பாத்தீனியம் ஆபத்தான ஒரு நச்சுச் செடியாகும்.தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குத் தீவிரமாகக் கண்காணித்து அழிப்பதன் ஊடாகவே இதனை முழுமையாக ஒழிக்க முடியும்” – கௌரவ ஆளுநர்
“கண்ணுக்குத் தெரியாத டெங்கு உள்ளிட்ட நோய்க் கிருமிகளை நம்மால் ஒன்றிணைந்து ஒழிக்க முடிகின்ற போது, கண்ணுக்குத் தெரிகின்ற பாத்தீனியத்தை ஏன் உரிய துறைசார்ந்தவர்களால் இவ்வளவு காலமும் ஒழிக்க முடியவில்லை?” எனக் கேள்வி எழுப்பிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், உயிர் கொல்லும் நச்சுச் செடியான பாத்தீனியத்தை ஒழிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் அழிக்க முடியாத பெரும் களையாக உருவெடுத்துவரும் பாத்தீனியத்தை ஒழிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது […]
