Balasingam Kajenderan

மாங்குளம் முதலீட்டு வலயத்தை விவசாய முதலீட்டு வலயமாக கட்டியெழுப்புவதன் ஊடாக நிலையான வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய செழிப்பையும் ஏற்படுத்த முடியும். – கௌரவ ஆளுநர்

மாங்குளம் முதலீட்டு வலயத்தை விவசாய முதலீட்டு வலயமாக ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) உதவியுடன் கட்டியெழுப்புவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு கௌரவ அமைச்சர் சமந்த வித்யாரத்ன, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் ஆகியோரின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை (31.07.2025) நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் அனைவரையும் வரவேற்ற ஆளுநர் தனது உரையில், வடக்கு […]

மாங்குளம் முதலீட்டு வலயத்தை விவசாய முதலீட்டு வலயமாக கட்டியெழுப்புவதன் ஊடாக நிலையான வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய செழிப்பையும் ஏற்படுத்த முடியும். – கௌரவ ஆளுநர் Read More »

சாவகச்சேரி – பருத்தித்துறை பிரதான வீதியில் 10 மீற்றர் நீளமான வீதி இன்னமும் புனரமைக்கப்படாத நிலையில் கௌரவ ஆளுநர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

சாவகச்சேரியிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் மதகு அமைப்பது தொடர்பாக எழுந்த சர்ச்சையால் 10 மீற்றர் நீளமான வீதி இன்னமும் புனரமைக்கப்படாத நிலையில் உள்ளமை தொடர்பில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் அதனை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை காலை (31.07.2025) நேரடியாகச் சென்று பார்வையிட்டார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், சாவகச்சேரி பிரதேச செயலாளர் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உபதவிசாளர் ஆகியோரும் அங்கு

சாவகச்சேரி – பருத்தித்துறை பிரதான வீதியில் 10 மீற்றர் நீளமான வீதி இன்னமும் புனரமைக்கப்படாத நிலையில் கௌரவ ஆளுநர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார். Read More »

சாவகச்சேரி சமுதாய அடிப்படை வங்கிக்குரிய காணி தொடர்பாக நீண்டகாலம் நிலவிவந்த இழுபறி நிலையில் கௌரவ ஆளுநர் நேரடியாகச் சென்று கலந்துரையாடல் நடத்தினார்.

சாவகச்சேரியில் சமுதாய அடிப்படை வங்கிக்குரிய காணி தொடர்பாக நீண்டகாலம் இழுபறி நிலவிவந்த நிலையில் அது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வியாழக்கிழமை காலை (31.07.2025) நேரடியாகச் சென்று தொடர்புடைய தரப்புக்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். சாவகச்சேரி நகர சபையின் சிறுவர் பூங்காவில் ஒரு பகுதிக் காணியை சமுதாய அடிப்படை வங்கிக்கு வழங்குவதாக கூறப்பட்டிருந்த நிலையில் அந்தக் காணியை ஆளுநர் முதலில் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். அந்தக் காணி சிறுவர் பூங்காவின் தொடர் அபிவிருத்திக்குத்

சாவகச்சேரி சமுதாய அடிப்படை வங்கிக்குரிய காணி தொடர்பாக நீண்டகாலம் நிலவிவந்த இழுபறி நிலையில் கௌரவ ஆளுநர் நேரடியாகச் சென்று கலந்துரையாடல் நடத்தினார். Read More »

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஒழுங்கமைப்பில் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

இப்போது நடைபெறும் விபத்துக்களைப் பார்க்கும்போது, பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் பயணிக்கும் ஏனையோரின் உயிரிலும் கவனமில்லை. தமது உயிரிலும் கவனமில்லை. இதை அறியாமை என்று சொல்வதா அல்லது கவனக்குறைவு என்று சொல்வதா எனத் தெரியவில்லை. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஒழுங்கமைப்பில் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்ப்பாணப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை காலை (30.07.2025) அதிகார சபையின்

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஒழுங்கமைப்பில் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு Read More »

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், றொட்டரி – யாழ்ப்பாணத்துடன் இணைந்து வட மாகாணத்தில் ஏற்றுமதிக்குத் தயாரான உற்பத்தியாளர்களை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

ஏற்றுமதியை அதிகரிக்காமல் வருமானத்தை உயர்த்த முடியாது. ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டுமானால், வடக்கு மாகாணத்தின் மிகச்சிறந்த வளமாக உள்ள விவசாயம் மற்றும் கடற்றொழிலின் உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும். தொழிற்சாலைகள் உருவாக்கப்படுவதன் ஊடாக எமது வேலைவாய்ப்பு பிரச்சினையையும் தீர்க்கக் கூடியதாக இருக்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், றொட்டரி – யாழ்ப்பாணத்துடன் இணைந்து வட மாகாணத்தில் ஏற்றுமதிக்குத் தயாரான உற்பத்தியாளர்களை மேம்படுத்துவது தொடர்பான

