Balasingam Kajenderan

அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க ‘1924’ என்ற ஹொட்லைன் அறிமுகம்

‘1924’ என்ற ஹொட்லைன் இலக்கத்துக்கு வேலை நாட்களில் காலை 8.30 மணியிலிருந்து பி.ப. 4.30 மணிவரையில் தொடர்பு கொள்வதன் ஊடாக நலன்புரி நன்மைகள் சபையின் ஊடான அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை எவரும் முன்வைத்த தீர்வுகளை மேற்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் ஆணையாளரும், சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் தலைவருமான ஜயந்த விஜயரட்ண தெரிவித்தார். அத்துடன் அஸ்வெசும திட்டத்தின் நடைமுறையாக்கத்தில் ஏனைய மாகாணங்களை விட வடக்கு மாகாணமே சிறப்பாகச் செயற்படுகின்றது எனவும் பாராட்டினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், […]

அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க ‘1924’ என்ற ஹொட்லைன் அறிமுகம் Read More »

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் யாழ். மாவட்டத்திலுள்ள கற்கை நிலையங்களில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு என்.வி.கியூ. சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் ஊடான சான்றிதழ் கற்கைநெறிகளை ஏனைய மாகாணங்கள் பயன்படுத்துவதைப்போன்று எமது வடக்கு மாகாணம் பயன்படுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயம். எமது மாகாணத்தைச் சேர்ந்த இளையோரும் இந்தக் கற்கைநெறிகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் யாழ். மாவட்டத்திலுள்ள கற்கை நிலையங்களில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு என்.வி.கியூ. சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம், நாச்சிமார்கோவிலடியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தில் 11.03.2025 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் யாழ். மாவட்டத்திலுள்ள கற்கை நிலையங்களில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு என்.வி.கியூ. சான்றிதழ் வழங்கும் நிகழ்வு Read More »

கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிருந்து அக்கரைவெளியிலிருந்து வரையில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதான வீதியை ஆளுநர் பார்வையிட்டார்.

கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிருந்து அக்கரைவெளியிலிருந்து வரையில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதான வீதியை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 08.03.2025 அன்று சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுகேணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் 3,000 ஏக்கர் வரையிலான வயல் நிலத்துக்கு உள்ளீடுகளையும், விளைச்சலையும் கொண்டு சென்றுவருவதற்கு பயன்படுத்தும் பிரதான வீதியாக இந்த வீதியே இருந்து வரும் நிலையில் அதைப் பயன்படுத்த முடியாத நிலைமை இருப்பதாக விவசாயிகள் ஆளுநருக்கு இதன்போது சுட்டிக்காட்டினர்.

கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிருந்து அக்கரைவெளியிலிருந்து வரையில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதான வீதியை ஆளுநர் பார்வையிட்டார். Read More »

முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தால் நடத்தப்பட்ட ‘முல்லை பிரீமியர் லீக்’ இன் இறுதி ஆட்டம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தால் நடத்தப்பட்ட ‘முல்லை பிரீமியர் லீக்’ இன் இறுதி ஆட்டம் நேற்று சனிக்கிழமை (08.03.2025) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. மருத்துவர் க.உதயசீலன் தலைமையில் இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் ஆர்.விஜயகுமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். இங்கு உரையாற்றிய ஆளுநர், எங்கு ஆர்வம் – விருப்பம் இருக்கின்றதோ அங்கு வெற்றி – முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுக் கழகமாக

முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தால் நடத்தப்பட்ட ‘முல்லை பிரீமியர் லீக்’ இன் இறுதி ஆட்டம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. Read More »

சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் பன்னாட்டு மகளிர் தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது

கிளிநொச்சி மாவட்டத்தில் நான் மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் இங்கிருந்த பெண்கள் அமைப்புக்கள்தான் பல திட்டங்களை வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் செயற்படுத்தியிருந்தன. நியாப் திட்டத்தின் கீழான கடன் வழங்கலாக இருந்தாலும் சரி எந்தவொரு விடயமாக இருந்தாலும் சரி பெண்கள் தலைமைத்துவத்தை ஆளுமையாக வழங்கி அதைச் செய்திருந்தார்கள். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பெருமையுடன் குறிப்பிட்டார். சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் பன்னாட்டு மகளிர் தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (08.03.2025) நடைபெற்றது.

சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் பன்னாட்டு மகளிர் தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது Read More »

செயற்கை உரப் பாவனையைக் குறைத்து இயற்கைப் பசளைகளை அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவேண்டும் – வட மாகாண ஆளுநர்

செயற்கை உரப் பாவனையைக் குறைத்து இயற்கைப் பசளைகளை அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவேண்டும். மண் இல்லாது போனால் – மண் வளம் குன்றிப்போனால் விளைச்சல் இல்லாதுபோய்விடும். எனவே எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு விவசாயிகள் குறைந்த செலவில், கூடிய விளைச்சலைப் பெற்றுக்கொள்ளும் பயிரினங்களை நடுகை செய்யவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண சிறுபோக பயிரச்செய்கையில் நவீன முறைகளைப் பயன்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (08.03.2025)

செயற்கை உரப் பாவனையைக் குறைத்து இயற்கைப் பசளைகளை அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவேண்டும் – வட மாகாண ஆளுநர் Read More »

காங்கேசன்துறையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள சிமெந்து தொழிற்சாலையை அமைச்சர்களுடன் இணைந்து ஆளுநர் பார்வையிட்டார்

காங்கேசன்துறையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள சிமெந்து தொழிற்சாலையை கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை கௌரவ அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள், கடற்றொழில் கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள், நிதி மற்றும் திட்டமிடல் கௌரவ பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோருடன் இணைந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (07.03.2025) காலை நேரில் சென்று பார்வையிட்டனர். 1990ஆம் ஆண்டு வரையில் இயங்கிய

காங்கேசன்துறையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள சிமெந்து தொழிற்சாலையை அமைச்சர்களுடன் இணைந்து ஆளுநர் பார்வையிட்டார் Read More »

சாவல்கட்டு மகாத்மா சனசமூக நிலையத்தின் 75ஆவது ஆண்டு பவளவிழா நிகழ்வில் வட மாகாண ஆளுநர் கலந்து கொண்டார்

சுயநலமாகச் சிந்திக்காது, கிராமத்தின் அபிவிருத்தியில் முனைப்போடு உங்கள் முன்னோர்கள் செயற்பட்டமையால்தான் இன்று இந்தச் சாவல்கட்டு கிராமம் வளர்ச்சியடைந்திருக்கின்றது. உங்கள் கிராமத்தின் ஒற்றுமை என்றென்றும் தொடரவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். சாவல்கட்டு மகாத்மா சனசமூக நிலையத்தின் 75ஆவது ஆண்டு பவளவிழா நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை மாலை (07.03.2025) நடைபெற்றன. ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் சனசமூக நிலைய முன்றலில் பவளவிழா நினைவைக் குறிக்கும் வகையில் ‘கேக்’ வெட்டிய பின்னர் பாண்ட் வாத்திய இசையுடன்

சாவல்கட்டு மகாத்மா சனசமூக நிலையத்தின் 75ஆவது ஆண்டு பவளவிழா நிகழ்வில் வட மாகாண ஆளுநர் கலந்து கொண்டார் Read More »

தெற்கு முதல் வடக்கு வரையுள்ள விகாரைகளுக்கு 5 நாடுகளின் தேரர்கள் பாதயாத்திரை

அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம முதல் நயினாதீவு நாகதீப விகாரை வரையில் 5 நாடுகளின் தேரர்கள் இணைந்து பாதயாத்திரை முன்னெடுத்துள்ளனர். இதில் பங்கேற்றுள்ள 50 தேரர்கள் 07.03.2025 அன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு வருகைதந்தனர். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தேரர்களை வரவேற்றார். தாய்லாந்து, மியான்மார், லாகோஸ், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த தேரர்களே இந்தப் பாதயாத்திரையில் இணைந்துள்ளனர்.

தெற்கு முதல் வடக்கு வரையுள்ள விகாரைகளுக்கு 5 நாடுகளின் தேரர்கள் பாதயாத்திரை Read More »

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்திய சர்வதேச மகளிர் தின விழா – 2025

பெண்களுக்கு எதிரான துர்நடத்தைகளில் ஈடுபடுபவர்களும், வன்முறைகளில் ஈடுபடுபவர்களும் சட்டத்தின் பிடியிலிருந்தும், மேலதிகாரிகளின் உதவிகளுடன் தப்பிக்கும் நிலைமையும் காணப்படுகின்றது. பெண்களுக்கு எதிரான இத்தகைய செயற்பாடுகளை இல்லதொழிக்க அனைவரும் ஓரணியில் கைகோர்த்து குரல் எழுப்பவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அழைப்புவிடுத்தார். வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்திய சர்வதேச மகளிர் தின விழா – 2025, சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் அமைச்சின் செயலர் பொ.வாகீசன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (07.03.2025) நடைபெற்றது.

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்திய சர்வதேச மகளிர் தின விழா – 2025 Read More »