இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னைய நிலையை விட மேலோங்கி வர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். – வடக்கு ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
தற்போதைய இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினால் மட்டும் போதாது. அவர்கள் தங்கள் முன்னைய நிலையை விடப் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மேலோங்கி வர வேண்டும் என்பதே மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். அதற்காகவே நாங்கள் அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறோம் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இன்று (12.12.2025) நடைபெற்ற உலக மண் […]
