Balasingam Kajenderan

காங்கேசன்துறையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள சிமெந்து தொழிற்சாலையை அமைச்சர்களுடன் இணைந்து ஆளுநர் பார்வையிட்டார்

காங்கேசன்துறையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள சிமெந்து தொழிற்சாலையை கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை கௌரவ அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள், கடற்றொழில் கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள், நிதி மற்றும் திட்டமிடல் கௌரவ பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோருடன் இணைந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (07.03.2025) காலை நேரில் சென்று பார்வையிட்டனர். 1990ஆம் ஆண்டு வரையில் இயங்கிய […]

காங்கேசன்துறையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள சிமெந்து தொழிற்சாலையை அமைச்சர்களுடன் இணைந்து ஆளுநர் பார்வையிட்டார் Read More »

சாவல்கட்டு மகாத்மா சனசமூக நிலையத்தின் 75ஆவது ஆண்டு பவளவிழா நிகழ்வில் வட மாகாண ஆளுநர் கலந்து கொண்டார்

சுயநலமாகச் சிந்திக்காது, கிராமத்தின் அபிவிருத்தியில் முனைப்போடு உங்கள் முன்னோர்கள் செயற்பட்டமையால்தான் இன்று இந்தச் சாவல்கட்டு கிராமம் வளர்ச்சியடைந்திருக்கின்றது. உங்கள் கிராமத்தின் ஒற்றுமை என்றென்றும் தொடரவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். சாவல்கட்டு மகாத்மா சனசமூக நிலையத்தின் 75ஆவது ஆண்டு பவளவிழா நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை மாலை (07.03.2025) நடைபெற்றன. ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் சனசமூக நிலைய முன்றலில் பவளவிழா நினைவைக் குறிக்கும் வகையில் ‘கேக்’ வெட்டிய பின்னர் பாண்ட் வாத்திய இசையுடன்

சாவல்கட்டு மகாத்மா சனசமூக நிலையத்தின் 75ஆவது ஆண்டு பவளவிழா நிகழ்வில் வட மாகாண ஆளுநர் கலந்து கொண்டார் Read More »

தெற்கு முதல் வடக்கு வரையுள்ள விகாரைகளுக்கு 5 நாடுகளின் தேரர்கள் பாதயாத்திரை

அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம முதல் நயினாதீவு நாகதீப விகாரை வரையில் 5 நாடுகளின் தேரர்கள் இணைந்து பாதயாத்திரை முன்னெடுத்துள்ளனர். இதில் பங்கேற்றுள்ள 50 தேரர்கள் 07.03.2025 அன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு வருகைதந்தனர். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தேரர்களை வரவேற்றார். தாய்லாந்து, மியான்மார், லாகோஸ், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த தேரர்களே இந்தப் பாதயாத்திரையில் இணைந்துள்ளனர்.

தெற்கு முதல் வடக்கு வரையுள்ள விகாரைகளுக்கு 5 நாடுகளின் தேரர்கள் பாதயாத்திரை Read More »

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்திய சர்வதேச மகளிர் தின விழா – 2025

பெண்களுக்கு எதிரான துர்நடத்தைகளில் ஈடுபடுபவர்களும், வன்முறைகளில் ஈடுபடுபவர்களும் சட்டத்தின் பிடியிலிருந்தும், மேலதிகாரிகளின் உதவிகளுடன் தப்பிக்கும் நிலைமையும் காணப்படுகின்றது. பெண்களுக்கு எதிரான இத்தகைய செயற்பாடுகளை இல்லதொழிக்க அனைவரும் ஓரணியில் கைகோர்த்து குரல் எழுப்பவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அழைப்புவிடுத்தார். வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்திய சர்வதேச மகளிர் தின விழா – 2025, சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் அமைச்சின் செயலர் பொ.வாகீசன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (07.03.2025) நடைபெற்றது.

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்திய சர்வதேச மகளிர் தின விழா – 2025 Read More »

இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும் ஆளுநருக்கும் இடயிலான கலந்துரையாடல்

இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தொடர்புடைய மாகாணத் திணைக்களங்களால் பதிலளிக்கப்பட்டதுடன், அபிவிருத்திப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு இரு தரப்பினரும் இணங்கினர். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும் இடையில் கடந்த பெப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இந்தச் சந்திப்பின்போது மாகாணத்தின் திணைக்களத் தலைவர்களுடனான சந்திப்புக்கு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக திணைக்களத் தலைவர்களுடனான சந்திப்பு ஆளுநர்

இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும் ஆளுநருக்கும் இடயிலான கலந்துரையாடல் Read More »

