ஆளுநர்

கனேடிய உயர்ஸ்தானிகர் – ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 04 யூன் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வட பகுதி சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைள் குறித்து ஆராயப்பட்டது. அத்துடன் , வட மாகாண மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் எவ்வகையிலான துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதற்காக கனடா அரசாங்கம் வழங்கவேண்டிய உதவிகள் தொடர்பிலும் […]

கனேடிய உயர்ஸ்தானிகர் – ஆளுநர் சந்திப்பு Read More »

வடமாகாண அரச அலுவலர்கள் மக்களுக்கு நன்மைபயக்க கூடிய விதத்திலும் மனிதாபிமானத்துடனும் சேவை செய்ய வேண்டும் – ஆளுநர்

வடமாகாணத்திலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் போருக்கு பின்னரான இத் தேசத்தில் இருக்கின்ற மக்களுக்கு நன்மை பயக்ககூடிய வகையிலும் மனிதாபிமானத்துடனும் பணியாற்றவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ் நூலக கேட்போர்கூடத்தில் 31 மே 2019 அன்று நடைபெற்ற கொள்முதல் நடைமுறை மற்றும் ஒப்பந்த நிர்வாக பாடநெறியை (CIPPCA 2018/2019) பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்

வடமாகாண அரச அலுவலர்கள் மக்களுக்கு நன்மைபயக்க கூடிய விதத்திலும் மனிதாபிமானத்துடனும் சேவை செய்ய வேண்டும் – ஆளுநர் Read More »

வடக்கின் உயிர்நாடியாக திகழும் சுற்றுலாத்துறை – வடமாகாண ஆளுநர்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் கௌரவ வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன்  ராகவன் அவர்கள் தலைமையில்      வடக்கின் உயிர்நாடியாக  திகழும் சுற்றுலா விடுதி உரிமையாளர்களுக்கான சந்தைப்படுத்தல் உபாயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடல் இன்று (31) யாழ் ரில்கோ விடுதியில் இடம்பெற்றது இந்நிகழ்வில் ஆளுநர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் , சுயாதீனமாக இயங்கக் கூடிய ஒரே ஒரு மாகாணமாக வடமாகாணம் காணப்படுகின்றது. பொருளாதார ரீதியில் அதனை நாங்கள் அபிவிருத்தி அடையச் செய்வதன் ஊடாகவே எதிர்காலத்தில் எமது சமூகத்தினையும் அபிவிருத்தி அடையச் செய்ய முடியும் என தெரிவித்தார். மேலும் வட மாகாணத்தின் உயிர் நாடியாகவும்

வடக்கின் உயிர்நாடியாக திகழும் சுற்றுலாத்துறை – வடமாகாண ஆளுநர் Read More »

ஐ.நா சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் – ஆளுநர் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜீன் கோப் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் ரிம் சட்ரன் ஆகியோர் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 31 மே 2019 அன்று காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது வடமாகாண பாடசாலைகளின் பாதுகாப்பு மற்றும் ஆக்கபூர்வமான வகுப்பறை நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுத்து செல்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

ஐ.நா சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் – ஆளுநர் சந்திப்பு Read More »

மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும் – ஆளுநர்

மதத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கம், மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும். அது ஒவ்வொரு இலங்கை இஸ்லாமியருடைய ஆறாவது கடமையாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன் என்று வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மாகாண இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மொகைதீன் ஜூம்மா பள்ளிவாசலில் 28 மே 2019 அன்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆளுநர்

மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும் – ஆளுநர் Read More »

பருத்தித்துறை துறைமுக பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் மீள் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகப் பகுதிக்கு இன்று (29) மாலை விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் துறைமுகத்தின் ஆரம்ப அபிவிருத்தி நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார். பருத்தித்துறை பிரதேச மீனவர்களின் பொருளாதார நிலைமையினை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த துறைமுக அபிவிருத்தி செயற்திட்டத்தினை முன்னெடுப்பதில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கௌரவ ஆளுநரின் இவ்விஜயத்தில் ஆராயப்பட்டதுடன் , துறைமுகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள மெதடிஸ்ட் பாடசாலைக்கும் ஆளுநர்

பருத்தித்துறை துறைமுக பிரதேசத்திற்கு ஆளுநர் விஜயம் Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் நடைபெற்றது

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் இன்று (29) இடம்பெற்றது. –வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் நடைபெற்றது Read More »

வடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணியான அலுவலக பணியாளர் சேவை நியமனக்கடிதங்கள் வழங்கல்

வடக்கு மாகாண அலுவலக பணியாளர் சேவையின் தரம் 3 இன் 16 வெற்றிடங்களிற்கான போட்டிப் பரீட்சை மூலம் தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கு நியமனக்கடிதங்கள் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் 2019.05.29ம் திகதி வடக்கு மாகாண சபை வளாகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

வடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணியான அலுவலக பணியாளர் சேவை நியமனக்கடிதங்கள் வழங்கல் Read More »

புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – ஆளுநர் சந்திப்பு

வடமாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுணவர்தன ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 28 மே 2019 அன்று காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், வடமாகாணத்தில் இடம்பெறும் சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பிலும் , யாழ்மாவட்டத்திலே அதிகளவிலான சமூக விரோத செயல்கள் காணப்படுவதாகவும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் ஆளுநர் அவர்கள் இதன்போது கேட்டுக்கொண்டார். மேலும் சட்டவிரோத மண்அகழ்வு நடவடிக்கைகள்

புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் – ஆளுநர் சந்திப்பு Read More »

கௌரவ ஆளுநர் எண்ணக்கருவிற்கு அமைவாக யாழில் புத்தக கண்காட்சி

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக புத்தக விற்பனை மற்றும் கண்காட்சி எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்  நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சி தொடர்பான ஊடக சந்திப்பு இன்று (24) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த கண்காட்சியினை ஏற்பாடு செய்யும் இலங்கை நூல் விற்பனையாளர்கள் ஏற்றுமதி இறக்குமதி சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.  

கௌரவ ஆளுநர் எண்ணக்கருவிற்கு அமைவாக யாழில் புத்தக கண்காட்சி Read More »