June 2026

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவருக்கும் கௌரவ ஆளுநருக்குமிடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது.

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று (08.06.2026) திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற்றிட்டங்களுக்குக் ஆளுநர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். மத்திய கிழக்குப் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம் மற்றும் அதனால் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் […]

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவருக்கும் கௌரவ ஆளுநருக்குமிடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது. Read More »

எந்தவொரு பாடசாலையின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் அதிபரில்தான் தங்கியிருக்கின்றது. – கௌரவ ஆளுநர்.

‘பல்கலைக்கழகத்துக்கு அதிக எண்ணிக்கையான மாணவர்களை அனுப்புவதில் ஒரு பாடசாலைக்குப் பெருமை கிடையாது. எத்தனை மாணவர்களைத் தமது சமூகத்துக்குச் சேவை மனப்பாங்குடன் பணியாற்றுவதற்கு வழங்கியுள்ளோம் என்பதில்தான் ஒரு பாடசாலைக்கு உண்மையான பெருமை கிடைக்கும்’ என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியின் 75ஆவது ஆண்டு ‘பவள விழா’ நிகழ்வுகள் நேற்றும் இன்றும் கோலாகலமாக நடைபெற்றன. இதன் இரண்டாம் நாளான இன்று (06.06.2026) சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற விசேட

எந்தவொரு பாடசாலையின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் அதிபரில்தான் தங்கியிருக்கின்றது. – கௌரவ ஆளுநர். Read More »

‘டித்வா’ பேரிடரின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட பூவரசன்குளம் – செட்டிக்குளம் பிரதான வீதி புனரமைப்புப் பணிகளை கௌரவ ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்

கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘டித்வா’ பேரிடரின்போது மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பூவரசன்குளம் – செட்டிக்குளம் பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. துரிதகதியில் இடம்பெற்று வரும் இந்தச் சீரமைப்புப் பணிகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையிலான விசேட குழுவினர் இன்று (05.06.2026) வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர். ‘டித்வா’ பேரிடரின் கோரத்தாண்டவத்தால், பூவரசன்குளம் – செட்டிக்குளம் பிரதான வீதியின் ஒரு பகுதியில் காணப்பட்ட

‘டித்வா’ பேரிடரின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட பூவரசன்குளம் – செட்டிக்குளம் பிரதான வீதி புனரமைப்புப் பணிகளை கௌரவ ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார் Read More »

செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வட மாகாணத்தின் எல்லைக் கிராமங்களுக்கு கௌரவ ஆளுநர் களவிஜயம்

வவுனியா மாவட்டத்தின் செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாகாணத்தின் எல்லைக் கிராமங்களான குருக்கள்புதுக்குளம், கந்தசாமிநகர், கப்பாச்சி, வீரபுரம் மற்றும் நித்தியநகர் உள்ளிட்ட பின்தங்கிய கிராமங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை (05.06.2026) நேரடியாக பயணம் செய்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்ததுடன், பல நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் வழங்கினார். இந்த விசேட களப் பயணத்தில் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் கௌரவ பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, கௌரவ நாடாளுமன்ற

செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வட மாகாணத்தின் எல்லைக் கிராமங்களுக்கு கௌரவ ஆளுநர் களவிஜயம் Read More »

வடக்கு மாகாண சபையின் வருவாய் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண சபையின் வருவாயை அதிகரிப்பதன் ஊடாகவே எமது மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை மேலும் விரிவாக்கிக் கொள்ள முடியும் எனவும், எனவே வருவாய் ஈட்டக்கூடிய அனைத்துத் திணைக்களங்களும் தமக்கான இலக்குகளை நிர்ணயித்துச் செயற்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண சபையின் வருவாய் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (04.06.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் தலைமையேற்று உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் வருவாய் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் Read More »

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (04.06.2026) வியாழக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது, ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், வடக்கு மாகாணத்தின் கல்வித்துறையை மேலும் மேம்படுத்துவதற்கான பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன. இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் ஆலோசகர், தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண வெசாக் உற்சவம்’, வவுனியா, பரக்கும் மகாவித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட செய்திகள் முற்றுமுழுதான பொய் என்பதை வவுனியாவில் நடைபெற்ற இந்த வெசாக் உற்சவம் தெளிவாக நிரூபித்துக் காட்டுகின்றது. பொய் பரப்புபவர்கள் வார்த்தைகளால் பிரிக்க முயல்கிறார்கள், நாம் செயலால் இணைகிறோம்; அதுவே எமது பதில், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்ட

வடக்கு மாகாண வெசாக் உற்சவம்’, வவுனியா, பரக்கும் மகாவித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. Read More »

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகக் கையளிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், மேலும் பல திட்டங்கள் தற்பொழுது பரிசீலனையில் உள்ளன. இதற்காக இந்தியாவுக்கு வடக்கு மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வளாகத்தில் இந்திய அரசாங்கத்தின் விசேட நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகக் கையளிக்கும் நிகழ்வு

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகக் கையளிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது Read More »

ஆளுநர் செயலக ஊடக அறிக்கை

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற கௌரவ நீதிபதி அவர்களின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உண்மை நிலைமையைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலுமே ஆளுநர் செயலகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகின்றது.

ஆளுநர் செயலக ஊடக அறிக்கை Read More »