Balasingam Kajenderan

முகாமைத்துவ சேவையின் அதிசிறப்புத் தர பதவியுயர்வு நியமனங்கள், வருமான வரிப் பரிசோதகர்கள், மற்றும் நூலகர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

‘நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும். மாற்றங்களைச் செய்ய முற்பட்டால் சவால்கள் வரும். கிளிநொச்சி மாவட்டச் செயலருக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்ததும் அதுதான்’ என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண முகாமைத்துவ சேவையின் அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு நியமனங்கள் வழங்கும் நிகழ்வும், புதிதாகச் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட வருமான வரிப் பரிசோதகர்கள் மற்றும் நூலகர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வும் ஆளுநர் செயலகத்தில் […]

முகாமைத்துவ சேவையின் அதிசிறப்புத் தர பதவியுயர்வு நியமனங்கள், வருமான வரிப் பரிசோதகர்கள், மற்றும் நூலகர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆடிப்பிறப்புப் பெருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தமிழர் திருநாளாம் ஆடிப்பிறப்புப் பெருவிழா இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த பாரம்பரிய நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அத்துடன், இந்நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் பங்கேற்றிருந்தார். நிகழ்வின் ஆரம்பமாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆடிப்பிறப்புப் பெருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. Read More »

சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்யும் ‘வாரி மஹிம – எமது பாரம்பரியம்’ தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்யும் ‘வாரி மஹிம – எமது பாரம்பரியம்’ தேசிய வேலைத்திட்டம், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டி.லால்காந்த அவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (01.07.2026) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவி ஊற்றுக்குளத்தில் இந்தத் தேசிய வேலைத்திட்டம் அமைச்சர் கௌரவ கே.டி.லால்காந்த அவர்களால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான புனரமைப்புப் பணிகளை 75 நாட்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் குளத்தின் கீழ்

சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்யும் ‘வாரி மஹிம – எமது பாரம்பரியம்’ தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (01.07.2026) புதன்கிழமை காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆரம்ப நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினரும் சாவகச்சேரி

டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

இலங்கையிலேயே வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றார்கள். – கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இலங்கையிலேயே வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றார்கள். ஏனைய மாகாணங்களில் நடைபெறும் கலந்துரையாடல்களின் போது, இவர்களது சேவையையே நாம் முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டுகின்றோம், என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தார். வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்கள அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று (30.06.2026) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர்

இலங்கையிலேயே வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றார்கள். – கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பெருமிதத்துடன் தெரிவித்தார். Read More »

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், மகளிர் தின விசேட நிகழ்வுகள் யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வடக்கு மாகாண சபை மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சின் ஏற்பாட்டில், மகளிர் தின விசேட நிகழ்வுகள் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று (30.06.2026) செவ்வாய்க்கிழமை காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ சரோஜா

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், மகளிர் தின விசேட நிகழ்வுகள் யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண சுகாதாரத்துறை மேம்பாடு தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார். ஏனைய மாகாணங்களைப் போலன்றி, வடக்கில் மாவட்டப் பொது மருத்துவமனைகள் மாகாண சபையின் கீழ் இயங்குவதைக் கருத்தில் கொண்டு, நிதி ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி விசேட மேலதிக நிதி ஒதுக்கீடுகள் பெற்றுத் தரப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். வடக்கு

வடக்கு மாகாண சுகாதாரத்துறை மேம்பாடு தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Read More »

764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களில் இயங்கும் பேருந்துச் சங்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்த்து, ஒழுங்குமுறையான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது

யாழ்ப்பாண மாவட்டத்தினுள் சேவையில் ஈடுபடும் 764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களில் இயங்கும் பேருந்துச் சங்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்த்து, ஒழுங்குமுறையான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (26.06.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போது, குறித்த இரு வழித்தடங்களிலும் நீண்டகாலமாக நிலவி வரும் முரண்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதற்குத் தீர்வாக, எதிர்காலத்தில் எவ்வாறு ஒழுங்குமுறையான சேவைகளை முன்னெடுப்பது என்பது

764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களில் இயங்கும் பேருந்துச் சங்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீர்த்து, ஒழுங்குமுறையான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது Read More »

பூநகரி, கௌதாரிமுனைப் பிரதேசத்தை ஒரு சிறந்த சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

பூநகரி, கௌதாரிமுனைப் பிரதேசத்தை ஒரு சிறந்த சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (26.06.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கௌதாரிமுனையைச் சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்யும் நோக்கில், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் விசேட வரைவுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்துக்கு அமைவாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டு, இத்திட்டத்திற்கான முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளமை குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. இன்றைய

பூநகரி, கௌதாரிமுனைப் பிரதேசத்தை ஒரு சிறந்த சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

வருமானப் பரிசோதகர்கள், ஆய்வுகூட உதவியாளர்கள் என 12 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளும், ஊழல்வாதிகளுமே நேர்மையாகச் சேவையாற்றுபவர்களை விமர்சிப்பார்கள். எனவே, இன்று கடமைகளைப் பொறுப்பேற்கும் நீங்கள், இவ்வாறான விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாது மக்களுக்காக நேர்மையான சேவையை முன்னெடுக்க வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் கீழான உள்ளூராட்சித் திணைக்களத்துக்கான 10 வருமானப் பரிசோதகர்கள் மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கான 2 ஆய்வுகூட உதவியாளர்கள் என மொத்தமாக 12 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும்

வருமானப் பரிசோதகர்கள், ஆய்வுகூட உதவியாளர்கள் என 12 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Read More »