‘மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இந்த அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். – ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் எமது திட்டங்களுக்கான நிதியை குறைக்காது விடுவித்துள்ளமையானது, இவ்வரசாங்கத்தின் சிறப்பான நிதி முகாமைத்துவத்தை வெளிப்படுத்துவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று (20.12.2025) சனிக்கிழமை காலை வடக்கு […]