விளையாட்டுச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதன் ஊடாக சமூகப்பிறழ்வுகளை குறைக்க முடியும் – வடக்கு மாகாண ஆளுநர்

இளையோர் உயிர்கொல்லி போதைப்பொருளை நாடுவதும், சமூகப்பிறழ்வான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை அதிகரித்துச் செல்கின்றமையும் எல்லோருக்கும் தெரியும். இளையோர்களை அந்தச் சிந்தனைகளிலிருந்து விடுவிப்பதற்கு பெரும் பங்காற்றக் கூடியது விளையாட்டுச் செயற்பாடுகள்தான். எனவே, இளையோரிடத்தில் அதை மேம்படுத்தி தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் சாதனைகளை நிலைநாட்ட வேண்டும். அந்த மாற்றத்தை நோக்கி விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய அனைத்து உத்தியோகத்தர்களும் உழைக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சின்

விளையாட்டுச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதன் ஊடாக சமூகப்பிறழ்வுகளை குறைக்க முடியும் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை

கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் வேகமாகப் பரவி பன்றி வளர்ப்புப் பண்ணைகளில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்திய ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி – பளை மற்றும் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேசங்களில் அமைந்திருந்த 5 பன்றிப்பண்ணைகளிலும் பரவி பன்றிகளில் பலத்த உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி ஐந்து பண்ணைகளிலும் பன்றிகளின் குருதிமாதிரிகள் பெறப்பட்டு பேராதனை மிருகவியல் ஆராய்ச்சி நிலையத்தால் நோய் உறுதிப்படுத்தப்பட்டமையை தொடர்ந்து இப்பண்ணைகளை உடனடியாக மூடி பண்ணையின் சகல நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கான நீதிமன்ற

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை Read More »

நெடுந்தீவு பிரதேச மக்கள் முன்வைத்த சில கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வை ஆளுநர் வழங்கினார்

நெடுந்தீவு பிரதேச மக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், சில விடயங்களுக்கு உடனடியாகத் தீர்வை வழங்கியதுடன் வேறு சில விடயங்கள் நீண்ட கால அடிப்படையில் தீர்வை வழங்குவதாகத் தெரிவித்தார். நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் 05.03.2025 அன்று புதன்கிழமை  மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலர், அமைச்சுக்களின் செயலர்கள், திணைக்களத் தலைவர்கள், மத்திய அரசின் திணைக்களத் தலைவர்களும்

நெடுந்தீவு பிரதேச மக்கள் முன்வைத்த சில கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வை ஆளுநர் வழங்கினார் Read More »

நெடுந்தீவில் அமைக்கப்பட்டுவரும் கலப்பு மின்உற்பத்தி நிலையத்தின் கட்டுமானங்களை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நெடுந்தீவில் அமைக்கப்பட்டுவரும் கலப்பு மின்உற்பத்தி நிலையத்தின் கட்டுமானங்களை இன்று புதன்கிழமை (05.03.2025) பார்வையிட்டதுடன், நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் குறைகேள் சந்திப்பில் பங்குகொள்வதற்காக ஆளுநர் நெடுந்தீவுக்குச் சென்றிருந்தார். இதன்போது மாவிலித்துறை – பெரியதுறை வீதியில் ஒரு பகுதி திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய பகுதி மிகமோசமாக பயன்படுத்த முடியாத நிலைமை இருப்பதை ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.

நெடுந்தீவில் அமைக்கப்பட்டுவரும் கலப்பு மின்உற்பத்தி நிலையத்தின் கட்டுமானங்களை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார் Read More »

நாதஸ்வர வித்துவான் இ.கேதீஸ்வரனின், ‘தமிழர் செவ்வியல் இசையும் நாகசுர தவில் நிகழ்த்துகையும்’ நூல் வெளியீடு

நாதஸ்வர வித்துவான் இ.கேதீஸ்வரனின், ‘தமிழர் செவ்வியல் இசையும் நாகசுர தவில் நிகழ்த்துகையும்’ நூல் வெளியீடு 02.03.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தார். ‘நூலாசிரியர் கேதீஸ்வரன் எனது ஊரவன். அவரும் நானும் ஒரே பாடசாலையில் (தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி) கல்வி பயின்றவர்கள். கலைவித்துவான்கள் பலரையும் கொண்டது எங்கள் அளவெட்டி மண். இடப்பெயர்வால் அவை எல்லாம்

நாதஸ்வர வித்துவான் இ.கேதீஸ்வரனின், ‘தமிழர் செவ்வியல் இசையும் நாகசுர தவில் நிகழ்த்துகையும்’ நூல் வெளியீடு Read More »