Balasingam Kajenderan

வடக்கு மாகாணத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

காடுகளை அழிப்பது எங்கள் நோக்கமல்ல. காடுகளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிப்பது மற்றும் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதையே எதிர்க்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் 09.04.2025 அன்று புதன்கிழமை இடம்பெற்றது. சுற்றாடல்துறை கௌரவ பிரதி அமைச்சர் அன்ரன் ஜெயக்கொடி […]

வடக்கு மாகாணத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் Read More »

ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில்இடம்பெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கௌரவ ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடனான சந்திப்பின்போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழு தெரிவித்தது. வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் அன்று 08.04.2025 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த

ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில்இடம்பெற்றது. Read More »

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

அரசாங்கம் வடக்கில் முன்மொழிந்துள்ள 3 முதலீட்டு வலயங்களும் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதியில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இதன் ஊடாக 16,000 பேருக்கு தொழில்வாய்பை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில், இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (04.04.2025) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. மூன்று தசாப்தகால போரால் பாதிக்கப்பட்ட

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இலங்கை முதலீட்டுச் சபையினர் மற்றும் வடக்கின் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் சத்துரங்க அபயசிங்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் சத்துரங்க அபயசிங்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (04.04.2025) இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு பொருத்தமான காணிகளை அடையாளப்படுத்தி வழங்குமாறு பிரதி அமைச்சர், ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்தார். அத்துடன் வடக்கு மாகாணத்தில் மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் தொழில்கற்கைகளை நோக்கிய மாணவர்களின் ஆர்வம் தொடர்பாகவும் பிரதி அமைச்சர்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் சத்துரங்க அபயசிங்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு Read More »

இயந்திர நெல் நாற்று நடுகை அறுவடை வயல் விழா

 மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மாதோட்டம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் உயிர்த்தரசன்குளம் எனும் பிரதேசத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழான இயந்திர நாற்று நடுகை முறை மூலமான நெல் அறுவடை வயல் விழாவானது  01.04.2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மாதோட்டம் விவசாயப் போதனாசிரியர் திரு.சி.ரமேஸ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி. பிரியதர்சினி றமணேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக உதவி விவசாயப்பணிப்பாளர் திரு.து.மேர்வின் றொசான் றோச் அவர்களும்

இயந்திர நெல் நாற்று நடுகை அறுவடை வயல் விழா Read More »

வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் செலவு செய்வது தொடர்பாக விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் செலவு செய்வது தொடர்பாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோருக்கும், வடக்கு மாகாண பிரதம செயலாளர் தலைமையிலான மாகாண திணைக்களத் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 03.04.2025 அன்று புதன்கிழமை இடம்பெற்றது. வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்வதில் உள்ள

வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் செலவு செய்வது தொடர்பாக விசேட கலந்துரையாடல் Read More »

யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

வறுமை, பெற்றோர் மறுமணம் ஆகியவற்றால் சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதிகோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்வதாகவும், இது புதியதொரு சவாலாக மாறியுள்ளதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் யுனிசெப் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (02.04.2025) சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது ஆளுநரிடம், யுனிசெப் அமைப்பு முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பாகவும்

யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழு வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறையாக்கத்தை நேரடியாகச் சென்று திணைக்களத் தலைவர்கள் பார்வையிடவேண்டும் !!

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறையாக்கத்தை நேரடியாகச் சென்று திணைக்களத் தலைவர்கள் பார்வையிடவேண்டும் என்பதுடன் ஆகக்குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையாவது திட்டமுன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தை செயலாளர்கள் நடத்தவேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மீளாய்வுக் கூட்டம் 01.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. ஆரம்பத்தில் உரையாற்றிய ஆளுநர், தூய்மையான இலங்கை செயற்றிட்டம் எமது மாகாணத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தை

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறையாக்கத்தை நேரடியாகச் சென்று திணைக்களத் தலைவர்கள் பார்வையிடவேண்டும் !! Read More »

உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த பொருளாதார அபிவிருத்தி மேம்பாட்டுக்கு உலக வங்கி உதவும்முகமாக கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளமைக்கு உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் 01.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. போரால் வடக்கு மாகாணம் கடந்த 3 தசாப்தங்களாக பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஆளுநர், கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் எனவும்

உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.

புனித ரமழான் மாதத்தின் நிறைவை குறிக்கும் நோன்புப் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் இந்நாளில், வடக்கு மாகாண மக்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரமழான் மாதம் முழுவதும் நீங்கள் கடைப்பிடித்த நோன்பும், பக்தியும், இரக்கமும், சமூக ஒற்றுமையையும் விளக்குகிறது. இத்தகைய நேரம் பகிர்ந்தளிக்கவும், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும் ஒரு அரிய சந்தர்ப்பமாக அமைகிறது. நாம் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி, சகோதரத்துவம், மனிதாபிமானம் ஆகியவற்றை பேணிச் செலுத்தி, ஒற்றுமையுடனும்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி. Read More »