Balasingam Kajenderan

அனலைதீவு பிரதேச மருத்துவமனையில் கடற்படையின் பங்களிப்புடன் மறுசீரமைக்கப்பட்ட மருத்துவர் விடுதி திறப்பு விழாவும், விரிவுபடுத்தப்பட்ட சுகாதாரசேவை அறிமுக நிகழ்வும்

வடமராட்சியில் கடமையாற்றும் அரசாங்க அலுவலர் ஒருவரை புத்தூருக்கு இடமாற்றம் செய்தாலே, அந்த இடமாற்றத்தை ஏற்கமறுக்கின்ற நிலையில், கண்டியிலிருந்து இந்த அனலைதீவுக்கு வந்து தங்கியிருந்து சேவையாற்றி இந்தவூர் மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள மருத்துவ அதிகாரி நுவனி உண்மையில் பாராட்டுக்குரியவர்தான். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அனலைதீவு பிரதேச மருத்துவமனையில், மத்திய சுகாதார அமைச்சின் 6.3 மில்லியன் ரூபா நிதியில், கடற்படையின் பங்களிப்புடன் மறுசீரமைக்கப்பட்ட மருத்துவர் விடுதி திறப்பு விழாவும், விரிவுபடுத்தப்பட்ட சுகாதாரசேவை அறிமுக […]

அனலைதீவு பிரதேச மருத்துவமனையில் கடற்படையின் பங்களிப்புடன் மறுசீரமைக்கப்பட்ட மருத்துவர் விடுதி திறப்பு விழாவும், விரிவுபடுத்தப்பட்ட சுகாதாரசேவை அறிமுக நிகழ்வும் Read More »

சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் உரியமுறையில் அறிவியுங்கள்.நடவடிக்கை எடுக்கிறோம் என பொலிஸார் ஆளுநரின் கூட்டத்தில் தெரிவிப்பு.

• சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் உரியமுறையில் அறிவியுங்கள். கழிவுகளை முறையற்ற வகையில் கொட்டுவோரை அடையாளப்படுத்துங்கள். நடவடிக்கை எடுக்கிறோம் என பொலிஸார் ஆளுநரின் கூட்டத்தில் தெரிவிப்பு. • விடுமுறை நாள்களில் நெரிசலான இடங்களில் பொலிஸாரின் கண்காணிப்பு இருக்கும்.வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை (29.03.2025) இடம்பெற்றது. இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன. உள்ளூராட்சி மன்றங்களின்

சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் உரியமுறையில் அறிவியுங்கள்.நடவடிக்கை எடுக்கிறோம் என பொலிஸார் ஆளுநரின் கூட்டத்தில் தெரிவிப்பு. Read More »

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப்போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது – வடக்கு மாகாண ஆளுநர்

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப்போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. இதன் ஊடாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளையோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளதுடன் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பும் அதிகரிக்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலையில், மேசை உப்பு உற்பத்தியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (29.03.2025) இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும்

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப்போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை

முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இந்த ஆண்டு மாகாண விசேட குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ், 50% மானிய அடிப்படையில் திட்டங்களை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்காக 14 திட்டங்களை அடையாளப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் பயனடைய விரும்பும் பண்ணையாளர்கள் தமது பிரதேச கால்நடை வைத்திய அலுவலகங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். புல் வளர்ப்பு

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை Read More »

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகரன் தலைமையில் 28.03.2025 அன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது . இந்தக் கூட்டத்துக்கு, கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் அழைப்பின்பேரில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டார். கூட்டத்தின் ஆரம்பத்தில் வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலர், உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரால் நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன் பின்னர்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது Read More »

தூய சக்தி மற்றும் சுகாதார பயன்பாடுகளுக்கான அதுநுட்ப ‘நனோ’ (நுண்ணணு தொழில்நுட்பம்) திரவியங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு – 2025

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் வட மாகாணத்தின் வளர்ச்சி தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். அதற்கான சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவதில் கல்வித்துறை, தொழில்துறை மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இந்த சர்வதேச மாநாடு ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புக்கான ஒரு முக்கிய தளமாக அமையும் என்றும் வாழ்த்தினார். தூய சக்தி மற்றும் சுகாதார பயன்பாடுகளுக்கான அதுநுட்ப ‘நனோ’ (நுண்ணணு தொழில்நுட்பம்) திரவியங்கள் மற்றும்

தூய சக்தி மற்றும் சுகாதார பயன்பாடுகளுக்கான அதுநுட்ப ‘நனோ’ (நுண்ணணு தொழில்நுட்பம்) திரவியங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு – 2025 Read More »

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் 26.03.2025 அன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரனின் அழைப்புக்கு அமைவாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார். கூட்டத்தில் தலைமையுரையாற்றிய பிரதி அமைச்சர், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவுசெய்யுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்தார். கடந்த மாவட்ட

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது Read More »

வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோருவது என ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு, அடுத்த மாதம் 9ஆம் திகதி (09.04.2025) நடைபெறவுள்ள உயர்மட்டக் கலந்துரையாடலில் கோருவது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் 25.03.2025 அன்று செவ்வாய்க் கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வடக்கு மாகாணத்தில் மீள்குடியமர்வு, அபிவிருத்தி, விவசாயம், சுற்றுலாத்துறை என எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ள முடியாதளவுக்கு வனவளத் திணைக்களம் மற்றும்

வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோருவது என ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. Read More »

இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் ரமலான் அன்பளிப்புக்களை இஸ்லாமிய சகோதரர்களுக்கு வழங்கும் நிகழ்வு

இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் ரமலான் அன்பளிப்புக்களை இஸ்லாமிய சகோதரர்களுக்கு வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் 25.03.2025 அன்று செவ்வாய்க்கிழமை துணைத்தூதுவர் மாண்புமிகு சாய்முரளி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டு, அன்பளிப்புக்களை மக்களுக்கு அவர் வழங்கி வைத்தார்.    

இந்திய அரசாங்கத்தினதும், இந்திய மக்களினதும் ரமலான் அன்பளிப்புக்களை இஸ்லாமிய சகோதரர்களுக்கு வழங்கும் நிகழ்வு Read More »

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கடற்றொழில் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகரன் தலைமையில் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25.03.2025) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் அழைப்புக்கு அமைவாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அமைச்சர் சந்திரசேகரன், அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக நிறைவுசெய்யுமாறு

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது Read More »