ஆளுநர்

விவசாயிகள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை முறையான சந்தை வாய்ப்பு இல்லாமையாகும். – கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப்பெற வேண்டும் என்பதுடன், அவர்கள் வெறும் உற்பத்தியாளர்களாக மட்டும் நின்றுவிடாமல் தொழில்முனைவோராகவும் மாற்றமடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை விவசாயத் தொழில்முனைவோர் மன்றத்தின் (Sri Lanka Agripreneurs’ Forum – SLAF) ஏற்பாட்டில், யாழ்ப்பாண சேதன விவசாய பொது பட்டியலிடப்படாத நிறுவனம் (Jaffna Organic Farmer Public Unlisted Company) மற்றும் அக்ரோ பெனிபிட் லங்கா […]

விவசாயிகள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை முறையான சந்தை வாய்ப்பு இல்லாமையாகும். – கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத மணல் கடத்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்த கௌரவ ஆளுநரும் கௌரவ அமைச்சரும் பணிப்புரை விடுத்தனர்

அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் ஓய்ந்தாலும், அது விட்டுச்சென்ற சுவடுகளைப் பயன்படுத்தி இடம்பெறும் பகல் கொள்ளையைத் தடுத்து நிறுத்துமாறு, கிளிநொச்சி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் ஆகியோர் இன்று (12.12.2025) வெள்ளிக்கிழமை மாலை, கிளிநொச்சிப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கு நேரில் சென்று,

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத மணல் கடத்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்த கௌரவ ஆளுநரும் கௌரவ அமைச்சரும் பணிப்புரை விடுத்தனர் Read More »

இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னைய நிலையை விட மேலோங்கி வர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். – வடக்கு ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

தற்போதைய இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினால் மட்டும் போதாது. அவர்கள் தங்கள் முன்னைய நிலையை விடப் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மேலோங்கி வர வேண்டும் என்பதே மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். அதற்காகவே நாங்கள் அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறோம் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இன்று (12.12.2025) நடைபெற்ற உலக மண்

இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னைய நிலையை விட மேலோங்கி வர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். – வடக்கு ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். Read More »

மகாகவி பாரதியார் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமூக மாற்றத்துக்கான முற்போக்குச் சிந்தனைகளைத் துணிவுடன் விதைத்தவர் – பாரதியாரின் ஜனன தின நிகழ்வில் ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மகாகவி பாரதியார் நூற்றாண்டுக்கு முன்பே விதைத்துச் சென்ற முற்போக்குச் சிந்தனைகள், இன்றும் எமது சமூகத்தில் முழுமையான செயல்வடிவம் பெறவில்லை என்பதே நிதர்சனம் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஜனன தின நிகழ்வு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (11.12.2025) மாலை நடைபெற்றது. இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சிறீ சாய்முரளி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு, பாரதியாரின்

மகாகவி பாரதியார் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமூக மாற்றத்துக்கான முற்போக்குச் சிந்தனைகளைத் துணிவுடன் விதைத்தவர் – பாரதியாரின் ஜனன தின நிகழ்வில் ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் ‘பொதுமக்கள் தினம்’ எதிர்வரும் திங்கட்கிழமை (15.12.2025) நடைபெறமாட்டாது

வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள், பொதுமக்களை நேரில் சந்திக்கும் வாராந்த ‘பொதுமக்கள் தினம்’ எதிர்வரும் திங்கட்கிழமை (15.12.2025) நடைபெறமாட்டாது என்பதைப் பொதுமக்களுக்கு அறியத் தருகின்றோம். எனினும், அதற்கு அடுத்த வார திங்கட்கிழமை (22.12.2025) வழமை போன்று ஆளுநர் செயலகத்தில் பொதுமக்கள் சந்திப்பு இடம்பெறும். எனவே, பொதுமக்கள் இந்த மாற்றத்தைக் கவனத்திற் கொண்டு, தமது வருகையைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் ‘பொதுமக்கள் தினம்’ எதிர்வரும் திங்கட்கிழமை (15.12.2025) நடைபெறமாட்டாது Read More »

மயிலிட்டி – திருப்பூர் ஒன்றிய மக்களின் நிதிப் பங்களிப்புடனான கற்றல் உபகரணங்கள் அடங்கிய 200 நிவாரணப் பொதிகள் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, கண்டி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்டன.

