பேரிடர் வேளையில் சில சபைகள் நிபந்தனை விதித்து நிர்வாகச் சிக்கல்களைக் காரணம் காட்டியதை மன்னிக்க முடியாது. – ஆளுநர் நா.வேதநாயகன் உரை
மக்கள் உயிருக்குப் போராடும் இடர் வேளையில் எரிபொருள் மற்றும் நிதியைக் காரணம் காட்டி பணிகளைத் தாமதப்படுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்றும், சபையில் தீர்மானங்களை நிறைவேற்றுவதன் ஊடாக சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை ஒருபோதும் சட்டபூர்வமாக்கிவிட முடியாது என்றும் வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ மேயர்கள் மற்றும் தவிசாளர்களுக்கான விசேட செயலமர்வு இன்று வெள்ளிக்கிழமை (19.12.2025) கைதடியிலுள்ள உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றபோதே, முதன்மை அதிதியாகக் கலந்துகொண்ட ஆளுநர் […]
