Balasingam Kajenderan

புங்குடுதீவு மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் இ.இளங்கோவன் அவர்களின் மணிவிழாவும் சேவைநலன் பாராட்டு விழாவும்

புங்குடுதீவு மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் இ.இளங்கோவன் அவர்களின் மணிவிழாவும் சேவைநலன் பாராட்டு விழாவும் அம்பலவாணர் கலையரங்கில் 25.05.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை பேராசிரியர் கா.குகபாலன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் பிரதம செயலர் இ.இளங்கோவன் மற்றும் அவர் தம் பாரியார் ஆகியோர் புங்குடுதீவு ஸ்ரீ கணேசா வித்தியாலயத்திலிருந்து விருந்தினர்கள் சகிதம் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் நிகழ்வு மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இதன்போது யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்த நூறு மாணவர்களால் மலர்மாலை அணிவித்து […]

புங்குடுதீவு மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் இ.இளங்கோவன் அவர்களின் மணிவிழாவும் சேவைநலன் பாராட்டு விழாவும் Read More »

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவதற்கு எதிர்காலத்தில் உயர்பதவிகளில் அமரப்போகும் இன்றைய மாணவர்கள், கல்விக்கு மேலதிகமாக தங்கள் தலைமைத்துவப்பண்புகளையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் இந்தச் சமூகத்துக்கு தேவையானவர்களாக நீங்கள் மாறமுடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில் 25.05.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. Read More »

உயர் தொழில்நுட்பவியல் நிறுவகம் – யாழ்ப்பாணம், நடத்திய கலாசாரப் பெருவிழா ‘தலசம் – 2025’

உயர் பதவிகளில் இருக்கும் பலரிடம் இன்று தலைமைத்துவப் பண்பைக் காணவில்லை. இதனால் மக்களுக்கு அரசாங்கச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சினை வடக்கு மாகாணத்துக்குரியது மாத்திரமல்ல, இது ஒட்டுமொத்த நாட்டுக்கும் உரிய பிரச்சினை. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். உயர் தொழில்நுட்பவியல் நிறுவகம் – யாழ்ப்பாணம், நடத்திய கலாசாரப் பெருவிழா ‘தலசம் – 2025’ என்னும் தலைப்பில் 25.05.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.

உயர் தொழில்நுட்பவியல் நிறுவகம் – யாழ்ப்பாணம், நடத்திய கலாசாரப் பெருவிழா ‘தலசம் – 2025’ Read More »

அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்தும் ‘சிலப்பதிகார விழா 2025’

அறம் பிழைத்தால் தண்டிக்கப்படுவோம் என்ற உண்மையைச் சொல்லும் காப்பியங்களை, இந்தத் தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லும் வகையில் சிலப்பதிகார விழாக்களை நடத்தும் அகில இலங்கை இளங்கோ கழகத்தை பாராட்டுவதுடன் இந்தப் பணிகளை தொய்வின்றி எடுத்துச் செல்லவும் அவர்களை வேண்டுகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்தும் ‘சிலப்பதிகார விழா 2025’ துன்னாலை வடிவேலர் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. 24.05.2025 அன்று சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள்

அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்தும் ‘சிலப்பதிகார விழா 2025’ Read More »

வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப்பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக அதனை மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும், சட்டவிரோத உணவகம் அமைக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின் செயற்பாடு தொடர்பில் விசாரணைக் குழு அமைக்குமாறும் தமிழ்ச் சைவப்பேரவையினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களைச் சந்தித்து வலியுறுத்தி மனுவைக் கையளித்தனர். வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப்பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் 24.05.2025 அன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இந்தச்

வடக்கு மாகாண ஆளுநருக்கும் தமிழ்ச் சைவப்பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு Read More »

மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வுகள் இந்திரவதனி கலையரங்கில் இடம்பெற்றது.

நான் 4 மாவட்டங்களில் மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய காலத்தைவிட இந்தப் பாடசாலையில் 4 ஆண்டுகள் இரசாயனவியல் ஆசிரியராகக் கடமையாற்றிய காலமே என் வாழ்வில் பொற்காலம். இன்றும் மறக்க முடியாத காலம். என்னிடம் கற்ற மாணவர்கள் உயர் பதவிகளில் இருப்பதைப்பார்க்கும் போது பெருமையாக இருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தேசியப் பாடசாலையான முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வுகள் பாடசாலையின் அதிபர் து.யேசுதானந்தர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (23.05.2025)

மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வுகள் இந்திரவதனி கலையரங்கில் இடம்பெற்றது. Read More »

யோகபுரம் மகாவித்தியாலயத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் கண்காணிப்பு பயணம்

முல்லைத்தீவு யோகபுரம் மகாவித்தியாலயத்துக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (23.05.2025) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். ஆளுநர் அவர்களை, பாடசாலை அதிபர் வரவேற்றதுடன் பாடசாலையைச் சுற்றிக் காண்பித்தார். யோகபுரம் மகாவித்தியாலயத்தில் மிகப் பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள மரம் நடுகை மற்றும் தென்னங்கன்றுகள் நடுகை ஆகியனவற்றை ஆளுநர் பார்வையிட்டதுடன், இந்தச் செயற்பாட்டுக்காக பாடசாலைச் சமூகத்துக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

யோகபுரம் மகாவித்தியாலயத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் கண்காணிப்பு பயணம் Read More »

மரம் நடுகை தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

ஆட்களை கழுத்தோடு வெட்டுவதைப்போன்று வீதிகளில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டுகின்றார்கள். அந்த மரங்களை வளர்ப்பதற்கு எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதைப்பற்றிச் சிந்திக்காமல் இவ்வாறு அசிரத்தையாகச் செயற்படுகின்றனர். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மரம் நடுகை தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (22.05.2025) நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபையின் மின்வடங்களுக்கு பாதிப்பு எனத் தெரிவித்து மரங்கள் மற்றும் மரக்கிளைகள் மிகமோசமான முறையில் வெட்டப்படுகின்றமை தொடர்பிலும் அந்தக்

மரம் நடுகை தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Read More »

உலகவங்கிப் பிரதிநிதிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்

கௌரவ ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைவாகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு உலக வங்கி தொடர்ச்சியாக பயணம் மேற்கொண்டு கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாக, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் உலக வங்கிப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வடக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் வலியுறுத்தினார். அத்துடன் விவசாய மற்றும் மீன்பிடி உற்பத்திப் பொருட்கள் மூன்றாம் தரப்பு ஊடாக ஏற்றுமதி செய்யப்படுவதால் உற்பத்தியாளர்கள் உரிய இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையும் ஆளுநர் குறிப்பிட்டார். சிறு கைத்தொழில்துறை

உலகவங்கிப் பிரதிநிதிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மே மாதத்துக்குரிய கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மே மாதத்துக்குரிய கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (22.05.2025) நடைபெற்றது. உள்ளூராட்சி மன்றங்களை தமது சேவைகளை வினைத்திறனாக முன்னெடுக்குமாறும், மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய நிறுவனமாக மாற்றும் வகையில் செயலாற்றுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார். தெருமின்விளக்குகள் பொருத்துவதில் இலங்கை மின்சார சபையுடன் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உள்ள இடர்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. இதன் பின்னர் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்தினதும் முன்னேற்றங்கள் தனித்தனியாக ஆராயப்பட்டன. அதில்

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான மே மாதத்துக்குரிய கலந்துரையாடல் Read More »