மயிலிட்டி திருப்பூர் ஒன்றிய மக்களின் நிதியுதவியில், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மாணவர்களுக்கெனத் தொகுக்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, கண்டி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் லலித் பண்டார அவர்களிடம் நேற்று (10.12.2025) புதன்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. மயிலிட்டி முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை மற்றும் திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய நிர்வாகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், மயிலிட்டி – திருப்பூர்

மயிலிட்டி – திருப்பூர் ஒன்றிய மக்களின் நிதிப் பங்களிப்புடனான கற்றல் உபகரணங்கள் அடங்கிய 200 நிவாரணப் பொதிகள் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக, கண்டி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்டன. Read More »

“இந்திய மீனவர்களின் இழுவைமடித் தொழிலால் வாழ்வாதாரம் பாதிப்பு: ஜனாதிபதியை நேரில் சந்திக்க வடக்கு மீனவர்கள் கோரிக்கை” – ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு

இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி நடவடிக்கைகளால் வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதிப்புக்கள் தொடர்பாகவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் சந்தித்துக் கலந்துரையாடுவது குறித்தும், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்குரிய மனு வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (10.12.2025) சந்தித்து இக்கோரிக்கைக் கடிதத்தைக் கையளித்தனர். பல்வேறு இடர்பாடுகளின் போதும் இந்திய அரசாங்கம்

“இந்திய மீனவர்களின் இழுவைமடித் தொழிலால் வாழ்வாதாரம் பாதிப்பு: ஜனாதிபதியை நேரில் சந்திக்க வடக்கு மீனவர்கள் கோரிக்கை” – ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு Read More »

“1970 – 80 களில் இருந்தது போன்று வடக்கின் கூட்டுறவுத்துறை மீண்டும் தலைநிமிர வேண்டும்: தவறான முகாமைத்துவத்தால் மக்கள் நம்பிக்கை இழப்பு” – ஆளுநர் நா.வேதநாயகன் காட்டமான உரை

‘1970 – 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வடக்கின் கூட்டுறவுத்துறை எவ்வாறு செல்வாக்கு செலுத்திச் கோலோச்சியதோ, அதேபோன்று இத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடனும் உளச்சுத்தியுடனும் செயற்பட்டு வருகின்றது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கு எமது கூட்டுறவு அமைப்புக்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பான விசேட ஆலோசனைக் கூட்டம்

“1970 – 80 களில் இருந்தது போன்று வடக்கின் கூட்டுறவுத்துறை மீண்டும் தலைநிமிர வேண்டும்: தவறான முகாமைத்துவத்தால் மக்கள் நம்பிக்கை இழப்பு” – ஆளுநர் நா.வேதநாயகன் காட்டமான உரை Read More »

பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு பேரிடருக்கு முகங்கொடுக்காத வகையில், அவர்களுக்கான தீர்வுகளை முன்வைத்தல் வேண்டும். – வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளின் போது, மத்திய மற்றும் மாகாண நிர்வாகங்களுக்கிடையில் எவ்வித வேற்றுமைகளும் இன்றி ஒருங்கிணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையாலேயே, பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகக் குறுகிய காலத்தில் ஓரளவாவது மீளக் கட்டியெழுப்ப முடிந்தது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (09.12.2025) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க மற்றும்

பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு பேரிடருக்கு முகங்கொடுக்காத வகையில், அவர்களுக்கான தீர்வுகளை முன்வைத்தல் வேண்டும். – வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கௌரவ ஆளுநர் தெரிவித்தார் Read More »

“மக்களின் துயர் துடைப்பதே முதற்பணி; அதிகாரிகளே தற்துணிவுடன் களமிறங்குங்கள்” – அபிவிருத்தி மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த வடக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு

வடக்கு மாகாணத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்குக் கரங்கொடுத்து, அவர்களை மீட்டெடுத்து வாழ்வாதாரத்தை உறுதி செய்வது எமது தார்மீகப் பொறுப்பாகும். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதி செய்யும் அதேவேளை, மாகாணத்தின் வருடாந்த அபிவிருத்தித் திட்டங்களையும் எவ்வித தாமதமுமின்றித் துரித கதியில் நிறைவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தின் அனைத்துத் திணைக்களத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடனான அவசர உயர்மட்டக் கலந்துரையாடல்,

“மக்களின் துயர் துடைப்பதே முதற்பணி; அதிகாரிகளே தற்துணிவுடன் களமிறங்குங்கள்” – அபிவிருத்தி மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த வடக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு Read More »