Balasingam Kajenderan

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டம் கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (26.09.2025) மீளவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தற்போதைய நிலையில் கால் ஏக்கர் வீதம் 30 விவசாயிகள் பயிர்ச்செய்கை செய்ய முடியும் எனவும் எதிர்காலத்தில் விவசாயிகள் முயற்சிகளைப் பொறுத்து இதனை இன்னமும் விரிவாக்க முடியும் என்றும் ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ள காணிகளையும் ஆளுநர் பார்வையிட்டார். விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைவாக, மாகாண குறித்தொதுக்கப்பட்ட […]

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டம் கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

கிளிநொச்சியில் பிணக்கின்றியுள்ள மக்களின் காணி ஆவணங்களை விரைந்து வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு ஆளுநர் பணிப்புரை

கிளிநொச்சி மாவட்டத்தில் பிணக்கின்றி ஆட்சி செய்து வருகின்ற மக்களுக்குரிய காணிகளின் ஆவணங்களை அவர்களுக்கு விரைந்து வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கான பொறிமுறையை உருவாக்குமாறும் மாகாணக் காணி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் காணி தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமும், காணி நடமாடும் சேவையும் இன்று வெள்ளிக்கிழமை (26.09.2025) மாவட்டச் செயலர் சு.முரளிதரன் தலைமையில்

கிளிநொச்சியில் பிணக்கின்றியுள்ள மக்களின் காணி ஆவணங்களை விரைந்து வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு ஆளுநர் பணிப்புரை Read More »

வடக்கு மாகாண மக்கள் நிதி அறிவில் திருப்திகரமாக இருந்தாலும், நிதி நடத்தையில் பின்தங்கியுள்ளனர் – ஆளுநர்

எமது வடக்கு மாகாண மக்கள் அறியாமையால் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்களிடம் ஏமாறும் போக்கு தொடர்ந்து இருக்கின்றது. இவ்வாறான நிலையில் இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்துள்ள நிதியல் ரீதியான அறிவூட்டும் செயற்பாடு வரவேற்கத்தக்கதும் தேவையானதுமே. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் வட பிராந்திய அலுவலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிதி அறிவியல் மாத நிகழ்வு, கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள அதன் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை

வடக்கு மாகாண மக்கள் நிதி அறிவில் திருப்திகரமாக இருந்தாலும், நிதி நடத்தையில் பின்தங்கியுள்ளனர் – ஆளுநர் Read More »

இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் தாக்க மதிப்பீடு, அடுத்த ஆண்டு நிச்சயம் மேற்கொள்ளப்பட வேண்டும் – ஆளுநர்

2026ஆம் ஆண்டுக்குரிய திட்டங்களைத் தயாரிக்கும்போது மக்களுடன் கலந்துரையாடி அதனை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தினார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை (25.09.2025) நடைபெற்றது. இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் தாக்க மதிப்பீடு அடுத்த ஆண்டு நிச்சயம் மேற்கொள்ளப்பட

இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் தாக்க மதிப்பீடு, அடுத்த ஆண்டு நிச்சயம் மேற்கொள்ளப்பட வேண்டும் – ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) நியமனம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி ஆக என்.எஸ்.ஆர்.சிவரூபன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (25.09.2025) அவர் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) நியமனம் Read More »

மாங்குளம் மத்திய பேருந்து நிலையத்தை செயற்படுத்துவது தொடர்பில் ஆளுநர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் களவிஜயம் மேற்கொண்டனர்

மாங்குளம் நகரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையத்தை செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் களப்பயணமும் கலந்துரையாடலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று புதன்கிழமை (24.09.2025) நடைபெற்றது. மத்திய பேருந்து நிலையத்தை ஆளுநர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர். மத்திய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்வதற்கான ஒழுங்குகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆராயப்பட்டது. அதற்கான சாத்தியமான வழிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாங்குளத்திலுள்ள வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்தின் தலைமை

மாங்குளம் மத்திய பேருந்து நிலையத்தை செயற்படுத்துவது தொடர்பில் ஆளுநர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் களவிஜயம் மேற்கொண்டனர் Read More »

கிளிநொச்சி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள பெண்நோயியல் விடுதியின் சேவைக்கான பகுதி கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் பராமரிப்பு சிறப்பு மையம் தொடர்பில் தேவையற்ற வதந்திகள் பரப்படுகின்றன. இந்த மருத்துவமனையை முழு வீச்சில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட பொதுமருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் பராமரிப்பு சிறப்பு மையத்தின் பெண்நோயியல் விடுதியின் சேவைக்கான

கிளிநொச்சி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள பெண்நோயியல் விடுதியின் சேவைக்கான பகுதி கௌரவ ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடிநீர் விநியோகத் திட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடிநீர் விநியோகத் திட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (23.09.2025) நடைபெற்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் யாழ். மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத் திட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. திட்டத்தின் சில தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. எதிர்காலத்தில் யாழ்ப்பாண நகரத்தின் கழிவுநீர் முகாமைத்துவம் தொடர்பான திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் குடிநீர் விநியோகத் திட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் Read More »

அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழுவுக்கும் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தின் நிலைத்த நீடித்த அபிவிருத்திக்காக முதலீட்டாளர்களை வரவேற்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களுக்குப் பொறுப்பான செயலர் அந்தோனி பெர்னார்ட்டிடம் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (23.09.2025) அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழுவுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக வந்துள்ளதாகவும், பல தரப்பினரையும் சந்தித்துள்ளதாகவும் அமெரிக்கத் தூதரகத்தின் செயலர்

அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழுவுக்கும் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. Read More »

ஆசிரியர்கள் ஓய்வுபெற்று ஒரு மாதத்துககுள் ஓய்வூதியம் கிடைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்ய வேண்டும் – கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார்

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் இலங்கை அதிபர் சேவைச் சங்கம் என்பனவற்றுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை (22.09.2025) நடைபெற்றது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகளை இன்னும் விரைவாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதேவேளை, ஒழுக்காற்று விசாரணைகளும் அதிகரித்துச் செல்வதாகவும் கல்வி அமைச்சின் செயலரால் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், வலய இடமாற்றச் சபையில் இருக்கும் தொழிற்சங்கத்தின் அதே பிரதிநிதி மேன்முறையீட்டுச்

ஆசிரியர்கள் ஓய்வுபெற்று ஒரு மாதத்துககுள் ஓய்வூதியம் கிடைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்ய வேண்டும் – கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினார் Read More »