ஆளுநர்

வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பதற்கு கௌரவ ஆளுநர் நடவடிக்கை

வடமாகாணத்தில் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியொன்றை (Northern Co-operative Development Bank -NCDB) ஸ்தாபிப்பதற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். வடமாகாணத்தை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடையச்செய்ய வேண்டுமென்ற கௌரவ ஆளுநர் அவர்களின் தூரநோக்கிற்கமைய வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, […]

வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஸ்தாபிப்பதற்கு கௌரவ ஆளுநர் நடவடிக்கை Read More »

யாழ் புத்தகத் திருவிழா 2019

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019 ‘ எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மிகப்பிரமாண்டமாக இடம்பெறவுள்ள இந்த புத்தகக் கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், ஈழத்துப்படைப்புக்கள் உள்ளிட்ட உள்ளூர் மற்றும் இந்திய மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்களும் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை

யாழ் புத்தகத் திருவிழா 2019 Read More »

வடமாகாண சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

வடமாகாண சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு கடந்த 23ஆம் திகதி ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்கள் உடல் அவயவ இழப்புக்களை கட்டுப்படுத்துவதற்காக கௌரவ ஆளுநரினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் ஒரு அங்கமாகவே சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுடனான இந்த சந்திப்பு இடம்பெற்றது. சாரதி பயிற்சி பாடசாலைகள் அனுமதிப் பத்திரத்திற்கான பயிற்சிகளை வழங்கும் போது தரமானதும் முறையானதுமான பயிற்சிகளை வழங்கினால் இவ்வாறான வீதி

வடமாகாண சாரதி பயிற்சி பாடசாலைகளின் உரிமையாளர்களுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு Read More »

உயர்தரப் பரீட்சார்த்திகளின் நன்மை கருதி ஒலிபெருக்கிப் பாவனைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் – ஆளுநரின் ஊடக அறிக்கை

தற்பொழுது கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாணவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இவ்வாறான ஒலிபெருக்கிப்பாவனையை கட்டுப்படுத்துமாறு வைபவங்கள் மற்றும் விழாக்களை ஒழுங்குபடுத்துவோரிடம் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் அமுல்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு

உயர்தரப் பரீட்சார்த்திகளின் நன்மை கருதி ஒலிபெருக்கிப் பாவனைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் – ஆளுநரின் ஊடக அறிக்கை Read More »

ஐநா விசேட பிரதிநிதிக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுதந்திர உரிமைக்கான ஐநா சமாதான சபையின் விசேட பிரதிநிதி திரு கிளைமென்ற் நயல்சோசி வுயுலே அவர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 24 யூலை 2019 அன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து மாகாணத்தினுள் வசிக்கும் பொதுமக்களின் வாழ்க்கையினை மேம்படுத்த முன்னெடுக்கும் நிலம், நீர், நிதி மற்றும் நீதி தொடர்பான செயற்பாடுகள் தொடர்பில் ஐநா

ஐநா விசேட பிரதிநிதிக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு Read More »

வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் பிரதானியாக வைத்திய கலாநிதி கோபி சங்கர்

வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் பிரதானியாக வைத்திய கலாநிதி கோபி சங்கர் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் 23 யூலை 2019 அன்று மாலை இடம்பெற்றது. வடமாகாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களால் மக்கள் அதிகளவில் உயிரிழப்புக்கள், உடல் அவயவங்கள் மற்றும் சொத்திழப்புக்களுக்கும் முகம்கொடுத்து வருவதன் காரணமாக இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இந்த வீதிப் பாதுகாப்பு சபை செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.   – வடக்கு

வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் பிரதானியாக வைத்திய கலாநிதி கோபி சங்கர் Read More »

தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் – ஆளுநர்

தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தழிழ் மொழி வாழவேண்டும். நாங்கள் மொழி அடையாளம் கொண்டவர்கள் ஆகையினாலே பாரதி சொன்னது போல் ஏனைய மொழியை படியுங்கள் ஆனால் தமிழை தாயாக கொண்டிருங்களென ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கு அமையை தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்கும் ‘தேசிய பால் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின்’ வடமாகாண அங்குரார்ப்பண நிகழ்வு கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் இன்று

தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் – ஆளுநர் Read More »

“முன்னேற்ற ஆறுமுகம் திட்டம்” தொடர்பான விசேட கலந்துரையாடல்

யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் குடிநீர் தேவையினை பூர்த்திசெய்யும் முகமாக முன் மொழியப்பட்டுள்ள “முன்னேற்ற ஆறுமுகம் திட்டம்” தொடர்பான விசேடகலந்துரையாடல் ஆளுநரின் தலைமையில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் திரு அனுரதிஸாநாயக்க அவர்களின் பங்குபற்றலுடன் நேற்று (22) பிற்பகல் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த திட்டத்தினை ஆரம்பிக்கும்போதும் அதற்கு முன்னருமான காலப்பகுதியில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, வனஜீவராசிகள்திணைக்களம், சுற்றாடல்பாதுகாப்புஅதிகாரசபை,வனவளபாதுகாப்பு திணைக்களம் மற்றும் இத்திட்டத்துடன் தொடர்புடைய

“முன்னேற்ற ஆறுமுகம் திட்டம்” தொடர்பான விசேட கலந்துரையாடல் Read More »

வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நேற்று (22) பிற்பகல் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது. யாழ் குடாநாட்டில் வசிக்கும் சுமார் 630,000 மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்திசெய்யும் முகமாக பொறியியலாளர் குகனேஸ்வரராஜா அவர்களினால் முன்மொழியப்பட்ட இந்த திட்டம் அமைச்சரவை அங்கீகாரத்தினை பெற்றுள்ளதுடன் ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அடுத்தமாதம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் Read More »

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் – ஆளுநர் சந்திப்பு

  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளார் திரு ஜோசப் ஸ்ராலின் அவர்களுக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 22 யூலை 2019 அன்று காலை கொழும்பில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் ஆசிரியர்களின் இடமாற்றங்களின்போது ஏற்படும் கொள்கை ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அதிபர் சேவைத் தரம் III இல் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆராயும் பொருட்டு கல்வியமைச்சின் செயலாளரின் தலைமையில் மாகாணப் பணிப்பாளர் மற்றும்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் – ஆளுநர் சந்திப்பு Read More »