Balasingam Kajenderan

பண்டாரவன்னியன் ஞாபகார்த்த சதுரங்க போட்டி வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், முல்லைத்தீவு மாவட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான நம்பிக்கை நிதியம், முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கம் ஆகியன இணைந்து முல்லைத்தீவு மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கு இடையே முதல் தடவையாக நடத்தும், தேசியவீரன் பண்டாரவன்னியனின் ஞாபகார்த்த முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க போட்டி முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை காலை (16.08.2028) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றிய ஆளுநர், சதுரங்க விளையாட்டில் ஈடுபடுவதால் கல்விக்கு எந்தவொரு […]

பண்டாரவன்னியன் ஞாபகார்த்த சதுரங்க போட்டி வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

“நீர் எங்கள் உயிர் நாடி” என்னும் தொனிப் பொருளிலான கண்காட்சியை ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெரும் திருவிழா காலத்தில் ‘நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி’ என்னும் தொனிப்பொருளில், நல்லூர் பாரதியார் சிலைக்கு அண்மையாகவுள்ள நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை மாலை (15.08.2025) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாளை சனிக்கிழமையிலிருந்து கண்காட்சி நிறைவு நாளான 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை வரையில் காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையில் கண்காட்சியை மக்கள் பார்வையிட

“நீர் எங்கள் உயிர் நாடி” என்னும் தொனிப் பொருளிலான கண்காட்சியை ஆளுநர் ஆரம்பித்து வைத்தார் Read More »

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பண்பாட்டு விழாவில் கௌரவ ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்

எமது பிரதேசங்களில் சமூகப்பிறழ்வுகள் கடந்த காலங்களில் திட்டமிட்ட ரீதியில் ஊக்குவிக்கப்பட்டன. ஆனால் எதிர்காலத்தில் அவ்வாறு நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்று நான் நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை (15.08.2025) அமரர் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அரங்கில் பிரதேச செயலர் த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கலைஞர்களுக்கான விருதுகளையும் வழங்கிக் கௌரவித்தார். ஆளுநர் தனது உரையில்,

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பண்பாட்டு விழாவில் கௌரவ ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார் Read More »

நாம் வாசிப்பதால் ஒருபோதும் குறைந்துவிடப்போவதில்லை. நம் அறிவுதான் விருத்தியடைகின்றது – கௌரவ ஆளுநர்

புத்தகங்களின் முக்கியத்துவத்தை நாம், யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து புரிந்துகொள்ளலாம். யாழ்ப்பாணத்தில் எவ்வளவோ கட்டடங்கள் இருந்தும் அன்று ஏன் நூல் நிலையத்தை பல ஆயிரம் புத்தகங்களோடு தீயிட்டு எரித்தார்கள் என்பதைச் சிந்தித்தோம் என்றால், புத்தகங்களின் அருமை எமக்குத் தெரியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணத் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில், யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்துறை மன்றமும், எங்கட புத்தகங்கள் அமைப்பும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இரண்டாவது சர்வதேச புத்தகக் கண்காட்சியை இன்று வெள்ளிக்கிழமை

நாம் வாசிப்பதால் ஒருபோதும் குறைந்துவிடப்போவதில்லை. நம் அறிவுதான் விருத்தியடைகின்றது – கௌரவ ஆளுநர் Read More »

தனிநபர் ஒவ்வொருவரிலிருந்தும் மாற்றம் ஆரம்பிக்கப்படவேண்டும். இதுவே ‘தூய்மை இலங்கை’ என்ற திட்டத்தின் அடிநாதமாகும் – கௌரவ ஆளுநர்

சட்டத்தை மதிக்கின்ற சமூகமாக நாங்கள் மாறவேண்டும். தனிநபர் ஒவ்வொருவரிலிருந்தும் மாற்றம் ஆரம்பிக்கப்படவேண்டும். அதுவே ‘தூய்மை இலங்கை’ என்ற திட்டத்தின் அடிநாதமாக இருக்கின்றது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘தூய்மை இலங்கை’ (Clean Srilanka) எண்ணக் கருவை ஊக்குவிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் – நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவுடன் இணைந்ததாக ‘இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு’ என்ற தொனிப்பொருளில் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக ஜனாதிபதி செயலகம், வடக்கு

தனிநபர் ஒவ்வொருவரிலிருந்தும் மாற்றம் ஆரம்பிக்கப்படவேண்டும். இதுவே ‘தூய்மை இலங்கை’ என்ற திட்டத்தின் அடிநாதமாகும் – கௌரவ ஆளுநர் Read More »

‘தூய்மை இலங்கை’ என்ற எண்ணக் கருவின் கீழ், ‘இதயபூர்வமாக யாழ்ப்பாணத்துக்கு’ என்ற தொனிப்பொருளில், விழிப்புணர்வுச் செயலமர்வு வடக்கு மாகாண பேரவைச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

‘தூய்மை இலங்கை’ (Clean Srilanka) என்ற எண்ணக் கருவை ஊக்குவிக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் – நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவுடன் இணைந்ததாக ‘இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு’ என்ற தொனிப்பொருளில் அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு கைதடியிலுள்ள வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை (14.08.2025) நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர்

‘தூய்மை இலங்கை’ என்ற எண்ணக் கருவின் கீழ், ‘இதயபூர்வமாக யாழ்ப்பாணத்துக்கு’ என்ற தொனிப்பொருளில், விழிப்புணர்வுச் செயலமர்வு வடக்கு மாகாண பேரவைச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. Read More »

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் வசித்து வந்தோருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் 53 ஆண்டுகளாக, காணி உறுதியில்லாமல் வாழ்ந்து வந்த மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் காலத்தில் விடிவு கிடைத்துள்ளது. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு முதல் முறையாக இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் வசித்து வரும் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த 32 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் வசித்து வந்தோருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன Read More »

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்படவேண்டும் – கௌரவ ஆளுநர் வலியுறுத்தல்

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்படவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அடுத்த மாத இறுதியிலிருந்து அதனை இயக்குவதாக வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டமைக்கு நன்றிகளையும் தெரிவித்தார். பொருளாதார மத்திய நிலையத்தை மீளச் செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (12.08.2025) நடைபெற்றது. யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத்

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்படவேண்டும் – கௌரவ ஆளுநர் வலியுறுத்தல் Read More »

கௌரவ ஆளுநருக்கும் மன்னார் நகர சபை, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்களுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், மன்னார் நகர சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை (11.08.2025) நடைபெற்றது. மன்னார் நகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அவசரம் தேவை என்றும் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மாந்தை மேற்கு பிரதேசசபையின் வருமானத்தை அதிகரிப்பதற்குரிய வேலைத் திட்டங்களுக்கு உதவிகளை

கௌரவ ஆளுநருக்கும் மன்னார் நகர சபை, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்களுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. Read More »

உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுப்பதற்கு அடையாளம் காணப்பட்ட திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் உள்ளடக்கப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் (08.08.2025) நடைபெற்றது. கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. உலக வங்கியால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் கடந்த ஜூன் மாதம்

உலக வங்கியின் உதவியுடன் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »