Balasingam Kajenderan

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் யாழ் பொதுநூலகத்தினை இணைக்கும் அங்குராப்பண நிகழ்வு ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் (01.09.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாண்புமிகு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாநகர சபையின் கௌரவ மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா ஆகியோரால் வரவேற்கப்பட்டனர். அதனைத் […]

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் யாழ் பொதுநூலகத்தினை இணைக்கும் அங்குராப்பண நிகழ்வு ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் இன்று திங்கட் கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று திங்கட் கிழமை காலை (01.09.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார். மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழான அபிவிருத்திப் பணிகளை மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வுகள், மீன்பிடி கூட்டுத்தாபனத்தின்

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் இன்று திங்கட் கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது Read More »

நாம் நேர்மையாகவும் – வெளிப்படையாகவும் செயற்பட்டால் யாருக்கும் பயப்படவேண்டியதில்லை. – ஆளுநர்

எந்தச் சேவையாக இருந்தாலும் அதை நேர்மையாகவும் – வெளிப்படைத்தன்மையாகவும் முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு செய்யும்போது சவால்கள் – அழுத்தங்கள் வரத்தான் செய்யும். ஆனால் நேர்மையாகவும் – வெளிப்படையாகவும் செயற்பட்டால் எப்போதும் யாருக்கும் பயப்படவேண்டியதில்லை. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மறைந்த ரகுநாதன் குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன், ரட்ணம் பவுண்டேசனின் ஏற்பாட்டில், விஷன் குளோபல் எம்பவமன்ர் ஊடாக இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களில் நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும்

நாம் நேர்மையாகவும் – வெளிப்படையாகவும் செயற்பட்டால் யாருக்கும் பயப்படவேண்டியதில்லை. – ஆளுநர் Read More »

நான் ஆளுநராகப் பதவியேற்றவுடன் அதிமேதகு ஜனாதிபதிக்கு எழுதிய முதல் கடிதம், வட்டுவாகல் பாலப் புனரமைப்புத்தான். – ஆளுநர்

பிறந்த மண்ணில் வாழ்வதைப்போன்ற சுகம் வேறு எங்கும் எந்த வசதிகளுடன் வாழ்ந்தாலும் கிடைக்காது. 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த நீங்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து இன்று சொந்த மண்ணில் வாழ்கின்றீர்கள். உங்களைப் பார்க்கும்போது சந்தோசமாக இருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கொக்கிளாய் அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலய திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை (29.08.2025) இடம்பெற்றது. மாலையில் ஆலய மலர் மற்றும் இறுவட்டு என்பனவற்றின் வெளியீடுகள் நடைபெற்றன. இந்த

நான் ஆளுநராகப் பதவியேற்றவுடன் அதிமேதகு ஜனாதிபதிக்கு எழுதிய முதல் கடிதம், வட்டுவாகல் பாலப் புனரமைப்புத்தான். – ஆளுநர் Read More »

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் அவர்கள், பிரதி அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (29.08.2025) இடம்பெற்றது. மாவட்டச் செயலரின் வரவேற்புரையை தொடர்ந்து, பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தனது ஆரம்ப உரையில், கொக்கிளாய் புல்மோட்டை முகத்துவாரம் பாலத்தை நிர்மாணிப்பதற்கு அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கப்படும் எனவும், வட்டுவாகல்

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. Read More »

‘முல்கோ’ விற்பனை நிலையத்தை கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சருடன் இணைந்து ஆளுநர் அவர்கள் இதனைத் திறந்து வைத்தார்.

வடக்கில் வளமுள்ள மாவட்டம் முல்லைத்தீவு. ஆனால் வறுமையிலும் இந்த மாவட்டம் முன்னிலையில் இருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்தில் இந்த நிலைமை நிச்சயம் மாற்றப்படும். இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவரகள். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் ‘முல்கோ’ விற்பனை நிலையத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை (29.08.2025) திறந்து வைக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவுடன் இணைந்து வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் இதனைத் திறந்து

‘முல்கோ’ விற்பனை நிலையத்தை கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சருடன் இணைந்து ஆளுநர் அவர்கள் இதனைத் திறந்து வைத்தார். Read More »

பாரம்பரிய கலைச்சங்கமம் – 2025

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு மருவிவரும் பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் விதமாக பாரம்பரிய கலைச் சங்கமம் எனும் கலை நிகழ்வினை ஆரம்பித்து நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பாரம்பரிய கலைச் சங்கமமானது இரண்டு நிகழ்வுகளை உள்ளடக்கிய வகையில் கட்டமைக்கப்பட்டிருந்தது. பாரம்பரிய கலைத்திறன் வெளிப்பாட்டுப் போட்டி பாரம்பரிய கலைநிகழ்வுகளின் சங்கமம் என்கின்ற இருநிகழ்வுகளும் மிகப்பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி இருப்பதுடன் சமூக மட்டத்திலான கலைப்பெறுமான அடைவு மட்டங்களுக்கு அதிக பெறுமானத்தினை வழங்கியிருப்பது மறுக்கமுடியாத

பாரம்பரிய கலைச்சங்கமம் – 2025 Read More »

மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு கௌரவ ஆளுநர் நேரடி விஜயம்

மன்னார் மாவட்ட மருத்துவமனையின் நிலைமைகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை மாலை (28.08.2025) நேரில் சென்று பார்வையிட்டதுடன் நோயாளர் நலன்புரி சங்கத்தினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டார். மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை நோயாளர் நலன்புரி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஆளுநருடனான சந்திப்பு மன்னார் நகர சபையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் மன்னார் நகர சபையின் கௌரவ தவிசாளர் மற்றும் மன்னார் மாவட்டச் செயலரும் கலந்து கொண்டிருந்தனர். மன்னார் மாவட்ட மருத்துவமனை மாகாண சபையிருந்த

மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு கௌரவ ஆளுநர் நேரடி விஜயம் Read More »

தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு – கலாசாரம் உண்டு. அவற்றை நாம் மறக்கக் கூடாது. – ஆளுநர்

பண்பாடு தொலைந்துபோகின்ற இந்தக் காலத்தில்தான் பண்பாட்டு விழாக்கள் தேவை. காலத்தின் தேவையறிந்து இந்தப் பண்பாட்டு விழாக்களை தொடர்ந்து நடத்தவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்டச் செயலகமும், மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பெருவிழா – 2025 இன்று வியாழக்கிழமை காலை (28.08.2025) மன்னார் நகர மண்டபத்தில் மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன்

தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு – கலாசாரம் உண்டு. அவற்றை நாம் மறக்கக் கூடாது. – ஆளுநர் Read More »

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள், தவிசாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ மேயர்கள், தவிசாளர்களுடனான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச்.அபயரத்தன, கௌரவ பிரதி அமைச்சர் பி.ருவான் செனரத் ஆகியோரின் பங்கேற்புடன் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை மாலை (27.08.2025) இடம்பெற்றது. பதில் பிரதம செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் கலந்துரையாடலில் பங்கேற்றவர்களை வரவேற்றார். தொடர்ந்து வடக்கு மாகாண

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள், தவிசாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது. Read More »