Balasingam Kajenderan

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால், கல்விமாணிப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விமாணி பட்டதாரிகள் 13 பேருக்கு, கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களால் 08/07/2024 அன்று  ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு  மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தாம் கற்றுக்கொண்ட நுட்பங்களை பாடசாலைகளில் பயன்படுத்தி, கற்பித்தல் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இதன்போது கௌரவ ஆளுநர் தெரிவித்தார். அதனூடாக கல்வித் தரத்தை பேணுவதுடன், மாணவர்கள் இலகுவாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான […]

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால், கல்விமாணிப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் Read More »

மாகாணங்களுக்கு இடையேயான உத்தியோகத்தர்களின் இயலளவை மேம்படுத்தும் செயற்திட்டம்

இலங்கையிலுள்ள 9 மகாணங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்களின் இயலளவை  மேம்படுத்தும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக மாகாணங்களுக்கு இடையே புதிய விடயங்களை அறிந்து கொள்ளும் கள விஜயங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வடமாகாணத்தை சேர்ந்த பல அலுவலகங்களும் இவ்வாறான விஜயங்களை மேற்கொண்டு வருகின்றது. வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அலுவலகங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களின் இயலளவை அதிகரிப்பதற்கான தேவை காலத்தின் கட்டாயம் ஆகும். ஏனென்றால் நிறுவனங்களின் வினைத்திறனான செயற்பாடுகள் தொடர்பில் ஆண்டுகள் தோறும் மேற்கொள்ளப்படும் அரச கணக்குகள் குழுவின் மதிப்பீடு, உற்பத்தித்திறன்

மாகாணங்களுக்கு இடையேயான உத்தியோகத்தர்களின் இயலளவை மேம்படுத்தும் செயற்திட்டம் Read More »

அமரர் இரா. சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு, வடக்கு மாகாண ஆளுநர் அஞ்சலி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்  அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணம், தந்தை செல்வா அரங்கில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தியதுடன், அவரின் உருவப்படத்திற்கும் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். அமரர் இரா.சம்பந்தன் அவர்களின் உறவினருடன், கௌரவ ஆளுநர் அவர்கள் தனது அனுதாபங்களையும்   பகிர்ந்துக்கொண்டார்.

அமரர் இரா. சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு, வடக்கு மாகாண ஆளுநர் அஞ்சலி Read More »

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறுவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில், கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு  இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், நன்னடத்தை மற்றும் சிறுவர்  பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லம் தொடர்பிலும் அபயம் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்தது. அபயம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறுவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுனரால் மூன்று புதியநியமனங்கள் இன்று வழங்கி வைப்பு

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (03/07/2024) வழங்கிவைத்தார். வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சி.சுஜீவா அவர்களும், வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி கு.காஞ்சனா அவர்களும், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) திருமதி.அ.யோ.எழிலரசி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான

வடக்கு மாகாண கௌரவ ஆளுனரால் மூன்று புதியநியமனங்கள் இன்று வழங்கி வைப்பு Read More »

மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆடித் திருவிழாவில்வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் கலந்துக்கொண்டார்

மன்னார் மருதமடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா இன்று நடைபெற்றது. மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைவதையொட்டி இன்று மீண்டும் அன்னைக்கு முடி  சூட்டப்பட்டது. கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின்  தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து மருதமடு அன்னையின் திருச்சொரூப பவனியும் நடைபெற்றது. இன்றைய திருவிழாவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் கலந்துக் கொண்டார். நாட்டின் அனைத்து மறைமாவட்ட ஆயர்களும், இலட்சக்கணக்கான பக்தர்களும் மடு

மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆடித் திருவிழாவில்வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் கலந்துக்கொண்டார் Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர், காலஞ்சென்ற இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கான இரங்கல் செய்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவரும், சிரேஷ்ட அரசியல்வாதியும், சட்டத்தரணியுமாகிய திருவாளர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து கவலை அடைகின்றேன். சுமார் ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றில் மிக நீண்ட காலம்  தமிழ் மக்களின் உரிமைக் குரலாக இலங்கை பாராளுமன்றத்தை  பிரதிநிதித்துவம் செய்ததுடன், தமிழ் மக்களின் உரிமைக்காக சர்வதேச ரீதியிலும் செயற்பட்ட தலைவராக காலம் சென்ற இரா. சம்பந்தன் அவர்கள் காணப்படுகின்றார். இன ஐக்கியம், ஒருமைப்பாடு, நல்லிணக்கம் என்பவற்றின் அடிப்படையில் நாட்டு மக்களின்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர், காலஞ்சென்ற இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கான இரங்கல் செய்தி Read More »

வடக்கின் மீள்எழுச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும்என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய (JICA) தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கும் ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையத்தின் தொண்டர்களை வரவழைத்து முன்னெடுக்கவுள்ள திட்டங்களை கௌரவ ஆளுநருக்கு தெளிவுப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.பிரணவநாதன் அவர்களும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டார். பாரிய அழிவிலிருந்து ஜப்பான் மீண்டெழுந்து வர காரணமாகிய அறிவு , வடக்கின் மீள்

வடக்கின் மீள்எழுச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும்என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடக்கைபொருளாதாரத்தில் வலுவடைந்த மாகாணமாக மாற்றுவது ஜனாதிபதியின் இலக்காக உள்ளதெனவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான குலசிங்கம் திலீபன் ஆகியோரின் தலைமையில்  27/06/2024 நேற்று நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய கௌரவ ஆளுநர், மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கு அமைய வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்தார். தொழில் அற்றோர் பிரச்சினைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்வு திட்டங்கள் தொடர்பிலும், வாழ்வாதார உதவி திட்டங்கள் தொடர்பிலும் குறிப்பிட்டார். ஏனைய மாகாணங்களை போல வடக்கையும் பொருளாதாரத்தில் மேம்பட்ட மாகாணமாக மாற்றுவதே

வடக்கைபொருளாதாரத்தில் வலுவடைந்த மாகாணமாக மாற்றுவது ஜனாதிபதியின் இலக்காக உள்ளதெனவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும்,கௌரவ ஆளுநருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு

இலங்கை கடற்படையின் வடக்கு பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அத்மிரல் ரோஹித்த அபேசிங்க, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, ஆளுநர் செயலகத்தில் இன்று (26/06/2024) சிநேகபூர்வ ரீதியாக சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். யாழ் குடாநாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும், தீவு பகுதி மக்களுக்கான மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும்,கௌரவ ஆளுநருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு Read More »