எல்லைப்புறக் கிராமங்கள் வரை அபிவிருத்தி எட்டப்பட வேண்டும்; உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரிப்பதே இலக்கு” – வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை
வடக்கு மாகாணத்தின் எல்லைப்புறங்கள் மற்றும் காடுகளால் சூழப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் என எவற்றையும் விடுத்துவிடாது, அனைத்துப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் முழுமையான திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாண விவசாயம், கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட கூட்டம், இன்று வியாழக்கிழமை (18.12.2025) மாலை ஆளுநர் […]
