Balasingam Kajenderan

‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ தேசிய வேலைத் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.

நடத்தை மற்றும் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டை சிறந்த தலைமைத்துவப்பண்புள்ளவர்கள் ஆட்சி செய்யவேண்டும் என்பதற்காக மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாகவே ‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் ‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ (NEXTGEN LEADERS) தேசிய வேலைத் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இன்று வியாழக்கிழமை காலை […]

‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ தேசிய வேலைத் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் நடைபெற்றது. Read More »

கௌரவ ஆளுநருக்கு TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை (29.10.2025) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. தாராளமாக மூலப்பொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளமை மற்றும் உற்பத்திச் செலவு மிகக்குறைவாக உள்ளமை ஆகியன காரணமாக உலக சந்தையில் இதற்கான கேள்வி அதிகம் உள்ளமையையும் ஆளுநருக்கு குறிப்பிட்ட கண்டுபிடிப்பாளர் விக்டர்,

கௌரவ ஆளுநருக்கு TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது Read More »

வடக்கு மாகாண கால்நடை மருத்துவர்கள் மற்றும் நீர்பாசனப் பொறியியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாண கால்நடை மருத்துவர்கள் மற்றும் நீர்பாசனப் பொறியியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28.10.2025) நடைபெற்றது. கால்நடை மருத்துவர்களுடனான சந்திப்பில் முதலில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம், மீன்பிடி ஆகியனவற்றுக்கு அடுத்த நிலையில் கால்நடை வளர்ப்பு உள்ளது. கால்நடைகளை நம்பித்தான் பல குடும்பங்களின் வாழ்வாதாரமும் உள்ளது. அந்தக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தில்

வடக்கு மாகாண கால்நடை மருத்துவர்கள் மற்றும் நீர்பாசனப் பொறியியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் Read More »

தேசிய ரீதியில் சாதித்த வீரர்களுக்கு பணப் பரிசு வழங்குவதற்கும், கடந்த காலங்களில் நடைபெற்ற வர்ண இரவு விருது வழங்கலை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய ரீதியில் சாதித்த வீரர்களுக்கு பணப் பரிசு வழங்குவதற்கும், கடந்த காலங்களில் நடைபெற்ற வர்ண இரவு விருது வழங்கலை மீள ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவை செயற்படுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார். வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் மாவட்ட, பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள், வடக்கு மாகாண உடற்கல்வி

தேசிய ரீதியில் சாதித்த வீரர்களுக்கு பணப் பரிசு வழங்குவதற்கும், கடந்த காலங்களில் நடைபெற்ற வர்ண இரவு விருது வழங்கலை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் Read More »

தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முதலீட்டுக்கான சூழல் கனிந்துள்ளது. இதை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாட்டை தொடர்புடைய அரச திணைக்களங்களின் ஆதரவுடன் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கு த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை (The Management Club of Sri Lanka) தீர்மானித்துள்ளது. அதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு அதிகாரிகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில், பிரதம செயலாளர், வடக்கின் அனைத்து மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள், பிரதேச செயலர்களின் பங்குபற்றுதலுடன் த மனேஜ்ட்மன்ட் க்ளப்பினருடன் ஆளுநர் செயலகத்தில்

தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முதலீட்டுக்கான சூழல் கனிந்துள்ளது. இதை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »

பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை என்றபோதும் எங்களுக்குரிய தனித்துவங்களை கைவிட முடியாது. – கௌரவ ஆளுநர்

அடுத்த தலைமுறைக்கு எமது தனித்துவமான பண்பாடு, கலாசாரத்தைக் கையளிப்பதற்று இவ்வாறான பண்பாட்டுப் பெருவிழாக்கள் தேவையாக இருக்கின்றன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டுப் பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை (24.10.2025), கிளிநொச்சி மாவட்டச் செயலரும், மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான சு.முரளிதரன் தலைமையில், இரனைமடு தாமரைத் தடாகம் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம

பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை என்றபோதும் எங்களுக்குரிய தனித்துவங்களை கைவிட முடியாது. – கௌரவ ஆளுநர் Read More »

‘விடியல்’ நூலின் வெளியீட்டு விழா யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறுகிய காலத்துக்குள் செல்வந்தராகவேண்டும் என்பதற்காக உயிர்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் சமூகம் தொடர்பில் சிந்திப்பதில்லை. அதேநேரம், உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களையும் அச்சுறுத்தியிருக்கின்றனர். இந்த அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து சமூகம் எப்படியாவது போகட்டும் என்று ஒதுங்கியிருக்க முடியாது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகமும் மாற்றம் அறக்கட்டளையும் இணைந்து, அருட்கலாநிதி டேவிட் வின்சன் பற்றிக் அவர்கள் எழுதிய ‘விடியல்’ நூலின் வெளியீட்டு விழா யாழ். மாவட்டச்

‘விடியல்’ நூலின் வெளியீட்டு விழா யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. Read More »

முதியோர்கள்தான் எங்களின் வழிகாட்டிகள். இன்றைய இளையதலைமுறை முதியோரின் அறிவுரைகளைக் கேட்பதற்குக் கூடத் தயாராக இல்லை. – கௌரவ ஆளுநர்

இன்றைய இளம் சமுதாயம் முதியோரை தங்கள் தேவைக்குப் பயன்படுத்திய பின்னர் அவர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சென்று விடும் போக்குத்தான் இப்போது இங்கு அதிகரித்து வருகின்றது. அதனால்தான் முதியோர் இல்லங்கள் உருவாகிக்கொண்டு செல்கின்றன. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி சிவநகர் கிராம மூத்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை (23.10.2025) சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர்

முதியோர்கள்தான் எங்களின் வழிகாட்டிகள். இன்றைய இளையதலைமுறை முதியோரின் அறிவுரைகளைக் கேட்பதற்குக் கூடத் தயாராக இல்லை. – கௌரவ ஆளுநர் Read More »

உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாகச் செயற்பட்டால்தான் மக்களின் தேவைகளை முழுமைப்படுத்த முடியும். – கௌரவ ஆளுநர்

மாகாணசபைகள் சார்பில் மக்களோடு நேரடியாகத் தொடர்புபட்டு பணியாற்றும் நிறுவனங்கள் உள்ளூராட்சி மன்றங்களே. அந்த மன்றங்களின் சேவைகளை மக்களிடத்தே முன்கொண்டு செல்லவேண்டிய பொறுப்பும் அவற்றை விரைந்து சேவை செய்யும் நிறுவனங்களாக மாற்றும் பொறுப்பு உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களையே சாரும். அவர்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள்

உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாகச் செயற்பட்டால்தான் மக்களின் தேவைகளை முழுமைப்படுத்த முடியும். – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும் நேர முகாமைத்துவம் பின்பற்றப்பட வேண்டும் – கௌரவ ஆளுநர்

தனியே யாழ்ப்பாண மாவட்டம் மாத்திரம் வடக்கு மாகாணம் அல்ல. ஆளணிகள் முழுவதையும் யாழ்ப்பாணத்தில் வைத்திருக்க முடியாது. ஏனைய 4 மாவட்டங்களுக்கும் யாழ். மாவட்டத்திலிருந்தே ஆளணிகளைப் பங்கீடு செய்யவேண்டியுள்ளது. அந்தப் பங்கீட்டை உரியவாறு முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை மாலை (22.10.2025) நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், 2026ஆம் ஆண்டுக்கான

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும் நேர முகாமைத்துவம் பின்பற்றப்பட வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »