Balasingam Kajenderan

அபிவிருத்தித் திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுப்பதற்குத் தேவையான மனிதவளத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்துக்கு நடப்பு ஆண்டில் பல்வேறு மூலங்களிலிருந்தும் பெருமளவிலான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறவுள்ள நிலையில், அவற்றினூடான மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுப்பதற்குத் தேவையான மனிதவளத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று திங்கட்கிழமை (23.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதி, டித்வா பேரிடர் […]

அபிவிருத்தித் திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுப்பதற்குத் தேவையான மனிதவளத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் Read More »

2026ஆம் ஆண்டுக்கான வலயங்களுக்கிடையிலான வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான திருத்தப்பட்ட பட்டியல் மூன்று கட்டங்களாக வெளியிடப்படும் – வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்

வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான வலயங்களுக்கிடையிலான வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான திருத்தப்பட்ட பட்டியல்கள் நாளை செவ்வாய்க்கிழமை (24.02.2026) முதல் மூன்று கட்டங்களாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் பிரசுரிக்கப்பட்ட வருடாந்த இடமாற்றத்துக்கான ‘சேவையின் தேவை கருதிய’ இடமாற்றப் பட்டியலில் காணப்பட்ட குறைபாடுகள் சீர்செய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்படவுள்ளது. ஆசிரியர் சங்கங்களை உள்ளடக்கிய மேன்முறையீட்டுச் சபையூடாக மேன்முறையீட்டுச் செயற்பாடுகள்

2026ஆம் ஆண்டுக்கான வலயங்களுக்கிடையிலான வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான திருத்தப்பட்ட பட்டியல் மூன்று கட்டங்களாக வெளியிடப்படும் – வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் Read More »

ஆளுமையுடன் கூடிய முழுமையான கல்வியைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களே நாளை சிறந்த தலைவர்களாக மிளிர்வார்கள் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாக உயர் பதவிகளை, இம்மாவட்டத்தைச் சேர்ந்த இன்றைய மாணவர்களே எதிர்காலத்தில் அலங்கரிக்க வேண்டும் எனவும், அதற்காகக் கல்வியுடன் மாத்திரமன்றி ஆளுமையையும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். முல்லைத்தீவு மாவட்ட செயலகம், முல்லைத்தீவு மாவட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான நம்பிக்கை நிதியம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கம் ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ‘பண்டாரவன்னியன் நினைவு சதுரங்க மற்றும் பேச்சுப் போட்டி –

ஆளுமையுடன் கூடிய முழுமையான கல்வியைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களே நாளை சிறந்த தலைவர்களாக மிளிர்வார்கள் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டம், இவ்வாண்டும் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டத்தை, இவ்வாண்டு மேலும் விரிவாக்கி வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கடந்த ஆண்டு இறுதியில் தெல்லிப்பழை மானிடம் அறக்கட்டளையின் கோரிக்கைக்கு அமைவாக உருவாக்கப்பட்ட குளங்களைத் தூர்வாருவதற்கான செயற்றிட்டத்தை, இவ்வாண்டும் தொடர்ச்சியாகச் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். குளங்களைத் தூர்வாருவதன் ஊடாக வெள்ளப்பெருக்கைக்

கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டம், இவ்வாண்டும் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

கல்லுண்டாய் பகுதி மக்கள் மழைக் காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. கல்லுண்டாயில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் ஒவ்வொரு மழைக் காலத்திலும் வெள்ளப் பெருக்குக் காரணமாக இடம்பெயரும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், இது தொடர்பில் இலங்கை பொறியியலாளர் சங்கத்தின்

கல்லுண்டாய் பகுதி மக்கள் மழைக் காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதற்காக இந்திய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி ஆகியோர், வடக்கு மாகாண ஆளுநரை இன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினார். Read More »

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மீதான ஈர்ப்பை இளையோரிடத்தில் தூண்டும் வகையில் பலாலி விமான நிலையத்தில் விசேட காட்சிக்கூடமொன்றை நிறுவுவதற்கும் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானம்.

வடக்கு மாகாணத்தில் கிராமப்புறங்களிலுள்ள இளையோரிடத்திலும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த கல்விகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பரந்தளவிலான செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கும், இத்துறை மீதான ஈர்ப்பை இளையோரிடத்தில் தூண்டும் வகையில் பலாலி விமான நிலையத்தில் விசேட காட்சிக்கூடமொன்றை நிறுவுவதற்கும் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ அநுர கருணாதிலக, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்துப்

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மீதான ஈர்ப்பை இளையோரிடத்தில் தூண்டும் வகையில் பலாலி விமான நிலையத்தில் விசேட காட்சிக்கூடமொன்றை நிறுவுவதற்கும் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானம். Read More »

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோரை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவினர் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டனர்.

வடக்கு மாகாண இளைஞர்களிடையே சிவில் விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த கல்விகளை ஊக்குவிக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடலும், அதனைத் தொடர்ந்து பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான நேரடி களப் பயணமும் இன்று வியாழக்கிழமை (19.02.2026) இடம்பெற்றன. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ அநுர கருணாதிலக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துப் கௌரவ பிரதி அமைச்சர் பொறியியலாளர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ்.மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோரை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவினர் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டனர். Read More »

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் வவுனியா மாநகரசபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) திருமதி சிவச்செல்வன் சிவரஞ்சினி நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (19.02.2026) காலை நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். இந்நியமனமானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகர சபையின் ஆணையாளராகப் பொறுப்பேற்கவுள்ள திருமதி சிவச்செல்வன் சிவரஞ்சினி, இதற்கு முன்னர் வவுனியா மாவட்ட தொழில் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகக் கடமையாற்றியவர் என்பது

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் வவுனியா மாநகரசபைக்கு புதிய ஆணையாளர் நியமனம் Read More »

மல்லாவி ஆதார மருத்துவமனைக்கு கௌரவ ஆளுநர் களவிஜயம் மேற்கொண்டார்

மல்லாவி ஆதார மருத்துவமனையில் நீண்டகாலமாக நிலவும் கழிவு நீர் வாய்க்கால் பிரச்சினைக்குத் தீர்வுகாண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்காக மாங்குளத்துக்குக் கொண்டு செல்வதற்குரிய வாகன வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார். மல்லாவி ஆதார மருத்துவமனையின் செயற்பாடுகள் மற்றும் தேவைப்பாடுகளைக் கண்டறிவதற்காக, இன்று புதன்கிழமை (18.02.2026) மாலை ஆளுநர் அங்கு நேரடிப் பயணத்தை மேற்கொண்டார். இதன்போது மருத்துவமனையில் இயங்கிவரும் சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு

மல்லாவி ஆதார மருத்துவமனைக்கு கௌரவ ஆளுநர் களவிஜயம் மேற்கொண்டார் Read More »