ஆளுநர்

ஆளுநரின் பொதுமக்கள் தினம் வவுனியாவில் நடைபெற்றது

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில்  வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன்  வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம் இன்று (19)  நடைபெற்றது. – வடமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் பொதுமக்கள் தினம் வவுனியாவில் நடைபெற்றது Read More »

வவுனியா செட்டிப்புலவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை புதிய வகுப்பறைக்கட்டடம் மாணவர்களிடம் கையளிப்பு

இந்திய அரசின் 45 இலட்சம் நிதியுதவியில் வவுனியா செட்டிப்புலவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத் தொகுதி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் இன்று காலை (19) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் அவர்களும் இதன்போது கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் கௌரவ ஆளுநர் அவர்களினால் பாடசாலை வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

வவுனியா செட்டிப்புலவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை புதிய வகுப்பறைக்கட்டடம் மாணவர்களிடம் கையளிப்பு Read More »

33 இலட்சம் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் கௌரவ ஆளுநரினால் மாணவர்களிடம் கையளிப்பு

வவுனியா அரசினர் சிங்கள கலவன் பாடசாலையில் இந்திய அரசின் 33 இலட்சம் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் இன்று (19) முற்பகல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் அவர்களும் கலந்துகொண்டார். -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

33 இலட்சம் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் கௌரவ ஆளுநரினால் மாணவர்களிடம் கையளிப்பு Read More »

யாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு – ஆளுநர் விஜயம்

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் தமிழ் பொலிசாரின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக வடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு 18 யூன் 2019 அன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றபோது ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அங்கு விஜயம் மேற்கொண்டு நேர்முகத்தேர்வுக்கு வருகை தந்தவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதுவரை காலமும் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் தென்னிலங்கையிலேயே இடம்பெற்று வந்திருந்ததும் ஆளுநர் அவர்கள் கௌரவ ஜனாதிபதி

யாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு – ஆளுநர் விஜயம் Read More »

ஆளுநரின் பொதுமக்கள் தினம் வவுனியாவில் நடைபெறவுள்ளது

ஆளுநரின் பொதுமக்கள் தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் 19 யூன் 2019 அன்று புதன்கிழமை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது -வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

ஆளுநரின் பொதுமக்கள் தினம் வவுனியாவில் நடைபெறவுள்ளது Read More »

எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவினருடன் கலந்துரையாட தயார் – ஆளுநர் பகிரங்க அழைப்பு

“எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு நான் தயாராகவுள்ளேன்” என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொக்குவில் புகையிரத நிலைய அதிபர் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்குமுகமாக ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். இத்தாக்குதலானது வட மாகாணத்தை மையப்படுத்தி ஆயுத வன்முறையிலும் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் ஆவா குழுவினரால் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இவர்களின் பிரச்சனை தொடர்பாக ஜனநாயக ரீதியிலான கலந்துரையாடலை இக்குழுவினருடன் மேற்கொள்ள தான் தயாராக இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவினருடன் கலந்துரையாட தயார் – ஆளுநர் பகிரங்க அழைப்பு Read More »

புதிய பொலிஸ் அத்தியட்சகர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு

யாழ் மாவட்ட புதிய பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (14) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது யாழ் மாவட்டத்திலும் வடமாகாணத்திலும் சட்டவிரோதமாக செயற்பட்டுவரும் சமூக விரோத குழுக்களை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டுக்கொண்டதுடன் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். – வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

புதிய பொலிஸ் அத்தியட்சகர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

வடக்கின் புதிய கடற்படை கட்டளைத் தளபதி – கௌரவ ஆளுநர் சந்திப்பு

வடமாகாணத்தின் புதிய கடற்படை கட்டளைத் தளபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் SMDK சமரவீர அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (14) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் காணப்படும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்த ஆளுநர் அவர்கள் கடற்படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை மீண்டும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினார். இதேவேளை காங்கேசன்துறை பிரதேசத்தில் கடற்படையினரின் வசமுள்ள நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு

வடக்கின் புதிய கடற்படை கட்டளைத் தளபதி – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

வலி வடக்கு பிரதேசதிற்கு ஆளுநர் விஜயம்

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் அழைப்பின் பேரில் வலி வடக்கு பிரதேசத்திற்கு இன்று (13) முற்பகல் விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன் வலி வடக்கில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது வலி வடக்கு காங்கேசன்துறை பகுதியில் கடற்படையினர் வசமுள்ள நகுலேஸ்வரம் புனித பூமிக்கு சொந்தமான 42 ஏக்கர் காணி உட்பட

வலி வடக்கு பிரதேசதிற்கு ஆளுநர் விஜயம் Read More »

நாளை ஆளுநரின் பொதுமக்கள் தினம்

கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் நாளை (12 யூன் 2019) புதன்கிழமை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை ஆளுநரின் பொதுமக்கள் தினம் Read More »