோக்கில் இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையம் யாழ். மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களை எதிர்வரும் நவம்பர் மாதம் நிறுவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (09.10.2025) நடைபெற்றது. “GoVimart” என்னும் ஒன்றிணைந்த அணுகுமுறையூடாக, விவசாய உற்பத்திகளுக்கு நிலைபேறான தீர்வை

இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையத்தின் பிரதிநிதிகளுக்கும், கௌரவ ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

சங்கிலியன் பூங்கா, இணுவில் சிறுவர் மருத்துவமனைக்கான காணிகளை ஒழுங்குமுறைப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.

சங்கிலியன் பூங்கா மற்றும் இணுவிலில் சிறுவர் மருத்துவமனைக்காக அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை மாலை (11.10.2025) நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், பிரதி நில அளவையாளர் நாயகம், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் – காணி, நல்லூர் பிரதேச செயலர், உடுவில் உதவிப் பிரதேச செயலர், யாழ்.

சங்கிலியன் பூங்கா, இணுவில் சிறுவர் மருத்துவமனைக்கான காணிகளை ஒழுங்குமுறைப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய வகையில் பொலிஸாரின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் – கௌரவ ஆளுநர்

காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்ற வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார். அத்துடன் கடந்த காலங்களில் இடம்பெற்றதைப்போன்று மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொலிஸாருக்கும் ஆளுநர் பணிப்புரைவிடுத்தார். வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாணத்துக்குரிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், அனைத்து

மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய வகையில் பொலிஸாரின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »

உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

கட்டட அனுமதிக்கு விண்ணப்பித்து குடிபுகு சான்றிதழ் (COC) / அமைவு சான்றிதழ் பெற்றுக்கொள்ளாமல் வணிக நோக்கில் இயங்கும் நிறுவனங்களில் வர்த்தக நடவடிக்கைகளை உள்ளூராட்சி மன்றங்களைத் தடை செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணித்தார். குடிபுகு சான்றிதழ் பெற்றுக் கொள்ளாமையால் குறித்த கட்டடத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமையாலும் உள்ளூராட்சி மன்றங்களால் வரி அறவிட முடியாத நிலைமை காணப்படுகின்றமையாலும் அதனால் ஏற்படும் வருமான இழப்பையும் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நிதியும் திட்டமிடலும்,

உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

உலக வங்கியின் நிதி உதவியுடன் வடக்கு மாகாணத்திலுள்ள ஆரம்ப சுகாதார மருத்துவ நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன

ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (Primary Healthcare System Enhancing Project) அனலைதீவுக்கான மருத்துவப் படகு (Ambulance boat) அடுத்த ஆண்டும், நயினாதீவுக்கான மருத்துவப் படகு 2027ஆம் ஆண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. உலக வங்கியின் பிரதிநிதிகள், மத்திய சுகாதார அமைச்சின் கீழ் செயற்படும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் பிரதிநிதிகள், யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்

உலக வங்கியின் நிதி உதவியுடன் வடக்கு மாகாணத்திலுள்ள ஆரம்ப சுகாதார மருத்துவ நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன Read More »

கல்லுண்டாய் கிராமத்தில் புலம்பெயர்ந்தவர்களின் நிதிப் பங்களிப்பில் உருவான ‘இந்திரநிலா’ மணிமண்டபம் கௌரவ ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

கல்லுண்டாய் குடியேற்றக் கிராமத்துக்கான மூலத்திட்டம் (Master plan) வடக்கு மாகாண பொறியியலாளர் சங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண சபையால் படிப்படியாக நிதி ஒதுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கல்லுண்டாய் குடியேற்றக் கிராமத்தில் புலம்பெயர்ந்தவர்களின் நிதிப் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட இந்திரநிலா மணிமண்டபம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் இன்று வியாழக்கிழமை காலை (09.10.2025) திறந்து வைக்கப்பட்டது. இங்கு ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில் மேலும்

கல்லுண்டாய் கிராமத்தில் புலம்பெயர்ந்தவர்களின் நிதிப் பங்களிப்பில் உருவான ‘இந்திரநிலா’ மணிமண்டபம் கௌரவ ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. Read More »

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடலாகப் பணியாற்றி 06.10.2025 அன்று மணி விழாக் கண்ட ம.கிருபாசுதன் அவர்களின் பிரிவுபசாரமும் சேவை நலன் பாராட்டு விழாவும்

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடலாகப் பணியாற்றி 06.10.2025 அன்று மணி விழாக் கண்ட ம.கிருபாசுதன் அவர்களின் பிரிவுபசாரமும் சேவை நலன் பாராட்டு விழாவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (08.10.2025) நடைபெற்றது. விழா நாயகன் அவர்தம் பாரியாருடன் விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டு, மேடை நிகழ்வுகள் நடைபெற்றன. இங்கு உரையாற்றிய ஆளுநர், திட்டமிடல் சேவையில் மூத்த –

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடலாகப் பணியாற்றி 06.10.2025 அன்று மணி விழாக் கண்ட ம.கிருபாசுதன் அவர்களின் பிரிவுபசாரமும் சேவை நலன் பாராட்டு விழாவும் Read More »

மன்னார் மாவட்ட மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது

மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு குழந்தைநல மருத்துவ விடுதி, அவசர சிகிச்சைப் பிரிவு என்பனவற்றை உள்ளடக்கியதான மருத்துவ விடுதித் தொகுதியும், மருத்துவர்களுக்கான தங்குமிடம் என்பனவும் படிப்படியாக வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் அடுத்த ஆண்டிலிருந்து அமைக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட மருத்துவமனையில் இன்று புதன்கிழமை காலை (08.10.2025) நடைபெற்றது. கடந்த ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி மன்னார் மாவட்ட

மன்னார் மாவட்ட மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது Read More »