ஆளுநர்

‘பி.எல்.சி. கம்பஸின்’ (BLC Campus) இணைவு விழா (Fusion Fest) வலம்புரி ஹோட்டலில் நடைபெற்றது.

எதிர்காலத்தில் இங்கு முதலீட்டாளர்கள் ஊடாக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்போது அதில் பங்கெடுக்கும் வகையில் எம்மை நாம் தயார்படுத்திக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். ‘பி.எல்.சி. கம்பஸின்’ (BLC Campus) இணைவு விழா (Fusion Fest) வலம்புரி ஹோட்டலில் 07.06.2025 அன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், நிறுவனத்தின் விரிவுரையாளர்களுக்கான கௌரவத்தை வழங்கி வைத்தார். ஆளுநர் தனது உரையில், நாங்கள் கல்வி கற்கின்ற காலத்தில் வாய்ப்புக்கள் மிகக் குறைவு. […]

‘பி.எல்.சி. கம்பஸின்’ (BLC Campus) இணைவு விழா (Fusion Fest) வலம்புரி ஹோட்டலில் நடைபெற்றது. Read More »

சுன்னாகம் பட்டினத்தின் சிற்பியும் தொழிற்சங்கவாதியுமான செனட்டர் பொ.நாகலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கும் நிகழ்வு

எமது மக்களுக்கு வேறு விடயங்கள் இருந்தாலும் அபிவிருத்தி முக்கியம். அதனை உணர்ந்து அன்றே செயற்பட்டவர்தான் செனட்டர் பொ.நாகலிங்கம். அதனால்தான் அவரால் சுன்னாகம் பொதுச்சந்தை மற்றும் சுன்னாகம் பொது நூலகம் என்பவற்றை அபிவிருத்தி செய்ய முடிந்தது. இப்போதும் எமது மக்களுக்கு அபிவிருத்தி முக்கியம் என்பதை உணர்ந்து செயற்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சுன்னாகம் பட்டினத்தின் சிற்பியும் தொழிற்சங்கவாதியுமான செனட்டர் பொ.நாகலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கும் நிகழ்வும், சுன்னாகம் பிரதேச

சுன்னாகம் பட்டினத்தின் சிற்பியும் தொழிற்சங்கவாதியுமான செனட்டர் பொ.நாகலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கும் நிகழ்வு Read More »

வலுவிழந்தோர்களுக்கான புனர்வாழ்வு மையம்’ வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

போர் முடிந்த கையோடு பல அமைப்புக்கள் – நிறுவனங்கள் உதவிகளை வழங்குவதற்கு முன்வந்திருந்தாலும் தற்போது நிலைமை அவ்வாறில்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். வன்னி வாழ் மக்களுக்கான மனிதநேய நம்பிக்கை நிதியம், மெத்தா புனர்வாழ்வு நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட ‘வலுவிழந்தோர்களுக்கான புனர்வாழ்வு மையம்’ வடக்கு மாகாண ஆளுநரால் 06.06.2025 அன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் – காணி திருமதி நளாயினி இன்பராஜ்

வலுவிழந்தோர்களுக்கான புனர்வாழ்வு மையம்’ வடக்கு மாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது Read More »

நூலகம் நிறுவனமும், யாழ்ப்பாணம் பொதுநூலகமும் எண்ணிமப்படுத்தல் (டிஜிட்டல் மயமாக்கல்) செயற்றிட்டத்தை எதிர்காலத்தில் இணைந்து செயற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் முன்னாயத்தக் கலந்துரையாடல்

நூலகம் நிறுவனமும், யாழ்ப்பாணம் பொதுநூலகமும் எண்ணிமப்படுத்தல் (டிஜிட்டல் மயமாக்கல்) செயற்றிட்டத்தை எதிர்காலத்தில் இணைந்து செயற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 05.06.2025 அன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது நூலக நிறுவனம் இதுவரை முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டத்தை இணைந்து செயற்படுத்துவதன் ஊடாக கிடைக்கும் நன்மைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் ஆலோசனைக்

நூலகம் நிறுவனமும், யாழ்ப்பாணம் பொதுநூலகமும் எண்ணிமப்படுத்தல் (டிஜிட்டல் மயமாக்கல்) செயற்றிட்டத்தை எதிர்காலத்தில் இணைந்து செயற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் முன்னாயத்தக் கலந்துரையாடல் Read More »

