Balasingam Kajenderan

தனிநபர் ஒவ்வொருவரிலிருந்தும் மாற்றம் ஆரம்பிக்கப்படவேண்டும். இதுவே ‘தூய்மை இலங்கை’ என்ற திட்டத்தின் அடிநாதமாகும் – கௌரவ ஆளுநர்

சட்டத்தை மதிக்கின்ற சமூகமாக நாங்கள் மாறவேண்டும். தனிநபர் ஒவ்வொருவரிலிருந்தும் மாற்றம் ஆரம்பிக்கப்படவேண்டும். அதுவே ‘தூய்மை இலங்கை’ என்ற திட்டத்தின் அடிநாதமாக இருக்கின்றது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘தூய்மை இலங்கை’ (Clean Srilanka) எண்ணக் கருவை ஊக்குவிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் – நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவுடன் இணைந்ததாக ‘இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு’ என்ற தொனிப்பொருளில் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக ஜனாதிபதி செயலகம், வடக்கு […]

தனிநபர் ஒவ்வொருவரிலிருந்தும் மாற்றம் ஆரம்பிக்கப்படவேண்டும். இதுவே ‘தூய்மை இலங்கை’ என்ற திட்டத்தின் அடிநாதமாகும் – கௌரவ ஆளுநர் Read More »

‘தூய்மை இலங்கை’ என்ற எண்ணக் கருவின் கீழ், ‘இதயபூர்வமாக யாழ்ப்பாணத்துக்கு’ என்ற தொனிப்பொருளில், விழிப்புணர்வுச் செயலமர்வு வடக்கு மாகாண பேரவைச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

‘தூய்மை இலங்கை’ (Clean Srilanka) என்ற எண்ணக் கருவை ஊக்குவிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் – நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவுடன் இணைந்ததாக ‘இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு’ என்ற தொனிப்பொருளில் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு கைதடியிலுள்ள வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை (14.08.2025) நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர்

‘தூய்மை இலங்கை’ என்ற எண்ணக் கருவின் கீழ், ‘இதயபூர்வமாக யாழ்ப்பாணத்துக்கு’ என்ற தொனிப்பொருளில், விழிப்புணர்வுச் செயலமர்வு வடக்கு மாகாண பேரவைச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. Read More »

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் வசித்து வந்தோருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் 53 ஆண்டுகளாக, காணி உறுதியில்லாமல் வாழ்ந்து வந்த மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் காலத்தில் விடிவு கிடைத்துள்ளது. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு முதல் முறையாக இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் வசித்து வரும் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த 32 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் வசித்து வந்தோருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன Read More »

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்படவேண்டும் – கௌரவ ஆளுநர் வலியுறுத்தல்

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்படவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அடுத்த மாத இறுதியிலிருந்து அதனை இயக்குவதாக வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டமைக்கு நன்றிகளையும் தெரிவித்தார். பொருளாதார மத்திய நிலையத்தை மீளச் செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (12.08.2025) நடைபெற்றது. யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத்

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்படவேண்டும் – கௌரவ ஆளுநர் வலியுறுத்தல் Read More »

கௌரவ ஆளுநருக்கும் மன்னார் நகர சபை, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்களுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், மன்னார் நகர சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை (11.08.2025) நடைபெற்றது. மன்னார் நகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அவசரம் தேவை என்றும் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மாந்தை மேற்கு பிரதேசசபையின் வருமானத்தை அதிகரிப்பதற்குரிய வேலைத் திட்டங்களுக்கு உதவிகளை

கௌரவ ஆளுநருக்கும் மன்னார் நகர சபை, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்களுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. Read More »

உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுப்பதற்கு அடையாளம் காணப்பட்ட திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் உள்ளடக்கப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் (08.08.2025) நடைபெற்றது. கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. உலக வங்கியால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் கடந்த ஜூன் மாதம்

உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

எழுவைதீவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது.

