August 2026

வடக்கு மாகாணத்தை நாட்டின் முன்னணி தென்னை உற்பத்தி வலயமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு வடக்கு மாகாண சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் – கௌரவ ஆளுநர் உறுதி

இன்று நாம் நடும் ஒவ்வொரு தென்னம்பிள்ளையும் ஒரு மரக்கன்றாக மட்டுமல்ல, வடக்கு மாகாணத்தின் எதிர்கால பொருளாதாரத்துக்கான முதலீடாகும். அவற்றைப் பாதுகாத்து, வளர்த்து, பயனடையச் செய்வது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தை நாட்டின் முன்னணி தென்னை உற்பத்தி வலயமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு வடக்கு மாகாண சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஏற்பாட்டில், […]

வடக்கு மாகாணத்தை நாட்டின் முன்னணி தென்னை உற்பத்தி வலயமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு வடக்கு மாகாண சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் – கௌரவ ஆளுநர் உறுதி Read More »

காலநிலை மாற்றங்களால் வடக்கு மாகாணத்தின் உணவு உற்பத்தி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது, கூட்டுறவு அமைப்புகளைப் பயன்படுத்தி உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த நடைமுறை அடிப்படையில் செயல்பட வேண்டும்’ – கௌரவ ஆளுநர் வலியுறுத்தல்.

காலநிலை மாற்றம், உற்பத்திச் செலவுகளின் அதிகரிப்பு மற்றும் சந்தைச் சவால்கள் போன்ற காரணிகளால் வடக்கு மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படாத வகையில், கூட்டுறவு இயக்கத்தை மையப்படுத்திய புதிய செயற்பாட்டு வேலைத்திட்டங்களை உருவாக்கும் நோக்கில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் விரிவான உயர்மட்ட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (07.08.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் உணவுப் பாதுகாப்பை நிலையான முறையில் வலுப்படுத்துதல், விவசாய உற்பத்தியை அதிகரித்தல், விவசாயிகளின் வருமானத்தை

காலநிலை மாற்றங்களால் வடக்கு மாகாணத்தின் உணவு உற்பத்தி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது, கூட்டுறவு அமைப்புகளைப் பயன்படுத்தி உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த நடைமுறை அடிப்படையில் செயல்பட வேண்டும்’ – கௌரவ ஆளுநர் வலியுறுத்தல். Read More »

“PayDigital Jaffna” விழிப்புணர்வு மற்றும் அறிமுக நிகழ்வு யாழ். கார்கில்ஸ் சதுக்க வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் “PayDigital Jaffna” விழிப்புணர்வு மற்றும் அறிமுக நிகழ்வு இன்று (07.08.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்க வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், தனது உத்தியோகபூர்வ டிஜிட்டல் பணப்பரிமாற்றத் தொடுகை பரிவர்த்தனையையும் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் குறிப்பிடுகையில், ‘இன்றைய உலகம் தொழில்நுட்பப் புரட்சியின் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில், டிஜிட்டல் பொருளாதாரத்தின் இதயத் துடிப்பாக டிஜிட்டல்

“PayDigital Jaffna” விழிப்புணர்வு மற்றும் அறிமுக நிகழ்வு யாழ். கார்கில்ஸ் சதுக்க வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. Read More »

யாழ். போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கட்டுமான நடவடிக்கைகளுக்காக, மருத்துவமனையின் சில பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்துக்குத் தற்காலிகமாக மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கட்டுமான நடவடிக்கைகளுக்காக, மருத்துவமனையின் சில பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்துக்குத் தற்காலிகமாக இடமாற்றுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (06.08.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாக அமைந்துள்ள மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்தில் முன்னர் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இயங்கி வந்த நிலையில், தற்போது அங்கு மாகாண சுதேச வைத்தியத்துறை

யாழ். போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கட்டுமான நடவடிக்கைகளுக்காக, மருத்துவமனையின் சில பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்துக்குத் தற்காலிகமாக மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில்முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (06.08.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிற்துறை திணைக்களம், சமூக சேவைகள் திணைக்களம், கூட்டுறவுத் திணைக்களங்கள் மற்றும் கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

