கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள், சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், கௌரவ ஆளுநரின் நேரடி ஆலோசனை, வழிகாட்டலுக்கு அமைய, மாகாணம் தழுவிய ரீதியில் நாய்களுக்கான விசேட கருத்தடைச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக, மாகாணம் தழுவிய ரீதியில் மூன்று ஆண்டுகளுக்கான நாய்களுக்கான விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தின் இந்த ஆண்டுக்குரிய செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 7,606 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும், உள்ளூராட்சி […]
