அபிவிருத்தித் திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுப்பதற்குத் தேவையான மனிதவளத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்
வடக்கு மாகாணத்துக்கு நடப்பு ஆண்டில் பல்வேறு மூலங்களிலிருந்தும் பெருமளவிலான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறவுள்ள நிலையில், அவற்றினூடான மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுப்பதற்குத் தேவையான மனிதவளத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று திங்கட்கிழமை (23.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதி, டித்வா பேரிடர் […]
