“யாழ். தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் உட்கட்டுமான அழிவுகள் அதிகம்; இயல்பு வாழ்க்கையைத் திருப்பவே களத்தில் நிற்கிறேன்” – வவுனியா, கிளிநொச்சி விஜயத்தின் பின் ஆளுநர் கருத்து
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களும் வெள்ளத்தால் மிக மோசமான அழிவுகளையும், அதிகளவான உட்கட்டுமானச் சேதங்களையும் எதிர்கொண்டுள்ளன. அவற்றை நேரடியாகப் பார்வையிட்டு, மாகாண நிர்வாகத்தின் ஊடான புனரமைப்பு வேலைத் திட்டங்களை விரைவுபடுத்தி, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிப்படுத்துவதற்காகவே இங்கு வந்துள்ளேன் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட கண்காணிப்பு பயணத்தை வடக்கு மாகாண ஆளுநர் இன்று புதன்கிழமை […]
