August 2026

வடக்கு மாகாண நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு: விரைவான மக்கள் சேவைக்கான புதிய நகர்வு

செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான சேவைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், தொழில்நுட்பம் எத்துணை வளர்ச்சியடைந்தாலும் நிர்வாகத்தின் மையமாக மனிதநேயமே தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண நிர்வாகக் கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தொடர்பான விசேட கலந்தாய்வுச் செயலமர்வு இன்று (21.08.2026) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. […]

வடக்கு மாகாண நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு: விரைவான மக்கள் சேவைக்கான புதிய நகர்வு Read More »

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்கட்டுமானம், அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகருடன் ஆளுநர் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கி செயற்பட்டு வருவதுடன், வடக்கு மாகாணத்தில் முதலீடு, விவசாய உற்பத்திக்கு பெறுமதி சேர்த்தல் ஆகிய துறைகளில் மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அதேவேளை, வடக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதுடன், தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகள் விரைவாகக் கிடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஷேபிள் மார்ட்டின் தெரிவித்தார். வடக்கு

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்கட்டுமானம், அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகருடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

வவுனியா, கிளிநொச்சி மற்றும் மல்லாவி மருத்துவமனைகளின் சிறுநீரக சிகிச்சை வசதிகளை வலுப்படுத்த ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள்

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரம் என்பது ஒரு மருத்துவ உபகரணம் மாத்திரமல்ல, தொடர்ந்தும் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பாகும். அந்த வாய்ப்பை வடக்கு மாகாண மக்களுக்கு, குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் வாழும் நோயாளிகளுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 83,544 கனேடிய டொலர் பெறுமதியான ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்படுவது மிகவும் பெறுமதியான மனிதநேயப் பங்களிப்பாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இவ்வியந்திரங்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி

வவுனியா, கிளிநொச்சி மற்றும் மல்லாவி மருத்துவமனைகளின் சிறுநீரக சிகிச்சை வசதிகளை வலுப்படுத்த ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் Read More »

வடக்கு மாகாணத்தில் வரலாற்றில் அதிகூடிய சிறுபோக நெல் விளைச்சல் விவசாயிகளின் நெல்லை விரைவாகக் கொள்வனவு செய்ய பொறிமுறைகளைத் துரிதப்படுத்த ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக சிறுபோகத்தில் அதிகூடிய நெல் விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், விவசாயிகள் தமது விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு உடனடி தீர்வை வழங்கும் வகையில் நெல் கொள்வனவு பொறிமுறைகளை விரைவுபடுத்த வேண்டும். திறைசேரியால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சிறிய, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் ஊடாக வட்டியில்லாக் கடன் அடிப்படையில் நெல் கொள்வனவை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மாகாணத்தில் வரலாற்றில் அதிகூடிய சிறுபோக நெல் விளைச்சல் விவசாயிகளின் நெல்லை விரைவாகக் கொள்வனவு செய்ய பொறிமுறைகளைத் துரிதப்படுத்த ஆளுநர் பணிப்பு Read More »

வடக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளை ஒற்றுமையுடன் முன்னெடுக்க இருதரப்பினரும் இணக்கம்; விரும்பத்தகாத சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது – ஆளுநர் வலியுறுத்தல்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் விடுத்த கோரிக்கைக்கு, மாகாணத்தின் நிறைவேற்று அதிகாரிகளும் வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தினரும் இணங்கினர். வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (19.08.2026) புதன்கிழமை

வடக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளை ஒற்றுமையுடன் முன்னெடுக்க இருதரப்பினரும் இணக்கம்; விரும்பத்தகாத சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது – ஆளுநர் வலியுறுத்தல் Read More »

வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயற்பாடுகள் ஆரம்பம்

வீதிப் போக்குவரத்து விபத்துக்களைத் தடுப்பதற்கும், உயிரிழப்புகள் மற்றும் காயங்களைக் குறைப்பதற்கும் வீதியைப் பயன்படுத்தும் அனைவரிடமும் பொறுப்புணர்வை உருவாக்கும் நோக்கில், போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயற்பாடுகள் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையும் யாழ்ப்பாண மருத்துவச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த வீதிப் போக்குவரத்து விபத்து

வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயற்பாடுகள் ஆரம்பம் Read More »

