கிராமிய அபிவிருத்தித் திணைக்களம் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அந்த இலக்கை இன்னமும் முழுமையாக அடையவில்லை – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார்
கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தை காலம் கடந்த அல்லது செயலிழந்த ஒரு திணைக்களமாகத் தொடர்ந்தும் அடையாளப்படுத்துவதைத் தவிர்த்து, அதனை மாற்றியமைக்கத் தூரநோக்குடன் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இம்முயற்சிகள் வெறும் ஆய்வுகளோடு நின்றுவிடாமல் செயல்வடிவம் பெற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாண கிராமிய வளர்ச்சியின் எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடலும், அது சார்ந்த ஆய்வின் வெளியீட்டு நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை (05.12.2025) […]
