Balasingam Kajenderan

தேசிய மின்சார அமைப்பிற்கு தினசரி 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் திட்டம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தேசிய மின்சார அமைப்பிற்கு தினமும் 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் சூரிய சக்தி மின் அமைப்பு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக தனியார் நிறுவனம் ஒன்றினால் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என கூறப்படுகின்றது.  தனியார் சூரியப்படல நிறுவனம் ஒன்றின் தலைவர் திரு.ஜயந்த சமரகோன் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் பூநகரி ஏரியை அண்மித்த பகுதிகளில் 6000 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. 1000 ஏக்கரில் 700 மெகாவோல்ட் சூரிய சக்தி மின் அமைப்பு […]

தேசிய மின்சார அமைப்பிற்கு தினசரி 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் திட்டம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. Read More »

இந்திய தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் கௌரவ வடக்கு மாகாண ஆளுநர்.

கடந்த 07.10.2023 அன்று இந்திய துணைத்தூதரகத்தால் நடாத்தப்பட்ட இந்திய தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் ‘இந்திய தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டமானது, 400 இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு பல்வேறுபட்ட துறைகளான தகவல் தொழிநுட்பம், ஆங்கிலமொழி, முகாமைத்துவம், கிராமிய அபிவிருத்தி, நிதி, தொடர்பாடல் போன்றவற்றில் ஆற்றல் விருத்தியையும் பயிற்சிகளையும் வழங்குவது ஒரு பொன்னான வாய்ப்பு’ என கூறியதோடு இத்திட்டத்தை செயற்படுத்துகின்ற இந்திய

இந்திய தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் கௌரவ வடக்கு மாகாண ஆளுநர். Read More »

eRL 2.0 நிகழ்ச்சித்திட்டத்தினூடாக வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு

eRL 2.0 நிகழ்ச்சித்திட்டத்தினூடாக வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு 03.10.2023 அன்று மேல்மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடமாகாணத்தின் இந்நிகழ்வு வடமாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் தலைமையில் கௌரவ ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் 03.10.2023 அன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள் பிரதிப் பிரதம செயலாளர்கள், வடமாகாண சுற்றுலாத்துறை

eRL 2.0 நிகழ்ச்சித்திட்டத்தினூடாக வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு Read More »

வடமாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பு

வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ். எம் சார்ள்ஸ் மற்றும் கெளரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றையதினம் (04.10.2023) கொழும்பில் இடம்பெற்றிருந்தது. சந்திப்பின்போது எதிர்காலத்தில் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு தன் முழு ஆதரவையும் வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

வடமாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பு Read More »

வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

வட மாகாண ஆளுநர் கெளரவ பி. எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள் அக்டோபர் 03 ஆம் தேதி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கெளரவ கோபால் பாக்லே அவர்களை  கொழும்பில் அமைந்துள்ள இந்தியா இல்லத்தில் சந்தித்தார். சந்திப்பின் போது கெளரவ ஆளுநர் வடக்கின் எதிர்கால வளர்ச்சி குறித்து தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார். அதே வேளையில் இந்திய அரசாங்கம் கடந்த காலங்களில் வழங்கிய ஆதரவிற்கு தமது நன்றியினையும் தெரிவித்தார். கௌரவ உயர் ஸ்தானிகர் அவர்கள்,  வடக்கு

வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு Read More »

வடக்கு ஆளுநர் சார்ள்ஸ் சந்திப்பு! மாகாண அபிவிருத்திசார் விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்வு

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவொன்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியது. 27-09-2023 புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியோடு சம்பந்தப்பட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தற்போதைய வவுனியா பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் மோகனதாஸ் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஒழுங்குபடுத்தப்பட்ட இந்தச் சந்திப்பில், மும்மத பிரதிநிதிகள்,

வடக்கு ஆளுநர் சார்ள்ஸ் சந்திப்பு! மாகாண அபிவிருத்திசார் விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்வு Read More »

யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் 27 செப்ரெம்பர் 2023 ம் திகதி  நடைபெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு மக்கள் பிரதிநிதிகள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.. யாழ்.மாவட்டத்தின் பொது உட்கட்டமைப்பு அபிவிருத்தி, அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மக்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சினைகள் என்பவை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. யாழ்.மாவட்டத்தில்

யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. Read More »

பிரதமர் இல்லத்தில் மாகாண சபையின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது.

  2023 ஆம் ஆண்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று 26.09.2023 அன்று கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் பிரதமர் இல்லத்தில் இடம்பெற்றது. கௌரவ மாகாண ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வருவாய் வசூலிப்பது, சூரிய சக்தியை பயன்படுத்தி மின் கட்டணத்தை குறைப்பது, நீதிமன்ற அபராதம் மற்றும் முத்திரை வருவாயை உள்ளூராட்சி நிறுவனங்களின் பணிகளுக்கு பயன்படுத்துவது, மாகாண பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர்

பிரதமர் இல்லத்தில் மாகாண சபையின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது. Read More »

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் தூதுவர் வடமாகாண ஆளுநரை சந்தித்துள்ளார்

வடமாகாணத்தின் உட்கட்டமைப்பு மற்றும் பொது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திரு.ஜீன் பிரான்கொயிஸ் பக்டேட் (Jean Francois Pactet) தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் 27.09.2023 அன்று ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது வடமாகாண மக்களின் பொதுவான உட்கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் பிற வளர்ச்சி செயல்முறைகள் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் இப்பகுதி சிறுவர்களின் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கு பிரான்ஸ்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் தூதுவர் வடமாகாண ஆளுநரை சந்தித்துள்ளார் Read More »

வடமாகாண ஆளுநர் மற்றும் ஹட்டன் நஷனல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் சந்திப்பு

வடமாகாண ஆளுநர் கெளரவ பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் ஹட்டன் நஷனல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனாதன் அலஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கடந்த 25 செப்ரெம்பர் 2023 அன்று கொழும்பில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது ஹட்டன் நஷனல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியும் வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் தங்கள் ஆர்வத்தை தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் வடக்கிற்கான அபிவிருத்தியில் தமது ஆதரவைத் தொடர உறுதியளித்தனர்.

வடமாகாண ஆளுநர் மற்றும் ஹட்டன் நஷனல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் சந்திப்பு Read More »