ஆளுநர்

ஆளுநரின் பொதுமக்கள் தினம் – 03 யூலை 2019

ஆளுநரின் பொதுமக்கள் தினம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தில் 03 யூலை 2019 அன்று புதன்கிழமை  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆளுநரின் பொதுமக்கள் தினம் – 03 யூலை 2019 Read More »

கல்வியமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமையேற்பு

வடமாகாண கல்வியமைச்சின் புதிய செயலாளராக எல்.இளங்கோவன் அவர்கள் இன்று (01) தனது கடமைகளை வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்வியமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமையேற்பு Read More »

ஆளுநரின் செயலாளர் இன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்

வட மாகாண ஆளுநரின் செயலாளராக எஸ்.சத்தியசீலன் அவர்கள் இன்று (01) காலை ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் செயலாளர் இன்று உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார் Read More »

போதைப்பொருளுக்கு எதிரான வடமாகாண பிரதான நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் போதையற்ற தேசமாக நாட்டினை ஆக்கவேண்டுமென்ற தூரநோக்கின் அடிப்படையில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்திற்கு வடமாகாணத்தின் பங்களிப்பை வழங்கும் முகமாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருளுக்கு எதிரான வடமாகாண பிரதான நிகழ்வு கிளிநொச்சியில்25 யூன் 2019 அன்று நடைபெற்றது. அத்துடன் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் போதைக்கு எதிரான கொடிகளையும் பதாதைகளையும்தாங்கிய வாகனங்களின் பேரணி கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகைதந்தமை

போதைப்பொருளுக்கு எதிரான வடமாகாண பிரதான நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது. Read More »

மன்னார் மறைமாவட்ட ஆயர் , ஆளுநர் சந்திப்பு

 ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 25 யூன் 2019 அன்று பிற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு -NP governors Media

மன்னார் மறைமாவட்ட ஆயர் , ஆளுநர் சந்திப்பு Read More »

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஆளுநர் விஜயம்

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு 24 யூன் 2019 அன்று நண்பகல் விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அங்கு மரத்தடி நிழலில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். தனது சிறுவயது பாடசாலைக் காலத்தில் இவ்வாறு மரத்தடியில் கல்விகற்ற அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்ட ஆளுநர் அவர்கள், கல்வியூடாக உலகத்தின் எந்தவொரு உயரத்தினையும் எட்டிப்பிடிக்க முடியுமெனவும் கல்வியினை இடைவிடாது தொடர்ந்து சமூகத்தில் சிறந்த ஆளுமைகளாக மாறி பாமர

முல்லைத்தீவு கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஆளுநர் விஜயம் Read More »

அதிபரை இடைநிறுத்துமாறு ஆளுநர் பணிப்பு

பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேற்குறிப்பிட்ட பாடசாலை மாணவி ஒருவர் அதே பாடசாலையின் ஆசிரியரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, குறித்த மாணவியின் பெற்றோர் அதிபருக்கு முறையிட்டும், அதிபர் பொலிசாருக்கு இதுதொடர்பில் அறிவிக்காமல் இந்த சம்பவத்தினை மூடிமறைக்க முயற்சித்தாரென ஆளுநரின் விசேட செயலணியின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்ததனையடுத்தே குறித்த பாடசாலையின் அதிபரை

அதிபரை இடைநிறுத்துமாறு ஆளுநர் பணிப்பு Read More »

ஆளுநரின் வழிப்படுத்தலில் இலவசமாக தொழிற்தகைமையை பெற்றுக்கொள்ளும் விசேட செயற்திட்டம்

வட மாகாணத்தை சேர்ந்த 5000 இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் கொண்டுள்ள திறன்களின் அடிப்படையில் இலவசமாக தேசிய தொழிற் தகமை (NVQ) மட்டம் 3 அல்லது 4 வழங்குவதற்கான விசேட செயற்திட்டமொன்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிப்படுத்தலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்திட்டத்தில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த மூவாயிரம் (3000) இளைஞர் யுவதிகள் மற்றும் கிளிநொச்சி ஐநூறு (500), மன்னார் ஐநூறு (500) , முல்லைத்தீவு ஐநூறு (500) , வவுனியா ஐநூறு (500)

ஆளுநரின் வழிப்படுத்தலில் இலவசமாக தொழிற்தகைமையை பெற்றுக்கொள்ளும் விசேட செயற்திட்டம் Read More »

உங்களை பாதுகாப்பதும் உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பதும் நம் கையில் உள்ளது – ஆளுநர்

வடமாகாணத்தின் கல்வித்துறையை சீர்திருத்துவதற்காக கல்விக்கு தன்னை அர்ப்பணித்து அதனை சீர்திருத்தி தரக்கூடிய ஒரு போராளியை நான் நேற்று கல்வித்துறையின் செயலாளராக நியமித்துள்ளேன் என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் யாழ் இந்தியத்துணைத் தூதரகம் வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து இன்று (21) ஏற்பாடு செய்த உலக யோகா தின நிகழ்வில் கலந்துகொண்டு கௌரவ ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் இந்த நிகழ்வில் ஆளுநர்

உங்களை பாதுகாப்பதும் உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பதும் நம் கையில் உள்ளது – ஆளுநர் Read More »

வடமாகாண கல்வி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

வடமாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக எல். இளங்கோவன் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் இன்று (20) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது எதிர்வரும் ஜுலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாகாண கல்வி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம் Read More »