ஆளுநர்

“இந்த ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்களை ஓகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும்!” – 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுப் புத்தக வெளியீட்டில் ஆளுநர் வலியுறுத்தல்

2025ஆம் ஆண்டு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எமது வேலைத்திட்டங்களை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றியிருந்தோம். 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2026ஆம் ஆண்டில் அத்தகைய சவால்கள் எமக்கு மிகக் குறைவு. எனவே, இந்த ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 2026ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சபையின் பாதீட்டுப் புத்தகத்தை (நிதிக்கூற்று) உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06.01.2026) காலை […]

“இந்த ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்களை ஓகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும்!” – 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுப் புத்தக வெளியீட்டில் ஆளுநர் வலியுறுத்தல் Read More »

“வடக்கு மாகாணம் சுற்றுலாவிகளுக்குப் பாதுகாப்பான பிரதேசம்; ரஷ்ய முதலீடுகளையும் வரவேற்கின்றோம்!” – ரஷ்யத் தூதுவரிடம் ஆளுநர் தெரிவிப்பு

வெளிநாட்டுச் சுற்றுலாவிகள் தமது விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு, வடக்கு மாகாணம் மிகவும் பாதுகாப்பானதும் அமைதியானதுமான ஒரு பிரதேசமாகும். எனவே, ரஷ்யச் சுற்றுலாவிகளின் வருகையை வடக்குக்குத் திருப்ப உதவுவதுடன், எமது மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளில் ரஷ்ய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதையும் ஊக்குவிக்க வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யனிடம் கோரிக்கை விடுத்தார். இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன், வடக்கு மாகாண ஆளுநரை இன்று திங்கட்கிழமை (05.01.2026)

“வடக்கு மாகாணம் சுற்றுலாவிகளுக்குப் பாதுகாப்பான பிரதேசம்; ரஷ்ய முதலீடுகளையும் வரவேற்கின்றோம்!” – ரஷ்யத் தூதுவரிடம் ஆளுநர் தெரிவிப்பு Read More »

“வடக்கு மாகாண மூலிகைகளை ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும்!” – நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் வலியுறுத்தல்

வடக்கு மாகாணத்திலிருந்து சுதேச வைத்தியத்துறைக்குத் தேவையான மருத்துவ மூலிகைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். அவை எமது மாகாணத்தின் உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையை அடைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சில் இன்று சனிக்கிழமை (03.01.2026) மதியம் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர்

“வடக்கு மாகாண மூலிகைகளை ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும்!” – நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் வலியுறுத்தல் Read More »

“வடக்கு மாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு வலயங்கள்: இம்மாத இறுதியில் சாத்தியவள அறிக்கை கையளிப்பு!” – ஆளுநர் தலைமையில் ஆராய்வு

வடக்கு மாகாணத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மூன்று மிகப் பெரிய முதலீட்டு வலயங்கள் மற்றும் அவற்றில் எதிர்பார்க்கப்படும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று சனிக்கிழமை (03.01.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இம்முதலீட்டு வலயங்கள் தொடர்பான விரிவான சாத்தியவள ஆய்வு அறிக்கையானது, இம்மாத இறுதிக்குள் இலங்கை முதலீட்டுச் சபைக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

“வடக்கு மாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு வலயங்கள்: இம்மாத இறுதியில் சாத்தியவள அறிக்கை கையளிப்பு!” – ஆளுநர் தலைமையில் ஆராய்வு Read More »

“நுண்நிதிக் கடன் பொறியில் இருந்து மக்களைப் பாதுகாக்க கூட்டுறவுத் துறை பலப்படுத்தப்படும்!” – கிளிநொச்சியில் ஆளுநர் உறுதி*

வடக்கு மாகாணத்திலுள்ள சிக்கனக் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்துவது தொடர்பிலும், நுண்நிதிக் கடன் தாக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பது குறித்தும் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02.01.2026) நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இச்சந்திப்பின்போது, சிக்கனக் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்கள் தற்போதைய பொருளாதாரச் சூழலில் எதிர்கொள்ளும் சவால்கள்

“நுண்நிதிக் கடன் பொறியில் இருந்து மக்களைப் பாதுகாக்க கூட்டுறவுத் துறை பலப்படுத்தப்படும்!” – கிளிநொச்சியில் ஆளுநர் உறுதி* Read More »

