ஆளுநர்

வடக்கு வட்டமேசை கலந்துரையாடல் நாளை மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது.

வடக்கு வட்டமேசை (‘#Northern_Province_Round_Table”) கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நாளை மறுதினம் (08) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக இடம்பெறும் இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் “வட மாகாணத்தின் உற்பத்தியும் சந்தையும்” தொடர்பில் இம்முறை கலந்துரையாடப்படவுள்ளது. மாதம் இருமுறை இடம்பெறும் இந்த ‘வடக்கு […]

வடக்கு வட்டமேசை கலந்துரையாடல் நாளை மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. Read More »

கௌரவ ஆளுநர் தலைமையில் வடமாகாணத்திற்கான டிஜிட்டல் திட்ட வரைபின் அறிமுக நிகழ்வு

ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து வடமாகாணத்திற்கான டிஜிட்டல் திட்ட வரைபின் அறிமுக நிகழ்வு வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில்  இன்று (06) இடம்பெற்றது. டிஜிட்டல் ரீதியாக வலுப்படுத்தப்பட்டதோர் மாகாணமாக வட மாகாணத்தினை மாற்றிடும் தேசிய குறிக்கோளினை அடைவதே இதன் நோக்கமாகும். இந்த திட்ட வரைபில் ஸ்மாட் பாதுகாப்பு , ஸ்மாட் அரசாங்கம், ஸ்மாட் சுகாதாரம்,ஸ்மாட் கட்டடம், ஸ்மாட் பாவனைகள் , ஸ்மாட் பணம், ஸ்மாட் கல்வி , ஸ்மாட் தொழிலாளர்கள் , ஸ்மாட்  போக்குவரத்து

கௌரவ ஆளுநர் தலைமையில் வடமாகாணத்திற்கான டிஜிட்டல் திட்ட வரைபின் அறிமுக நிகழ்வு Read More »

ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பொது சுகாதார அதிகாரிகள் 107 உணவகங்களுக்கு திடீர் கண்காணிப்பு விஜயம்

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ் மாநாகர சபையின் எல்லைக்குட்பட்ட 107 உணவகங்களுக்கு பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று (06) திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர். உணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக இயங்குகின்றனவா என்று மேற்கொள்ளப்பட்ட இந்த கண்காணிப்பு நடவடிக்கையின்போது 76 உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அதிகளவிலான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 26 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் 12 உணவகங்களில்

ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பொது சுகாதார அதிகாரிகள் 107 உணவகங்களுக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் Read More »

முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்திற்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்திற்கு (MDTC) நேற்று (05) இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நிர்மாணப்பணிகள் தொடர்பில் ஆராய்ந்தார்

முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்திற்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம் Read More »

பாலி ஆற்றின் ஆற்றுப்படுக்கை பிரதேசத்திற்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

பாலி ஆற்றின் ஆற்றுப்படுக்கை பிரதேசத்திற்கு 05 ஆகஸ்ட் 2019 அன்று பிற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

பாலி ஆற்றின் ஆற்றுப்படுக்கை பிரதேசத்திற்கு ஆளுநர் கண்காணிப்பு விஜயம் Read More »

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஆளுநர் விஜயம்

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 05 ஆகஸ்ட் 2019 அன்று மாலை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார். 111 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட 40 கடைத் தொகுதிகளை கொண்டிருக்கும் இந்த பொருளாதார மத்திய நிலையத்தில் தற்போது நான்கு கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இது தொடர்பில் ஆராய்ந்த கௌரவ ஆளுநர் அவர்கள்,

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஆளுநர் விஜயம் Read More »

வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறு குளங்களின் புனர்நிர்மாணப் பணிகளின் முன்னேற்றங்களை கௌரவ ஆளுநர் பார்வையிட்டார். 

ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் ‘குளங்கள் கிராமங்களின் மறுமலர்ச்சி’ என்ற எண்ணக்கருவிற்கமைவாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் ‘காலநிலை மாற்றத்தினை தாக்குப்பிடிக்கும்  ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவக் கருத்திட்டத்தின்’ கீழ் வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறு குளங்களின் புனர்நிர்மாணப் பணிகளின் முன்னேற்றங்களை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நேரடியாக இன்று (05) பார்வையிட்டார். இதனடிப்படையில் வவுனியாவில் அமைந்துள்ள மதகுவைத்தகுளம்,  சின்னத்தம்பனைக் குளம், கலேசியம்பலாவைக் குளம் மற்றும் துட்டுவாகைக்குளம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்ட

வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறு குளங்களின் புனர்நிர்மாணப் பணிகளின் முன்னேற்றங்களை கௌரவ ஆளுநர் பார்வையிட்டார்.  Read More »

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் வட மாகாண வீதி பாதுகாப்பு சபை என்பவற்றிகிடையிலான கலந்துரையாடல்

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் உறுப்பினர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 02 ஆகஸ்ட் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை குறைப்பதற்கு இந்த இரண்டு சபைகளும் இணைந்து எவ்வாறு செயற்படுதல் மற்றும் மக்களிடையே விபத்துக்கள் தொடர்பிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் வட மாகாண வீதி பாதுகாப்பு சபை என்பவற்றிகிடையிலான கலந்துரையாடல் Read More »

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் திரு.சரத் டாஷ் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் அலுவலகத்தில் இன்று (02) முற்பகல் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், இவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக 6.5 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்கள் தமது

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

வடக்கிற்கு இரண்டு புதிய புகையிரத சேவைகள்

காங்கேசன்துறை முதல் கொழும்பு வரை இரண்டு புதிய புகையிரத சேவைகள் நாளை முதல் காலை மற்றும் இரவு வேளைகளில் இடம்பெறவுள்ளதாக யாழ் புகையிரத நிலையத்தின் தலைமை அதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார். கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையான இரண்டு புதிய புகையிரத சேவைகள் இன்று முதல் காலை மற்றும் இரவு நேரங்களில் ஆரம்பமாகியுள்ளதாகவும் இந்த சேவைகள் தினசரி இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். யாழிலிருந்து நாளை காலை 06.25 க்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படவுள்ள 4082 இலக்க புகையிரதம் காலை

வடக்கிற்கு இரண்டு புதிய புகையிரத சேவைகள் Read More »