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தின் செயற்கை கருத்தரித்தல் நிலையத்தின் (ஐ.வி.எவ்.) செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தின் செயற்கை கருத்தரித்தல் நிலையத்தின் (ஐ.வி.எவ்.) செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 05.06.2025 அன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்கள் கடந்த காலத்தில் நடைபெற்றிருந்தபோதும், செயற்கை கருத்தரித்தல் நிலையத்தின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த சில சவால்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. ஆளணி வளம் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில்

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தின் செயற்கை கருத்தரித்தல் நிலையத்தின் (ஐ.வி.எவ்.) செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் Read More »

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் புனர்வாழ்வு நிலையத்தை நிரந்தரமாக அமைக்கும் வரையில், இந்த மாத இறுதிக்குள் கைவிடப்பட்ட அரச கட்டடத்தில் தற்காலிகமாக அதனை ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (05.06.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், யாழ். மாவட்டத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு

உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் Read More »

உலக வை.எம்.சி.ஏ கொடி வாரத்தினை முன்னிட்டு யாழ். மாவட்ட வை.எம்.சி.ஏ.யினரால் கொடி வாரத்தின் கொடி வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

உலக வை.எம்.சி.ஏ. வாரம் கடந்த 1ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதி வரை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், யாழ். மாவட்ட வை.எம்.சி.ஏ.யினரால் அதனை முன்னிட்டு நடத்தப்படும் கொடி வாரத்தின் கொடி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு 04.06.2025 அன்று புதன் கிழமை வழங்கி வைக்கப்பட்டது.  

உலக வை.எம்.சி.ஏ கொடி வாரத்தினை முன்னிட்டு யாழ். மாவட்ட வை.எம்.சி.ஏ.யினரால் கொடி வாரத்தின் கொடி வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. Read More »

சமூகசேவை பராமரிப்பு நிலையங்களின் தரத்தை உயர்த்துதல் மற்றும் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் ‘செயற்பாட்டுக்கைநூல்’ தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல்

சமூகசேவை பராமரிப்பு நிலையங்களின் தரத்தை உயர்த்துதல் மற்றும் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் ‘செயற்பாட்டுக்கைநூல்’ தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் 03.06.2025 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன் இந்தச் செயற்பாட்டுக்கைநூல் தொடர்பாக விளக்கமளித்தார். ஆசிய மன்றத்தின் உதவியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளதாக அவர்

சமூகசேவை பராமரிப்பு நிலையங்களின் தரத்தை உயர்த்துதல் மற்றும் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் ‘செயற்பாட்டுக்கைநூல்’ தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் Read More »

குரும்பசிட்டி பொன்.பரமானந்தர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், ‘பரமானந்தம்’ மலர் வெளியீடும்

வடக்கில் ஒவ்வொரு ஆண்டும் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன. தரம் 1 அனுமதிக்காக வரும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. இது எமக்கு ஆபத்தான நிலைமை. அனைவரும் இதனைக் கவனத்திலெடுக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கைவிடுத்தார். குரும்பசிட்டி பொன்.பரமானந்தர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், ‘பரமானந்தம்’ மலர் வெளியீடும் பாடசாலை அதிபர் க.வசந்தரூபன் தலைமையில் 31.05.2025 அன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பரமானந்தம் நூலை வெளியிட்டு வைத்த ஆளுநர், முன்னாள்

குரும்பசிட்டி பொன்.பரமானந்தர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், ‘பரமானந்தம்’ மலர் வெளியீடும் Read More »

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், ‘யாழ்ப்பாணம் முதலீடு மற்றும் வர்த்தக மன்றம் – 2025’ தலைப்பிலான கலந்துரையாடல்

எமது அதிகாரிகள் ஒரு சிலர் முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கால் இழுத்தடிக்கின்றார்கள் என்பது தெரியும். அதற்காக எமது மாகாணத்துக்கு முதலீடு செய்ய வரும் உங்கள் முயற்சிகளை தயவு செய்து கைவிட்டுவிடாதீர்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை முன்வைத்தார். இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், ‘யாழ்ப்பாணம் முதலீடு மற்றும் வர்த்தக மன்றம் – 2025’ தலைப்பிலான கலந்துரையாடல் அரியாலை ஜே ஹொட்டலில் 30.05.2025 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், ‘யாழ்ப்பாணம் முதலீடு மற்றும் வர்த்தக மன்றம் – 2025’ தலைப்பிலான கலந்துரையாடல் Read More »