“பல்கலைக்கழகத்தின் துணையுடன் வடக்கின் விவசாயத்துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம்!” – கிளிநொச்சி விவசாய பீடக் கலந்துரையாடலில் ஆளுநர் அழைப்பு

வடக்கு மாகாணத்தில் நிலைத்து நிற்கக்கூடிய விவசாய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும், அத்துறையின் மேம்பாட்டுக்கும் பல்கலைக்கழகங்கள் எமது திணைக்களங்களுக்குத் தோள் கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறான கூட்டு முயற்சியின் ஊடாக, எதிர்காலத்தில் எமது மாகாணத்தின் விவசாயத் துறையில் சிறப்பானதொரு வளர்ச்சியை எட்ட முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன் என்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள விவசாய பீடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02.01.2025), பீடாதிபதி பேராசிரியர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்ற

“பல்கலைக்கழகத்தின் துணையுடன் வடக்கின் விவசாயத்துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம்!” – கிளிநொச்சி விவசாய பீடக் கலந்துரையாடலில் ஆளுநர் அழைப்பு Read More »

“கல்லாறு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கை!” – கிளிநொச்சியில் அமைச்சர் மற்றும் ஆளுநர் உறுதி

கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அப்பகுதி மக்களின் அடிப்படை உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சருமான இ.சந்திரசேகர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநருமான நா.வேதநாயகன் ஆகியோர் உறுதியளித்தனர். ‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழான நடமாடும் சேவையானது, கல்லாறு

“கல்லாறு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கை!” – கிளிநொச்சியில் அமைச்சர் மற்றும் ஆளுநர் உறுதி Read More »

நிதிப் பயன்பாட்டில் 98% இலக்கை எட்டி தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் முதலிடம்!” – 2026 ஆம் ஆண்டுக்கான கடமை ஆரம்ப நிகழ்வில் பெருமிதம்

2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 98 சதவீதத்துக்கும் அதிகமான நிதியைத் வினைத்திறனாகச் செலவு செய்து, இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சபை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) ஆர்.சிவரூபன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான 2026ஆம்

நிதிப் பயன்பாட்டில் 98% இலக்கை எட்டி தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் முதலிடம்!” – 2026 ஆம் ஆண்டுக்கான கடமை ஆரம்ப நிகழ்வில் பெருமிதம் Read More »

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான அரசாங்கம் ஊழல் ஒழிப்புக்கு மிக உயர்ந்த முன்னுரிமையை அளித்துச் செயற்படுகின்றது. எனவே, எமது மாகாண அரச பணியிலும் ஊழலுக்குச் சிறிதளவேனும் இடமளிக்கக் கூடாது. – ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையிலான அரசாங்கம் எதிர்பார்க்கின்ற, மக்கள் நேய அரச சேவையை வழங்குவதற்கு அனைவரும் இப்புத்தாண்டில் அர்ப்பணிப்புடனும் உத்வேகத்துடனும் பணியாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2026ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (01.01.2026) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுநர் செயலகப் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆளுநர் செயலகப் பணியாளர்கள் முன்னிலையில், ஆளுநர்

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான அரசாங்கம் ஊழல் ஒழிப்புக்கு மிக உயர்ந்த முன்னுரிமையை அளித்துச் செயற்படுகின்றது. எனவே, எமது மாகாண அரச பணியிலும் ஊழலுக்குச் சிறிதளவேனும் இடமளிக்கக் கூடாது. – ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மலர்கின்ற 2026 ஆம் ஆண்டானது, வடக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் இருள் நீங்கி, ஒளி பிறக்கும் ஒரு நம்பிக்கை ஆண்டாக அமைய எனது உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த காலங்களில் இயற்கைப் பேரிடரால் நாம் இழந்தவை ஏராளம். ஆனால், ‘பாதிக்கப்பட்ட வாழ்க்கையைத் பழைய நிலைக்குத் திருப்புவது மட்டும் எமது இலக்கல்ல் அது முன்னரை விடப் பல மடங்கு சிறந்ததாக, வளமானதாக மாற வேண்டும்’ என்பதே எமது புத்தாண்டின் தாரக மந்திரமாகும். இடிந்து போன சுவர்களை

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி Read More »