யாழ்ப்பாணத்தை முன்மாதிரி சுகாதார நகரமாக மாற்றும் திட்டத்தில், நடைமுறைச் சாத்தியமான விடயங்களை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும். – கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்குத் பணிப்புரை
யாழ்ப்பாணத்தை முன்மாதிரி சுகாதார நகரமாக மாற்றும் திட்டத்தில், வெறும் பேச்சுக்களை விடுத்து நடைமுறைச் சாத்தியமான விடயங்களை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும். அடுத்த கலந்துரையாடலுக்கு முன்னதாக, உறுதியான முன்னேற்றங்களை காண்பிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் திட்டவட்டமான பணிப்புரையை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் சுகாதார நகரத் திட்டம் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி ராஜேஸ் பாண்டேவ் அவர்களின் பங்கேற்புடன், இன்று (22.12.2025) திங்கட்கிழமை மாலை ஆளுநர் […]