எழுவைதீவு மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றித்தர முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைவேற்றித் தருவதாகவும், சில விடயங்களை அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் ஊடாக நடைமுறைப்படுத்துவதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். எழுவைதீவு மக்கள் குறைகேள் சந்திப்பு எழுவைதீவு விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை (07.08.2025) நடைபெற்றது. ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த பங்குத்தந்தை, தற்போதைய ஆளுநர் யாழ். மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் எழுவைதீவு மக்களுக்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை

எழுவைதீவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண சபையின் ஒழுங்கமைப்பில் மக்கள் குறைகேள் சந்திப்பு அனலைதீவில், நடைபெற்றது.

மக்கள் எங்களைத்தேடி வரக்கூடாது. மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்கும் அலுவலர்கள்தான் மக்களைத் தேடிச்சென்று அவர்களது குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொடுக்கவேண்டும். அதற்கு அமைவாகவே பின்தங்கியுள்ள தீவுகளுக்கான எமது மக்கள் குறைகேள் சந்திப்பு நடத்தப்படுகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அத்துடன் இந்த மக்கள் குறைகேள் சந்திப்பில் மக்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் எட்டப்பட்டன. வடக்கு மாகாண சபையின் ஒழுங்கமைப்பில் மக்கள் குறைகேள் சந்திப்பு இன்று வியாழக்கிழமை (07.08.2025) அனலைதீவில், அனலைதீவு ஹரிகர

வடக்கு மாகாண சபையின் ஒழுங்கமைப்பில் மக்கள் குறைகேள் சந்திப்பு அனலைதீவில், நடைபெற்றது. Read More »

யாழ் நகரத்திலுள்ள கார்கில்ஸ் தொகுதியில் ஒழுங்கமைத்த ‘மென் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தின்’ தொடக்க நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலந்துகொண்டார்.

கார்கில்ஸ் நிறுவனம் யாழ்ப்பாணம் நகரத்திலுள்ள கார்கில்ஸ் தொகுதியில் ஒழுங்கமைத்த ‘மென் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தின்’ (Cargills “ELEVATE” Soft Skills Development Program) தொடக்க நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை (05.08.2025) கலந்துகொண்டார். இதன்போது உரையாற்றிய ஆளுநர், எமது இளையோரை மேம்படுத்த கார்கில்ஸ் நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு மகிழ்வடைகின்றேன். இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவு மிக

யாழ் நகரத்திலுள்ள கார்கில்ஸ் தொகுதியில் ஒழுங்கமைத்த ‘மென் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தின்’ தொடக்க நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலந்துகொண்டார். Read More »

இப்போது எங்களை ஆளாக்கிய பெற்றோர்களை நாங்கள் பராமரிக்க மறந்து விடுகின்றோம். நன்றி மறந்தவர்களாகி வருகின்றோம். – கௌரவ ஆளுநர்

போரால் உருக்குலைந்த எமது சமூகக் கட்டமைப்பின் காரணமாக முதியோர் நலக் காப்பங்கள் காலத்தின் தேவையாகவுள்ளன. உயிர் தந்த பெற்றோரை பராமரிப்பது பிள்ளைகளின் பொறுப்பாகவுள்ளபோதும் அது இன்றைய சூழலில் சாத்தியம் குறைந்த ஒன்றாக மாறிச் செல்கின்றது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பூந்தோட்டம், கோவிற்கடவை, துன்னாலை மத்தியில் ‘கரவை நலவாழ்வு காப்பகம்’ வடக்கு மாகாண ஆளுநரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை (05.08.2025) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், புலம்பெயர் தமிழர்களில்

இப்போது எங்களை ஆளாக்கிய பெற்றோர்களை நாங்கள் பராமரிக்க மறந்து விடுகின்றோம். நன்றி மறந்தவர்களாகி வருகின்றோம். – கௌரவ ஆளுநர் Read More »