வடக்கு மாகாண இளையோரின் உள்ளூராட்சி சேவைகள் மீதான நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும் – ஆளுநர்

வடக்கு மாகாண இளையோர் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகள் மீது கொண்டுள்ள நம்பிக்கை கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களை விட உயர்ந்த நிலையில் இருப்பதாக ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது எமக்குச் சாதகமான விடயமாகும். இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, அதனை ஒருபோதும் சிதைக்காத வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகள் அமைய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். ‘இளைஞர் நிலவரக் குறியீடு: இலங்கையில் உள்ளடக்கிய ஆட்சிக்கான இளைஞர்களின் தேவைகள், பிரச்சினைகள் மற்றும் வாய்ப்புகளைப் பதிவுசெய்தல்’ என்ற

வடக்கு மாகாண இளையோரின் உள்ளூராட்சி சேவைகள் மீதான நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும் – ஆளுநர் Read More »

நூல்கள் அலுமாரியில் மட்டும் இருந்தால் அவை ஆவணங்கள்; இளைய தலைமுறையின் கைகளில் சென்றால் அவை இயக்கங்களாக மாறும் – ஆளுநர்

நல்லைக்குமரன் மலர் போன்ற வெளியீடுகள் வெறுமனே அச்சுப் பிரதிகளாக வெளியிடப்பட்டு நூல் அலுமாரிகளில் நிற்பதுடன் முடிவடையக்கூடாது. இன்றைய இளைய தலைமுறையின் வாசிப்பு பழக்கமும் தகவல் பெற்றுக்கொள்ளும் முறையும் மாறிவரும் நிலையில், இத்தகைய அறிவுச் செல்வங்கள் அச்சு வடிவத்துடன் டிஜிட்டல் வடிவங்களிலும் அவர்களைச் சென்றடைய வேண்டும். அப்போதுதான் ஒரு வருடாந்த வெளியீடு தலைமுறைகளை இணைக்கும் தொடர்ச்சியான பண்பாட்டு இயக்கமாக மாறும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நல்லைக்குமரன் மலர் – 34 வெளியீட்டு விழா

நூல்கள் அலுமாரியில் மட்டும் இருந்தால் அவை ஆவணங்கள்; இளைய தலைமுறையின் கைகளில் சென்றால் அவை இயக்கங்களாக மாறும் – ஆளுநர் Read More »

கிளிநொச்சியில் சேகரிக்கப்பட்ட மற்றும் கழுவி எடுக்கப்பட்ட மணலைத் துரிதமாக விநியோகிக்க தீர்மானம்

மேலும் இரு இடங்களில் மண் கழுவும் பணிக்கான கேள்விக் கோரலை விரைவுபடுத்தவும் ஆளுநர் பணிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள மணலை அடுத்த வாரம் முதல் உரிய அனுமதிகளுடன் பொதுமக்களுக்குத் துரிதமாக விநியோகிப்பதற்கும், இரணைமடுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் சில இடங்களில் மண்ணைக் கழுவி மணல் பெற்றுக்கொள்ளும் பணிகளுக்கான கேள்விக் கோரலை விரைவாக மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் மற்றும் கிரவல் அகழ்வு, விநியோகம் தொடர்பான

கிளிநொச்சியில் சேகரிக்கப்பட்ட மற்றும் கழுவி எடுக்கப்பட்ட மணலைத் துரிதமாக விநியோகிக்க தீர்மானம் Read More »

வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எம்மைத் தகவமைத்துக்கொள்ள பயிற்சிகள் அவசியம்; அதன் பலன் பணியில் வெளிப்பட வேண்டும் – ஆளுநர்

வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எம்மைத் தகவமைத்துக்கொண்டு, அந்த மாற்றங்களுக்குள் எம்மைத் தக்க வைத்துக்கொள்வதற்கு தொடர்ச்சியான பயிற்சிகள் அவசியம். ஒரு மனிதனின் அறிவிலும் நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய கருவியாகப் பயிற்சி அமைகின்றது. எனவே, நீங்கள் பெற்ற பயிற்சியின் உண்மையான பலன் உங்கள் பணியில் வெளிப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவின் கீழ் இயங்கும் முகாமைத்துவ

வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எம்மைத் தகவமைத்துக்கொள்ள பயிற்சிகள் அவசியம்; அதன் பலன் பணியில் வெளிப்பட வேண்டும் – ஆளுநர் Read More »