ஆளுநர்

சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் Mr. Damiano Sguaitamatti அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (23) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இலங்கையில் தனது பணிக்காலத்தை நிறைவு செய்து அடுத்த மாதம் மீண்டும் சுவிஸிற்கு திரும்பவுள்ள Mr.Damiano அவர்கள் மரியாதை நிமித்தம் கௌரவ ஆளுநர் அவர்களை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. – வடக்கு […]

சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வில் ஆளுநர் கலந்து கொண்டார்

கடந்த மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் நிகழ்வு மிருசுவில் புனித நீக்ளஸ் ஆலயத்தில் இடம்பெற்றபோது ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (21) காலை 8:45 மணிக்கு இணைந்து கொண்டார்.

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வில் ஆளுநர் கலந்து கொண்டார் Read More »

முல்லைத்தீவு மாவட்ட பிரதேசசபை உறுப்பினர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளினதும் உறுப்பினர்களுக்கும் கௌரவ ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (21) முல்லைத்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. யுத்தத்திற்கு முகம்கொடுத்த மாவட்டமாக காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்களுடைய உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவது தொடர்பிலும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. மக்கள் பிரதிநிதிகளாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேச சபை உறுப்பினர்கள் தமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையாக

முல்லைத்தீவு மாவட்ட பிரதேசசபை உறுப்பினர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

வடமாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம்

வடமாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு வடமாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் 20 மே 2019 அன்று பிற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் 57 தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களும் 15 கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களும் 09 விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டன.  

வடமாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் Read More »

ஈஸ்டர் தாக்குதலின் ஒரு மாத பூர்த்தியை முன்னிட்டு வடமாகாண ஆளுநரின் விசேட வேண்டுகோள்

  இலங்கையில் பல பாகங்களிலும் கடந்த மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்வதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாணத்தின் அனைத்து சமயத் தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த தருணத்தில் வடமாகாணத்தின் அனைத்து மக்களையும்

ஈஸ்டர் தாக்குதலின் ஒரு மாத பூர்த்தியை முன்னிட்டு வடமாகாண ஆளுநரின் விசேட வேண்டுகோள் Read More »

வட மாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்கள் – வடமாகாண ஆளுநர் நடவடிக்கை

நாட்டின் தற்போதைய அவசரகால நிலைமையினைக் கருத்திற் கொண்டு வடமாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்களை தற்காலிகமாக வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோவுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கௌரவ ஆளுநர் அவர்கள் பொலிசாரின் தேவைக்கு தற்காலிகமாக வாகனங்களை வழங்கும் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். இதன்படி வடமாகாணத்தின் ஒவ்வொரு மாவட்ட செயலகங்களிலும் இரண்டு வாகனங்கள் அவசர நிலைமையில்

வட மாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்கள் – வடமாகாண ஆளுநர் நடவடிக்கை Read More »

கௌரவ ஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பு

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று (10) பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. – வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு

கௌரவ ஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பு Read More »

யாழ் முஹிய்தீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு ஆளுநர் விஜயம்

யாழ் பெரியகடை பகுதியில் அமைந்துள்ள முஹிய்தீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 29 ஏப்பிரல் 2019 அன்று இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த  ஆளுநர் அவர்களை பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌழவி ஏ.எம். றலீம் அவர்கள் வரவேற்றார். இதன்போது அங்கிருந்த முஸ்லிம் சமூகத்துடன் சுமூகமான கலந்துரையாடலில் ஆளுநர் அவர்கள் ஈடுபட்டதுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். மேலும் தற்போது இடம்பெற்றுவரும் பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைகள்

யாழ் முஹிய்தீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு ஆளுநர் விஜயம் Read More »