வடமாகாண விவசாயிகளுக்கு அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சரிடம் ஆளுநர் கோரிக்கை.
கடந்த 2023.10.15 அன்று யாழ் மாவட்ட செயலகத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் தொடர்பாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் உரையாற்றிய வடமாகாண ஆளுநர் வடமாகாணத்திலுள்ள விவசாயம் தொடர்பான பிரச்சனைகள் பலவற்றை அமைச்சருக்கு சுட்டிக்காட்டினர். இந்த தருணம் விவசாய அமைச்சரோடு சேர்ந்து செயற்படுத்துவதற்கு உகந்த தருணமாக இருக்கின்றது என்று கூறிய ஆளுநர் மேலும் வடக்கு மாகாணத்தில் விவசாயத்துறையில் விவசாய உத்தியோகத்தர்கள் – 20, […]
