இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) வவுனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ள தரச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைக்கு கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
வடக்கின் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதித் தடைகளை நிவர்த்தி செய்யும் வகையில், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) இணைந்து முன்னெடுத்துள்ள தரச் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைக்கு வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். வவுனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வடக்கிலேயே பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இலங்கை கட்டளைகள் நிறுவனம் தரச் சான்றிதழ்களை வழங்குவது தொடர்பாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கான மாகாண நிர்வாகத்தின் […]
