பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு பேரிடருக்கு முகங்கொடுக்காத வகையில், அவர்களுக்கான தீர்வுகளை முன்வைத்தல் வேண்டும். – வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளின் போது, மத்திய மற்றும் மாகாண நிர்வாகங்களுக்கிடையில் எவ்வித வேற்றுமைகளும் இன்றி ஒருங்கிணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையாலேயே, பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகக் குறுகிய காலத்தில் ஓரளவாவது மீளக் கட்டியெழுப்ப முடிந்தது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (09.12.2025) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க மற்றும் […]