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சங்கம், றொட்டரி – யாழ்ப்பாணத்துடன் இணைந்து வட மாகாணத்தில் ஏற்றுமதிக்குத் தயாரான உற்பத்தியாளர்களை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் Read More »

பிரிட்டனைச் சேர்ந்த நிருத்திய சங்கீத கலைக்கூடத்தில் கல்விகற்கும் மாணவர்களின் கலை நிகழ்வுகளை உள்ளடக்கிய ‘சிவமயம் 2025’ நிகழ்வு

புலம்பெயர்ந்து சென்றாலும் எமது பாரம்பரிய கலைகளை அழியவிடாது கற்பித்து அடுத்த சந்ததிக்கு கடத்தும் உங்கள் முயற்சிகளை நான் பாராட்டி வாழ்த்துகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பிரிட்டனைச் சேர்ந்த நிருத்திய சங்கீத கலைக்கூடத்தில் கல்விகற்கும் மாணவர்களின் கலை நிகழ்வுகளை உள்ளடக்கிய ‘சிவமயம் 2025’ நிகழ்வு, ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையினரின் ஒழுங்குபடுத்தலில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (29.07.2025) ஆலய வளாகத்தில் நடைபெற்றது. அதன் நிறுவுனர் திருமதி ஸ்ரீமதி ராதிகா

பிரிட்டனைச் சேர்ந்த நிருத்திய சங்கீத கலைக்கூடத்தில் கல்விகற்கும் மாணவர்களின் கலை நிகழ்வுகளை உள்ளடக்கிய ‘சிவமயம் 2025’ நிகழ்வு Read More »

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர், இணைத்தலைவர் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் இன்று செவ்வாய்க்கிழமை (29.07.2025) மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆரம்பமானது. தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திணைக்களங்களின் கோரிக்கை, முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை என்பன ஆராயப்பட்டு

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர், இணைத்தலைவர் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது. Read More »

கௌரவ ஆளுநருக்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (29.07.2025) இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவதே தமது இந்தப் பயணத்தின் நோக்கம் என தூதுவர் குறிப்பிட்டார். வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால், வடக்கு மாகாணத்திலுள்ள சில கிராமங்கள் இன்னமும் பின்தங்கியுள்ள நிலையிலேயே உள்ளன என்றும் அங்கு வீதிக் கட்டுமானங்கள் கூட இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன்

கௌரவ ஆளுநருக்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. Read More »

வடக்கில் தொழில்நுட்ப அலுவலர்களுக்கான 66 வெற்றிடங்களை முழுவதுமாக நிரப்புவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாண இலங்கை தொழில்நுட்பவியலாளர் சேவைச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் சேவைநலன் பாராட்டு விழாவும் கே.கே.எஸ். வீதி நாச்சிமார் கோயிலுக்கு அண்மையிலுள்ள திவ்ய மஹாலில் நேற்று சனிக்கிழமை மாலை (26.07.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், விசேட விருந்தினராக ஓய்வுபெற்ற பிரதம செயலாளர் இ.இளங்கோவனும் கலந்துகொண்டனர். ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில் தெரிவித்ததாவது, பல தொழிற்சங்கங்கள் வடக்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் அந்தத் தொழிலுக்குரியனவாக இருக்கின்றன.

வடக்கில் தொழில்நுட்ப அலுவலர்களுக்கான 66 வெற்றிடங்களை முழுவதுமாக நிரப்புவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. – கௌரவ ஆளுநர் Read More »

குறைசொல்பவர்கள் சொல்லிக்கொண்டிருப்பார்கள். சரியானதைச் செய்வதற்கு யாருக்கும் பயப்படத்தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடு. – கௌரவ ஆளுநர்

ஒற்றுமையான சேவைக்காக பல சந்தர்ப்பங்களில் விட்டுக்கொடுப்புடன் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள் செயற்பட்டன. இதனால் போக்குவரத்துச் சம்பந்தமாக எழுந்த பல பிரச்சினைகள் எங்களால் தீர்க்கக் கூடியதாக இருந்தன. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன் தலைமைப் பதவியில் 25ஆண்டுகள் பூர்த்தி செய்தமைக்கான கௌரவிப்பு விழாவும், இணையத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை

குறைசொல்பவர்கள் சொல்லிக்கொண்டிருப்பார்கள். சரியானதைச் செய்வதற்கு யாருக்கும் பயப்படத்தேவையில்லை என்பதே எனது நிலைப்பாடு. – கௌரவ ஆளுநர் Read More »