Balasingam Kajenderan

பிரித்தானிய இளவரசி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வரவேற்பு

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள  பிரித்தானிய இளவரசி ஆன் (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence)  உள்ளிட்ட குழுவினர் இன்று (11.01.2024) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். யாழ்ப்பாணம் நாவாந்துறை பொது மைதானத்தை வந்தடைந்த இளவரசி ஆன் உள்ளிட்ட குழுவினருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது. […]

பிரித்தானிய இளவரசி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வரவேற்பு Read More »

இந்திய துணைத்தூதுவர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்தார்

இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ் நடராஜ் அவர்கள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றது. நாகபட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பித்தல், பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகள், சுற்றுலா துறை அபிவிருத்திகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.  

இந்திய துணைத்தூதுவர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்தார் Read More »

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்தார்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (10.01.2024) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை தொடர்பில் கௌரவ ஆளுநர் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். நாட்டில் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என கௌரவ ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் வடக்கில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள  பசுமை

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்தார் Read More »

ஐந்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் இன்று (10.01.2024)  அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இந்த இணையதளங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. வேலணை, வலிகாமம் மேற்கு, நெடுந்தீவு, வடமராட்சி தெற்கு, மேற்கு ஆகிய  பிரதேச சபைகளுக்கும், பருத்தித்துறை நகர சபைக்குமான உத்தியோகப்பூர்வ இணைய தளங்களும் இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டன. மக்களுக்காக சேவை புரியக்கூடிய உள்ளுராட்சி நிறுவனங்கள் இவ்வாறு

ஐந்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் அங்குரார்ப்பணம் Read More »

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

நாட்டில் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்படும் சூழ்நிலையில், மதங்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, வழிபாட்டு தலங்களுக்கான அன்பளிப்புகளை வழங்கும் போதே கௌரவ ஆளுநர் இதனை கூறினார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் ஒதுக்கீட்டின் கீழ் மத வழிபாட்டு தலங்களுக்கான  அன்பளிப்புகளை கையளிக்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (09.01.2024) நடைபெற்றது. நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் கோவில், ஆவரங்கால் சிவன் கோவில்,

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை அவசியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

யாழ் மாவட்ட தொழில்முனைவோர்,தொழிலதிபர்கள், ஜனாதிபதியை சந்தித்தனர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள், அதிமேதகு ஜனாதிபதி அவர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்றிரவு (06.01.2024) சந்தித்து கலந்துரையாடினார்.    

யாழ் மாவட்ட தொழில்முனைவோர்,தொழிலதிபர்கள், ஜனாதிபதியை சந்தித்தனர் Read More »

யாழ் சட்டத்தரணிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தணிகள் சிலர், அதிமேதகு ஜனாதிபதி அவர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்றிரவு சந்தித்து கலந்துரையாடினார்.  

யாழ் சட்டத்தரணிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் Read More »

அகிலத் திருநாயகியை, அதிமேதகு ஜனாதிபதி நேரில் சந்தித்துப் பாராட்டினார்

பிலிப்பைன்சில் நடைபெற்ற 22 ஆவது மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவை சேர்ந்த அகிலத் திருநாயகி அவர்கள், அதிமேதகு ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு (06/01/2024) இந்த கௌரவிப்பு இடம்பெற்றது.    

அகிலத் திருநாயகியை, அதிமேதகு ஜனாதிபதி நேரில் சந்தித்துப் பாராட்டினார் Read More »

யாழ்.மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயத்திற்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

சுமார் 28 வருடங்களின் பின்னர் பாதுகாப்பு படையினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட யாழ்.மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிக்க இலங்கை விமானப்படை முன்வந்துள்ளது. அதற்கமைய குறித்த பிரதான மண்டபக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (06.01.2024) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை விமானப்படையின் வான்வெளிப் பொறியியல் துறையின் பணிப்பாளர் நாயகம் ஏயார் வைஸ் மார்சல் முதித்த மஹவத்தகே, திட்ட இணைப்பாளர் குரூப் கப்டன் துஷார பண்டார, இலங்கை

யாழ்.மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயத்திற்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

கௌரவ ஆளுநருடன் இணைந்து அடுத்த ஐந்துவருடங்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை சமர்பிக்குமாறு அதிமேதகு ஜானதிபதி வவுனியாவில் தெரிவிப்பு

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதி செயலாளர், வட மாகாண பிரதம செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மூன்று மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான எதிர்கால திட்டங்கள், மாவட்டங்களில் எதிர்நோக்க்கப்படும் சவால்கள்

கௌரவ ஆளுநருடன் இணைந்து அடுத்த ஐந்துவருடங்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை சமர்பிக்குமாறு அதிமேதகு ஜானதிபதி வவுனியாவில் தெரிவிப்பு Read More »