டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் ‘சாதனைத் தமிழன்’ 2025 விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
டான் தொலைக்காட்சி நிறுவனம் வழங்கிவரும் ‘சாதனைத் தமிழன்’ விருது வழங்கும் நிகழ்வின் 2025 ஆம் ஆண்டுக்கான விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நேற்று (17.01.2025) இரவு டான் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா சிறப்பு நிகழ்வின் போது இவ்விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் மற்றும் வடக்கு மாகாண கௌரவ அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், […]
