ஆளுநர்

கிளிநொச்சியில் ஆளுநரின் பொதுமக்கள் தினம்

ஆளுநரின் பொதுமக்கள் தினம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 27 மார்ச் 2019 அன்று நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாணத்தின் அரச முதியோர் இல்லத்திற்கான  ஆரம்ப தர உத்தியோகத்தர்கள் பத்து பேருக்கான  நியமனக்கடிதங்கள் ஆளுநர் அவர்களால் வழங்கப்பட்டன. குறித்த பதவிநிலைக்காக 14பேர் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் 10 பேர் மட்டுமே இன்று வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

கிளிநொச்சியில் ஆளுநரின் பொதுமக்கள் தினம் Read More »

கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தின் உற்பத்திகளை வடமாகாண அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்ய ஆளுநர் நடவடிக்கை

வடமாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாக கொண்டு கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தினால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகளை வடமாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்வதற்கான பணிப்புரையை வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தீர்மானித்துள்ளார். 26 மார்ச் 2019 அன்று காலை திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்திற்கான திடீர் கண்காணிப்பு விஜயத்தின்போது அம்மாச்சி உணவகத்தின் நுழைவாயில் பகுதியில் கருவி நிறுவனத்தின் உற்பத்திகளை விற்பனை செய்யும் மாற்றுத்திறனாளி ஒருவருரை சந்திக்கும் சந்தர்ப்பம் ஆளுநர்

கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தின் உற்பத்திகளை வடமாகாண அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்ய ஆளுநர் நடவடிக்கை Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம் இம்முறை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது

ஆளுநரின் பொதுமக்கள் தினம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் புதன்கிழமை 27 மார்ச் 2019 அன்று நடைபெறவுள்ளது. வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த பொதுமக்கள் தினம் இடம்பெறவுள்ளது. – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் பொதுமக்கள் தினம் இம்முறை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது Read More »

திரிபீடகாபிவந்தனா வாரத்தினை முன்னிட்டு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட நிகழ்வு யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது

திரிபீடகாபிவந்தனா வாரத்தினை முன்னிட்டு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட நிகழ்வு யாழ்ப்பாணம் நாக விகாரையில் 21 மார்ச் 2019 அன்ற முற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் தேசிய மரபுரிமையாக இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் திரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு நாளை மறுதினம் 23 ஆம் திகதி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கண்டியில் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு

திரிபீடகாபிவந்தனா வாரத்தினை முன்னிட்டு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட நிகழ்வு யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது Read More »

வடமாகாணத்தின் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த ஆளுநர் நடவடிக்கை

வடமாகாணத்தின் 14 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான கோரிக்கையினை மத்திய கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தீர்மானித்துள்ளார். வடமாகாணத்தின் பல பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது பாடசாலைகளை  தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கான அனுமதியினை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை அண்மைக்காலமாக ஆளுநரிடம் முன்வைத்து வருகின்ற நிலையிலேயே கௌரவ ஆளுநர் அவர்கள் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தினை எடுத்துள்ளார். ஏனைய எட்டு மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடமாகாணத்தின் தேசிய பாடசாலைகள் 2

வடமாகாணத்தின் 14 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த ஆளுநர் நடவடிக்கை Read More »

வடமாகாணத்தின் முன்மாதிரியான செயற்பாடு

வடக்கு மாகாணத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை(PSDG) மற்றும் பிரமாண அடிப்படையிலான கொடை(CBG) மூலம் வடமாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மூலதன அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் வேலைகள் நிறைவடைந்தும் திறைசேரியிடம் இருந்து கட்டுநிதியானது முழுமையாக கிடைக்கப்பெறாமையினால் ஒப்பந்தகாரர்களிற்கு கொடுப்பனவு செய்யப்பட முடியாமல் இருந்த உறுதிச்சிட்டைகளின் பெறுமதியானது ரூபா 898.4 மில்லியன் ஆகும். இவ்வாறான பெருந்தொகை நிலுவை ஒப்பந்தகாரர்களின் நிதி இயலுமையை பாதித்துள்ளதாக கிடைக்கப்பெற்ற கோரிக்கையை கருத்திற் கொண்டு ஒப்பந்தகாரர்களின் இடரினை தீர்ப்பதற்காக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன்

வடமாகாணத்தின் முன்மாதிரியான செயற்பாடு Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம் – 13 மார்ச் 2019

ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் 13 மார்ச் 2019 அன்று நடைபெற்றது. இந்த பொதுமக்கள் சந்திப்பித்தின்போது ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டும் என்று கருதும் தமது கோரிக்கைகளை பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் எழுத்துமூலம் நேரடியாக இதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் கையளித்தனர். மேலும் வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக சங்கத்தின் பிரதிநிதிகள்

ஆளுநரின் பொதுமக்கள் தினம் – 13 மார்ச் 2019 Read More »

வட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் ஜெனிவா தொடர்பான தமது கோரிக்கைகளினை ஆளுநருக்கு வழங்கலாம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் கடந்தமாதம் ஆரம்பமாகியுள்ளதுடன் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களை ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேனஅவர்கள் நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமய தலைவர்கள் ஆகியோர் ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவை

வட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் ஜெனிவா தொடர்பான தமது கோரிக்கைகளினை ஆளுநருக்கு வழங்கலாம். Read More »

இன்று வெள்ளிக்கிழமை தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்திருக்கும் ”காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆளுநரை சந்திக்க முயற்சித்த போதும் அவரை சந்திக்க முடியவில்லை’ என்ற செய்தி தொடர்பான விளக்கம்

வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று முந்தினம் ஆளுநரை சந்திப்பதற்கு நேரத்தினை ஒதுக்கித் தருமாறு யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் ஊடாகவும் ஊடகவியலாளர் ஒருவரூடாகவும் கோரிக்கையினை விடுத்திருந்தனர். ஆனாலும் நேற்று முந்தினம் ஆளுநர் கொழும்பில் இருந்தமை காரணமாக அன்றைய தினத்தில் நேரத்தை ஒதுக்க முடியாமையின் காரணமாக நேற்று காலை 9:45மணிக்கு அவர்களை சந்திப்பதற்கான நேரத்தினை கௌரவ ஆளுநர் அவர்கள் ஒதுக்கியிருந்ததுடன் அதற்காக யாழ்ப்பாணத்திற்கும் வருகை தந்திருந்தார். ஆனாலும் இறுதி நேரத்திலேயே வடகிழக்கு

இன்று வெள்ளிக்கிழமை தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்திருக்கும் ”காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆளுநரை சந்திக்க முயற்சித்த போதும் அவரை சந்திக்க முடியவில்லை’ என்ற செய்தி தொடர்பான விளக்கம் Read More »

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில்முன்வைக்க வேண்டிய  கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் அவர்கள் அதனை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம் – வட மாகாண ஆளுநர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர்   பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்  மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களை  ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேனஅவர்கள் நியமித்துள்ளார். ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில்  முன்வைக்க வேண்டுமென கருதும் தமது கோரிக்கைகளை பொதுமக்கள் அல்லது பொது அமைப்புகள், எதிர்வரும் புதன்கிழமை (13)ஆம் திகதி யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வட மாகாண

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில்முன்வைக்க வேண்டிய  கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் அவர்கள் அதனை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம் – வட மாகாண ஆளுநர் Read More »