ஆளுநர்

நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா நடைபெற்றது.

நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, டான் தொலைக்காட்சி குழுமத்தின் ஏற்பாட்டில் அலங்கரிக்கப்பட்ட யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா நேற்று செவ்வாய்கிழமை (23.12.2025) இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மின் அலங்காரத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். நிகழ்வின் ஆரம்பத்தில், நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆளுநர் அவர்கள் அஞ்சலிச் சுடரை ஏற்றி […]

நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா நடைபெற்றது. Read More »

பல இடங்களில் அரச நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள் பாவனையற்ற நிலையில் உள்ளன; புதிய கட்டடங்கள் அமைப்பதை தவிர்த்து, பாவனையற்றுள்ள கட்டடங்களைப் புனரமைத்துப் பயன்படுத்துங்கள். – வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

அரசாங்கத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டுமாயின் சரியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட வேண்டும். எனவே, பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்களுடன் கலந்தாலோசித்து, அவர்களுடன் இணைந்து உண்மையான பயனாளிகளைத் தெரிவு செய்யுங்கள். அதன் மூலமே இத்திட்டங்களின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும்

பல இடங்களில் அரச நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள் பாவனையற்ற நிலையில் உள்ளன; புதிய கட்டடங்கள் அமைப்பதை தவிர்த்து, பாவனையற்றுள்ள கட்டடங்களைப் புனரமைத்துப் பயன்படுத்துங்கள். – வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். Read More »

“யாழ்ப்பாணம்” என்ற வர்த்தக நாமத்தைப் பாதுகாத்து, சுயதொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவோம்! – கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் உள்ளூர் உற்பத்திகளின் தரத்தை உயர்த்தி, சுயதொழில் முயற்சியாளர்களை நேரடி ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அத்துடன், சர்வதேச சந்தையில் போலிப் பொருட்களால் பாதிப்படைந்துள்ள ‘யாழ்ப்பாணம்’ எனும் எமது தனித்துவமான வர்த்தக நாமத்தைப் பாதுகாத்து, எமது உற்பத்திகளைத் தனித்துவத்துடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில், பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி, தேசிய ஒருமைப்பாட்டு தின

“யாழ்ப்பாணம்” என்ற வர்த்தக நாமத்தைப் பாதுகாத்து, சுயதொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவோம்! – கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

“மத்திய அரசின் மேலதிக நிதியைப் பெற இப்போதே தயாராகுங்கள்” – வடக்கு ஆளுநர் அதிகாரிகளுக்கு விடுத்த முக்கிய பணிப்புரை!

வடக்கு மாகாணத்தின் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், வழமையான மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்கு அப்பால், மத்திய அரசாங்கத்தின் நிரல் அமைச்சுக்களிடமிருந்தும் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையில் இப்போதே திட்டங்களைத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தின் நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி,

“மத்திய அரசின் மேலதிக நிதியைப் பெற இப்போதே தயாராகுங்கள்” – வடக்கு ஆளுநர் அதிகாரிகளுக்கு விடுத்த முக்கிய பணிப்புரை! Read More »

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டின் ஊடாக, இதுவரை தொட்டுப்பார்க்கப்பட்டிருக்காத வளங்கள் உரியவாறு பயன்படுத்தப்படும், – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் நம்பிக்கை

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டின் ஊடாக, வடக்கு மாகாணத்தில் இதுவரை தொட்டுப்பார்க்கப்பட்டிருக்காத வளங்கள் உரியவாறு பயன்படுத்தப்படும், என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார். ‘த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை’ (The Management Club – Sri Lanka) அமைப்பின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ‘வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாடு’ (Northern Investment Summit 2026) தொடர்பான விசேட

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டின் ஊடாக, இதுவரை தொட்டுப்பார்க்கப்பட்டிருக்காத வளங்கள் உரியவாறு பயன்படுத்தப்படும், – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் நம்பிக்கை Read More »

யாழ்ப்பாணத்தை முன்மாதிரி சுகாதார நகரமாக மாற்றும் திட்டத்தில், நடைமுறைச் சாத்தியமான விடயங்களை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும். – கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்குத் பணிப்புரை

யாழ்ப்பாணத்தை முன்மாதிரி சுகாதார நகரமாக மாற்றும் திட்டத்தில், வெறும் பேச்சுக்களை விடுத்து நடைமுறைச் சாத்தியமான விடயங்களை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும். அடுத்த கலந்துரையாடலுக்கு முன்னதாக, உறுதியான முன்னேற்றங்களை காண்பிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் திட்டவட்டமான பணிப்புரையை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் சுகாதார நகரத் திட்டம் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி ராஜேஸ் பாண்டேவ் அவர்களின் பங்கேற்புடன், இன்று (22.12.2025) திங்கட்கிழமை மாலை ஆளுநர்

யாழ்ப்பாணத்தை முன்மாதிரி சுகாதார நகரமாக மாற்றும் திட்டத்தில், நடைமுறைச் சாத்தியமான விடயங்களை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும். – கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்குத் பணிப்புரை Read More »

பாதிக்கப்பட்ட மக்கள் விவரம் தந்தால் பதிவு செய்வோம், தராவிட்டால் விட்டுவிடுவோம் என்று அலுவலகத்தில் இருந்து கொண்டு அதிகாரிகள் செயற்பட முடியாது. – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன்

வெள்ளத்தில் தனது உடைமைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்த ஒருவரால் அதிகாரிகளைத் தேடி அலுவலகங்களுக்கு அலைந்து திரிய முடியாது. எனவே, அதிகாரிகளே அந்த மக்களைத் தேடிச் சென்று விவரங்களைச் சேகரிக்க வேண்டும், என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அத்துடன், பொதுமக்கள் தமது விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில் முயற்சிகளைப் பதிவு செய்வதில் காட்டும் அக்கறையின்மையே, அனர்த்தங்களின் போது அவர்களுக்குரிய நிவாரணங்கள் கிடைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு

பாதிக்கப்பட்ட மக்கள் விவரம் தந்தால் பதிவு செய்வோம், தராவிட்டால் விட்டுவிடுவோம் என்று அலுவலகத்தில் இருந்து கொண்டு அதிகாரிகள் செயற்பட முடியாது. – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் Read More »

வரலாற்றுச் சிறப்புமிக்க புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் பிரதமர் வழிபாடு”; ஆலய வரலாறு குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார்

கிளிநொச்சி மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள், மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்கு இன்று (21.12.2025) ஞாயிற்றுக்கிழமை சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். இன்று காலை முதல் கிளிநொச்சியில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர், அதன் ஒரு பகுதியாக வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்துக்கும் வருகை தந்தார். ஆலயத்துக்கு வருகை தந்த பிரதமரை ஆலய நிர்வாகத்தினரும் பொதுமக்களும் வரவேற்றனர். அதனைத்

வரலாற்றுச் சிறப்புமிக்க புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் பிரதமர் வழிபாடு”; ஆலய வரலாறு குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார் Read More »

*இரணைமடு குளத்தை கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

வடக்கு மாகாண விவசாயத்தின் உயிர்நாடியாகத் திகழும் இரணைமடு குளத்தை கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் இன்று (21.12.2025) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டார். இன்று காலை கிளிநொச்சியில் நடைபெற்ற ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர், அதனைத் தொடர்ந்து மதிய வேளையில் இரணைமடு குளத்துக்கு பயணம் மேற்கொண்டார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் குளத்தின் நீர் முகாமைத்துவம் மற்றும் பயன்பாடு

*இரணைமடு குளத்தை கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். Read More »

ஜனாதிபதி நிதியம் இனி வறிய மக்களுக்கே!” – கிளிநொச்சியில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உறுதி

எமது அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்தை முற்றுமுழுதாக வறிய மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தும், என கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட வேலைத்திட்டத்தின் இந்த ஆண்டுக்கான இறுதி நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (21.12.2025) கிளிநொச்சி இரணைமடுவிலுள்ள ‘நெலும் பியச’ கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். கடந்த

ஜனாதிபதி நிதியம் இனி வறிய மக்களுக்கே!” – கிளிநொச்சியில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உறுதி Read More »