இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், அதிபர் சேவைச் சங்கம் ஆகியனவற்றின் பிரதிநிதிகளுக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியனவற்றின் பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (02.04.2026) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் கௌரவ பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்க அவர்கள், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் மிகச் சிறந்த சாதனையுடன் […]
