Balasingam Kajenderan

இயந்திர நெல் நாற்று நடுகை அறுவடை வயல் விழா

 மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மாதோட்டம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் உயிர்த்தரசன்குளம் எனும் பிரதேசத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழான இயந்திர நாற்று நடுகை முறை மூலமான நெல் அறுவடை வயல் விழாவானது  01.04.2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மாதோட்டம் விவசாயப் போதனாசிரியர் திரு.சி.ரமேஸ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி. பிரியதர்சினி றமணேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக உதவி விவசாயப்பணிப்பாளர் திரு.து.மேர்வின் றொசான் றோச் அவர்களும் […]

இயந்திர நெல் நாற்று நடுகை அறுவடை வயல் விழா Read More »

வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் செலவு செய்வது தொடர்பாக விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் செலவு செய்வது தொடர்பாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோருக்கும், வடக்கு மாகாண பிரதம செயலாளர் தலைமையிலான மாகாண திணைக்களத் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 03.04.2025 அன்று புதன்கிழமை இடம்பெற்றது. வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்வதில் உள்ள

வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் செலவு செய்வது தொடர்பாக விசேட கலந்துரையாடல் Read More »

யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

வறுமை, பெற்றோர் மறுமணம் ஆகியவற்றால் சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதிகோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாகவும், இது புதியதொரு சவாலாக மாறியுள்ளதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (02.04.2025) சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது ஆளுநரிடம், யுனிசெப் அமைப்பு முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பாகவும்

யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறையாக்கத்தை நேரடியாகச் சென்று திணைக்களத் தலைவர்கள் பார்வையிடவேண்டும் !!

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறையாக்கத்தை நேரடியாகச் சென்று திணைக்களத் தலைவர்கள் பார்வையிடவேண்டும் என்பதுடன் ஆகக்குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது திட்டமுன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தை செயலாளர்கள் நடத்தவேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மீளாய்வுக் கூட்டம் 01.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. ஆரம்பத்தில் உரையாற்றிய ஆளுநர், தூய்மையான இலங்கை செயற்றிட்டம் எமது மாகாணத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தை

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறையாக்கத்தை நேரடியாகச் சென்று திணைக்களத் தலைவர்கள் பார்வையிடவேண்டும் !! Read More »

உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த பொருளாதார அபிவிருத்தி மேம்பாட்டுக்கு உலக வங்கி உதவும்முகமாக கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளமைக்கு உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் 01.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. போரால் வடக்கு மாகாணம் கடந்த 3 தசாப்தங்களாக பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஆளுநர், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் எனவும்

உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.

புனித ரமழான் மாதத்தின் நிறைவை குறிக்கும் நோன்புப் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் இந்நாளில், வடக்கு மாகாண மக்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரமழான் மாதம் முழுவதும் நீங்கள் கடைப்பிடித்த நோன்பும், பக்தியும், இரக்கமும், சமூக ஒற்றுமையையும் விளக்குகிறது. இத்தகைய நேரம் பகிர்ந்தளிக்கவும், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும் ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைகிறது. நாம் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி, சகோதரத்துவம், மனிதாபிமானம் ஆகியவற்றை பேணிச் செலுத்தி, ஒற்றுமையுடனும்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி. Read More »

அனலைதீவு பிரதேச மருத்துவமனையில் கடற்படையின் பங்களிப்புடன் மறுசீரமைக்கப்பட்ட மருத்துவர் விடுதி திறப்பு விழாவும், விரிவுபடுத்தப்பட்ட சுகாதாரசேவை அறிமுக நிகழ்வும்

வடமராட்சியில் கடமையாற்றும் அரசாங்க அலுவலர் ஒருவரை புத்தூருக்கு இடமாற்றம் செய்தாலே, அந்த இடமாற்றத்தை ஏற்கமறுக்கின்ற நிலையில், கண்டியிலிருந்து இந்த அனலைதீவுக்கு வந்து தங்கியிருந்து சேவையாற்றி இந்தவூர் மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள மருத்துவ அதிகாரி நுவனி உண்மையில் பாராட்டுக்குரியவர்தான். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அனலைதீவு பிரதேச மருத்துவமனையில், மத்திய சுகாதார அமைச்சின் 6.3 மில்லியன் ரூபா நிதியில், கடற்படையின் பங்களிப்புடன் மறுசீரமைக்கப்பட்ட மருத்துவர் விடுதி திறப்பு விழாவும், விரிவுபடுத்தப்பட்ட சுகாதாரசேவை அறிமுக

அனலைதீவு பிரதேச மருத்துவமனையில் கடற்படையின் பங்களிப்புடன் மறுசீரமைக்கப்பட்ட மருத்துவர் விடுதி திறப்பு விழாவும், விரிவுபடுத்தப்பட்ட சுகாதாரசேவை அறிமுக நிகழ்வும் Read More »

சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் உரியமுறையில் அறிவியுங்கள்.நடவடிக்கை எடுக்கிறோம் என பொலிஸார் ஆளுநரின் கூட்டத்தில் தெரிவிப்பு.

• சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் உரியமுறையில் அறிவியுங்கள். கழிவுகளை முறையற்ற வகையில் கொட்டுவோரை அடையாளப்படுத்துங்கள். நடவடிக்கை எடுக்கிறோம் என பொலிஸார் ஆளுநரின் கூட்டத்தில் தெரிவிப்பு. • விடுமுறை நாள்களில் நெரிசலான இடங்களில் பொலிஸாரின் கண்காணிப்பு இருக்கும்.வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை (29.03.2025) இடம்பெற்றது. இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன. உள்ளூராட்சி மன்றங்களின்

சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் உரியமுறையில் அறிவியுங்கள்.நடவடிக்கை எடுக்கிறோம் என பொலிஸார் ஆளுநரின் கூட்டத்தில் தெரிவிப்பு. Read More »

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப்போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது – வடக்கு மாகாண ஆளுநர்

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப்போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதன் ஊடாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளையோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளதுடன் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பும் அதிகரிக்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலையில், மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (29.03.2025) இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும்

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப்போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை

முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இந்த ஆண்டு மாகாண விசேட குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ், 50% மானிய அடிப்படையில் திட்டங்களை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்காக 14 திட்டங்களை அடையாளப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் பயனடைய விரும்பும் பண்ணையாளர்கள் தமது பிரதேச கால்நடை வைத்திய அலுவலகங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். புல் வளர்ப்பு

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை Read More »