ஆளுநர்

புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

யாழ் மாவட்டத்தின் பிரதிப்பொலிஸ்மா அதிபராக புதிதாக கடமையேற்றுள்ள ராஜித ஸ்ரீ தமிந்த அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 05 ஏப்பிரல் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருவருக்குமிடையில் யாழ்மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது வன்செயல்கள் அதிகரித்து காணப்படும் பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதிகளில் அதிக பொலிஸ் கண்காணிப்பினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொண்டார். – […]

புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

நாளைய தினத்தில் நாம் இதைவிட நன்மையாக வாழ்வது எப்படி? – கௌரவ ஆளுநர்

நாளைய தினத்தில் நாம் இதைவிட நன்மையாக வாழ்வது எப்படி? இதுவே ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மனித சமுதாயமும் தனியாகவும் குழுவாகவும் கேட்கவேண்டிய ஒரே ஒரு கேள்வி என்று நான்காவது சர்வதேச தமிழ் இதழியல் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். இதழியல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு யாழ் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் 05 ஏப்பிரல் 2019 அன்று முற்பகல் கௌரவ ஆளுநர்

நாளைய தினத்தில் நாம் இதைவிட நன்மையாக வாழ்வது எப்படி? – கௌரவ ஆளுநர் Read More »

எங்கள் தேசத்தை குணமாக்கும் பாரிய பொறுப்பு உங்களிடம் உண்டு – கௌரவ ஆளுநர்

எங்கள் தேசத்தை திரும்பவும் குணமாக்கும் பாரிய பொறுப்பு உங்களிடம் உண்டு என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள யாழ் மருத்துவக்கண்காட்சியினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (02) கலந்துகொண்டு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் 40 ஆவது வருட நிறைவினை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கௌரவ ஆளுநர் அவர்கள் இந்த கண்காட்சியை திறந்துவைப்பதில் நான் பெருமைப்படுகின்றேன் என்று தெரிவித்தார். இங்கு

எங்கள் தேசத்தை குணமாக்கும் பாரிய பொறுப்பு உங்களிடம் உண்டு – கௌரவ ஆளுநர் Read More »

கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம்

வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இன்று (03) நடைபெற்றது. – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு  

கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் Read More »

பிரான்ஸ் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு 

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர்  Eric LAVERTU  அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (01) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். வடக்கிற்கான தனது முதலாவது விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் தூதுவரை உற்சாகமாக வரவேற்ற கௌரவ ஆளுநர் அவர்கள், வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து  தெளிவுபடுத்தினார். யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்தும் வடமாகாணத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையில் பாரியதொரு மாற்றம் இன்னும் ஏற்படாமல் அவர்கள் இன்றும் கடினமான சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அடிப்படையிலான வழிமுறைகளை

பிரான்ஸ் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு  Read More »

யாழ் வலி வடக்கு பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்திற்கு 31 மார்ச் 2019 அன்று காலை விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அப்பிரதேசத்தின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு பின்னராக பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளின் விடுவிப்பு தொடர்பிலான முன்னேற்ற நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பொருட்டும் ஏற்கனவே பாதுகாப்பு படையினரால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியேற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அப்பிரதேச மக்களின் தேவைப்பாடுகள் குறித்தும் ஆராயும் நோக்கில் ஆளுநர்

யாழ் வலி வடக்கு பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம் Read More »

வடமாகாண பௌத்த மாநாடு வவுனியா ஸ்ரீபோதி தட்சிணாராம விகாரையில் சிறப்பாக நடைபெற்றது.

வடமாகாண பௌத்த மாநாடு வவுனியா ஸ்ரீபோதி தட்சிணாராம விகாரையில் 29 மார்ச் 2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. வடமாகாணத்தில் காணப்படும் பௌத்த விகாரைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட பிரச்சனைகள் தொடர்பில் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்பட்டதுடன் வடமாகாணத்தில் மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் , கைத்தொழில் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன , வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர்

வடமாகாண பௌத்த மாநாடு வவுனியா ஸ்ரீபோதி தட்சிணாராம விகாரையில் சிறப்பாக நடைபெற்றது. Read More »

ஆளுநரின் விசேட ஊடக அறிக்கை

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் விசேட ஊடக அறிக்கை  ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியவற்றில் நான் பங்குபற்றியது தொடர்பான எனது ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள் திரிவுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்மை ஆழ்ந்த வருத்தத்திற்குரியதும் துரதிஸ்டவசமானதுமாகும். விசேடமாக ஆங்கில ஊடகங்கள், என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்திற்கு அல்லது நோக்கத்திற்கு மாறாக வெளியிடப்பட்டமைக்கு மொழியாக்கம் அல்லது வேறு விடயங்கள் காரணமாக அமைந்திருக்கலாம். எல்லா கலந்துரையாடல்களும் முழுமையான இருதரப்பு ஆதரவுடன்

ஆளுநரின் விசேட ஊடக அறிக்கை Read More »

வடமாகாண பௌத்த மாநாடு வவுனியாவில் நடைபெறவுள்ளது

வடமாகாண பௌத்த மாநாடு 29 மார்ச் 2019 அன்று வவுனியா ஸ்ரீ போதி தட்சிணாராம விகாரையில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரதம சங்கைக்குரிய நாயக்கர் வவுனியா மாவட்ட கௌரவ தலைவர் பூஜ்ஜிய சியம்பலா கஸ்வௌ விமலசார தேரர் அவர்கள் , புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்கள் மற்றும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இந்த பௌத்த மாநாடு நடைபெறவுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்படும் வடமாகாண பௌத்த

வடமாகாண பௌத்த மாநாடு வவுனியாவில் நடைபெறவுள்ளது Read More »

யாழ் மறைமாவட்ட ஆயர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் யாழ் ஆயர் இல்லத்தில் இன்று (28) முற்பகல் சந்தித்தார். யாழ்  மறைமாவட்ட   மற்றும் வடமாகாணத்தில் உள்ள கத்தோலிக்க சமயத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , மத ரீதியான பிரச்சனைகளை எவ்வாறு தீர்வுக்கு கொண்டுவரமுடியும் என்பது தொடர்பாக இருவருக்குமிடையிலான இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. மேலும், வடக்கின் உயர் பாதுகாப்பு வலயங்களில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள கத்தோலிக்க ஆலயங்கள் மற்றும் ஏனைய மத

யாழ் மறைமாவட்ட ஆயர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »