Balasingam Kajenderan

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், ‘யாழ்ப்பாணம் முதலீடு மற்றும் வர்த்தக மன்றம் – 2025’ தலைப்பிலான கலந்துரையாடல்

எமது அதிகாரிகள் ஒரு சிலர் முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கால் இழுத்தடிக்கின்றார்கள் என்பது தெரியும். அதற்காக எமது மாகாணத்துக்கு முதலீடு செய்ய வரும் உங்கள் முயற்சிகளை தயவு செய்து கைவிட்டுவிடாதீர்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை முன்வைத்தார். இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், ‘யாழ்ப்பாணம் முதலீடு மற்றும் வர்த்தக மன்றம் – 2025’ தலைப்பிலான கலந்துரையாடல் அரியாலை ஜே ஹொட்டலில் 30.05.2025 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு […]

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், ‘யாழ்ப்பாணம் முதலீடு மற்றும் வர்த்தக மன்றம் – 2025’ தலைப்பிலான கலந்துரையாடல் Read More »

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மே 2025

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் 30.05.2025 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத் தொடர்ந்து ஆளுநர் அவர்கள் உரையாற்றினார். நடப்பு ஆண்டின் மே மாதமும் நிறைவுகின்றது. மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விரைவாகவும் – வினைத்திறனாகவும் செலவு செய்யவேண்டும்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மே 2025 Read More »

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்ட திட்டத்தின் அறிமுக நிகழ்வு

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்ரேன் (LANTERN – Land and Trust-building Engagement in the Regions of the North & East) திட்டத்தின் அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 29.05.2025 அன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ஐ.நா. வதிவிடப்பிரதிநிதியின் ஆலோசகர் பட்டிரிக், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினர், ஐ.ஓ.எம். நிறுவனத்தினர், யு.என். ஹபிட்டாட் நிறுவனத்தினர்,

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்ட திட்டத்தின் அறிமுக நிகழ்வு Read More »

வேலணை பிரதேசசபையின் ஏற்பாட்டில் ‘உள்ளூராட்சி விழா – 2024’

மக்களுக்கு சேவை செய்வதற்கு உருவாக்கப்பட்ட மன்றங்கள் மக்களின் தேவைகளை அறிந்து தேடிச்சென்று சேவை செய்யவேண்டும். அந்த மன்றங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டால், மக்கள் பங்களிப்புடன் பல்வேறு விடயங்களை அவர்களால் வெற்றிகரமாகச் செயற்படுத்த முடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சபையின் செயலாளர் தி.தியாகச்சந்திரன் தலைமையில் 29.05.2025 அன்று வியாழக்கிழமை வேலணை மத்திய கல்லூரியின் துரைச்சாமி மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி

வேலணை பிரதேசசபையின் ஏற்பாட்டில் ‘உள்ளூராட்சி விழா – 2024’ Read More »

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகரன் தலைமையில் 29.05.2025 அன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் அழைப்பின்பேரில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டார். கூட்டத்தின் ஆரம்பத்தில் வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலர், மாவட்டத்துக்கு அதிகளவு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு திணைக்களங்கள் ஒத்துழைக்கவேண்டும் எனக் கோரினார். அத்துடன் சுமார் 400 காணிப்பிணக்குகள் வரையில் ஆராயப்பட்டு

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் Read More »

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் இணைந்த முகாமைத்துவக்குழுக் கூட்டம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தலைமையில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் இணைந்த முகாமைத்துவக்குழுக் கூட்டம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் 28.05.2025 அன்று புதன்கிழமை நடைபெற்றது. 23.08.2023 திகதி இணைந்த முகாமைத்துவக் கூட்டம் இறுதியாக நடைபெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தை கூட்டுவதற்கான கோரிக்கையை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் முன்வைத்திருந்தார். அதற்கு அமைவாக நேற்றுப் புதன்கிழமை இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தியத் தூதுவர் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயன்

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் இணைந்த முகாமைத்துவக்குழுக் கூட்டம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தலைமையில் நடைபெற்றது. Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவில், சந்திரன் நகர் மாதிரிக் கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு .

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவில், சந்திரன் நகர் மாதிரிக் கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (28.05.2025) இடம்பெற்றது. இந்திய அரசாங்கத்தின் 5 லட்சம் ரூபா நிதியுதவியும், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஒரு லட்சம் ரூபா பங்களிப்புடனும் 24 வீடுகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவில், சந்திரன் நகர் மாதிரிக் கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு . Read More »

இந்திய துணைத்தூதரக அதிகாரி அமரர் பிரபாகரன் அவர்களின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்

இந்திய துணைத்தூதரக அதிகாரி அமரர் பிரபாகரன் சச்சிதானந்தக் குருக்கள் அவர்களின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று புதன்கிழமை (28.05.2025) நேரில் அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டிருந்த சமயம் ஆளுநர் அஞ்சலி செலுத்தியதுடன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய துணைத்தூதரக அதிகாரி அமரர் பிரபாகரன் அவர்களின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார் Read More »

உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர், செயற்றிட்ட தலைவர் உள்ளிட்ட உலக வங்கிக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வடக்கு – கிழக்கு மாகாணங்களை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தபோதும், கொழும்பிலுள்ள சில திணைக்களங்களின் அதிகாரிகள் அவற்றுக்கு முட்டுகட்டைபோடும் விதத்தில் செயற்படுகின்றனர் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டினார். உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் அபிட் கலி செயற்றிட்ட தலைவர் காயத்திரி சிங் உள்ளிட்ட உலக வங்கிக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (28.05.2025) சந்தித்துக்

உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர், செயற்றிட்ட தலைவர் உள்ளிட்ட உலக வங்கிக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »

நோர்வேயின் பிரதித் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் விடுவிக்கப்படுதல் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெமுக்கு சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நோர்வேயின் பிரதித் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில்

நோர்வேயின் பிரதித் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். Read More »