யாழ்ப்பாணம், வவுனியா சிறைச்சாலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட அவசரக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

நீதி அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார அவர்களின் கோரிக்கைக்கு இணங்க, வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட அவசரக் கலந்துரையாடல், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (05.08.2026) புதன்கிழமை மாலை இடம்பெற்றது. கலந்துரையாடல் தொடர்பில் அமைச்சர் இ.சந்திரசேகர்

யாழ்ப்பாணம், வவுனியா சிறைச்சாலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட அவசரக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. Read More »

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கை மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவிடமிருந்து கிடைக்கப்பெற்று அனுமதிக்கப்பட்டவுடன், அடுத்த ஆண்டுக்கான இடமாற்ற நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (05.08.2026) புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாகாணத்தில் 3,304 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 1,411

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

இன்றைய பிள்ளைகள் விலை கொடுத்து துரித உணவுகளைத் தேடிச் செல்வதைத் தவிர்த்து, எமது வீடுகளிலும் வளவுகளிலும் இலவசமாகக் கிடைக்கும் சத்துள்ள இலைகளையும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்

வீடுகளில் இலவசமாகக் கிடைக்கும் சத்துள்ள இலைவகைகளை விடுத்து விலை கொடுத்து விரைவு உணவுகளை வாங்கி நோய்களை வளர்க்கின்றோம். இவற்றை மாற்றியமைப்பதற்கு, எங்கள் சமூகத்துக்கு போசாக்கின் மகத்துவத்தை உணர்த்தும் இத்தகைய கண்காட்சிகளும் நிகழ்வுகளும் வரவேற்கத்தக்கன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சுகாதார அமைச்சின் ‘தேசிய போசாக்கு மாதம்’ மற்றும் ‘ENOUGH’ பரப்புரைக்கு ஆதரவாக, சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனைச் சமூகம் மற்றும் வேள்ட் விசன் அமைப்பின் அனுசரணையுடன்

இன்றைய பிள்ளைகள் விலை கொடுத்து துரித உணவுகளைத் தேடிச் செல்வதைத் தவிர்த்து, எமது வீடுகளிலும் வளவுகளிலும் இலவசமாகக் கிடைக்கும் சத்துள்ள இலைகளையும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார் Read More »

சமூகத்துக்குச் சேவையாற்றக் கூடிய மாணவர்களை உருவாக்குவதில்தான் ஒரு கல்லூரியின் வெற்றி தங்கியிருக்கின்றது. – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

சமூகத்துக்குச் சேவையாற்றக் கூடியவாறு மாணவர்களை உருவாக்குவதில்தான் ஒரு கல்லூரியின் வெற்றி தங்கியிருக்கின்றது. கல்லூரிகள் மாணவர்களிடம் தலைமைத்துவப் பண்பையும் ஆளுமையையும் வளர்த்தெடுக்க வேண்டும்’ என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் 51.88 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப அலகு மற்றும் நூலகம் உள்ளிட்ட மூன்று மாடிக் கட்டடத் தொகுதியின் திறப்பு விழாவும், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ்

சமூகத்துக்குச் சேவையாற்றக் கூடிய மாணவர்களை உருவாக்குவதில்தான் ஒரு கல்லூரியின் வெற்றி தங்கியிருக்கின்றது. – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் கௌரவ ஆளுநர், சுற்றுலாத்துறை கௌரவ பிரதியமைச்சர் ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சுற்றுலாத்துறை கௌரவ பிரதியமைச்சர் ருவன் குணசேகர அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (04.08.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது கிளிநொச்சி மாவட்டத்தின் கௌதாரிமுனை சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஆளுநர் சுட்டிக்காட்டினார். அத்துடன், அப்பகுதியில் அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சின் ஊடான ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில்

ஒருங்கிணைந்த சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பில் கௌரவ ஆளுநர், சுற்றுலாத்துறை கௌரவ பிரதியமைச்சர் ஆகியோரிடையே விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »