பல இடங்களில் அரச நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள் பாவனையற்ற நிலையில் உள்ளன; புதிய கட்டடங்கள் அமைப்பதை தவிர்த்து, பாவனையற்றுள்ள கட்டடங்களைப் புனரமைத்துப் பயன்படுத்துங்கள். – வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
அரசாங்கத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டுமாயின் சரியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். எனவே, பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்களுடன் கலந்தாலோசித்து, அவர்களுடன் இணைந்து உண்மையான பயனாளிகளைத் தெரிவு செய்யுங்கள். அதன் மூலமே இத்திட்டங்களின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் […]
