ஆளுநர்

வடக்கு மாகாண பொங்கல்விழா 2020

“வடக்கு மாகாண பொங்கல்விழா 2020” சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத்திலும், வரணி கலாசார மத்தியநிலையத்திலும் 18 ஜனவரி 2020 அன்று நடைபெற்றது. வடக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு இ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவின் பிரதம விருந்தினராக வடக்குமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்குமாகாண பிரதம செயலாளர் திரு அ பத்திநாதனும், கௌரவ விருந்தினராக தென்மராட்சி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர் திருமதி தேவநந்தினி […]

வடக்கு மாகாண பொங்கல்விழா 2020 Read More »

வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்திலுள்ள சில அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயலாளர்கள் , திணைக்கள தலைவர்கள் மற்றும் உயர்அதிகாரிகளுடன் சந்திப்பு வட மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் தலைமையில் 17 ஜனவரி 2020 அன்று இடம்பெற்றது. வட மாகாண சுகாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் திணைக்களங்களான சுதேச வைத்தியத்துறை திணைக்களம், நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு திணைக்களம் என்பவற்றுடனும் கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பான திணைக்களங்களும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறித்த சந்திப்புக்கள் வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

வடமாகாண நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்

வடமாகாண நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகள் வடக்கு மாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்களை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.  இக்கலந்துரையாடல் 17 ஜனவரி 2020 அன்று இடம்பெற்றது. இதன்போது முன்னெடுக்பப்டும் செயற்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

வடமாகாண நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்களை அவரது அலுவலகத்தில் 16 ஜனவரி 2020 அன்று  சந்தித்து கலந்துரையாடினார்கள் . இச் சந்திப்பின்போது வடக்குமாகாண மக்களின் தேவைகள் குறித்தும் மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடினர்.  

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு Read More »

யாழ்ப்பாண கலாசார மண்டப கட்டடத்தொகுதியை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார்.

இந்திய அரசின் நிதியில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கலாசார மண்டப கட்டடத்தொகுதியை வடக்கு மாகாண ஆளுநர் பி எம் எஸ் சார்ள்ஸ் 16 ஜ னவரி 2020 அன்று பார்வையிட்டார். இதன்போது யாழ் மாநகர முதல்வர், இந்திய பிரதி உயர்ஸ்தானிகர், இந்திய துணைத் தூதுவர், யாழ் மாநகரசபை ஆணையாளர், ஆளுநரின் செயலாளர் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டரர்கள். கட்டிட வடிவமைப்பாளர்களும் பொறியியலாளர்களும் கட்டிட அமைப்புகளின் தன்மைகள் தொடர்பில் ஆளுநருக்கு விளக்கமளித்தனர். இதன்போது குறித்த கட்டடத்தொகுதி விரைவாக மக்களின்

யாழ்ப்பாண கலாசார மண்டப கட்டடத்தொகுதியை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார். Read More »

இளவாலை சென் ஹென்றிஸ் கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் வடக்கு மாகாண ஆளுனர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினமாகிய 15 ஜனவரி 2020 அன்று யாழ்ப்பாணம் இளவாலை சென் ஹென்றிஸ் கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். காலை பதினொன்று முப்பது மணிக்கு ஆரம்பமான இந் நிகழ்வில் இந்திய தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர், யாழ்ப்பாணத்திற்கான துணைத்தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகள் வடக்கு மாகாண கல்வி,கலாசாரம் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு இ.இளங்கோவன்

இளவாலை சென் ஹென்றிஸ் கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் வடக்கு மாகாண ஆளுனர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் Read More »

ஆளுநரின் தைப்பொங்கல் வாழ்த்து

குளிரும் இருளும் மிகுந்த மார்கழி மாதத்துக்குப் பின்னர், புதிய முயற்சிகளைத் தொடங்கும் மங்கலம் மிகுந்த மாதமாக தை அமைகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று மக்கள் நம்புகின்றார்கள். பொங்கல் மரபுவழி பயிர்ச்செய்கைக் காலத்தின் நிறைவைக் குறிப்பதாக அமைவது. விளைந்த நெல் வீட்டுக்குக் கொண்டுவந்து களஞ்சியப்படுத்தப்படும். புது நெல் பொங்கலுக்கு தயாராகிவிடும். தை மாதத்தில் இப்பொங்கல் நடைபெறுவதால் “தைப்பொங்கல்” எனப்படுகின்றது. தைப்பொங்கல் தமிழ் சமூகத்தின் பண்பாடு, நாகரிகத்தின் உயர் மதிப்பீடுகளை வெளிப்படுத்தும் கொண்டாட்டமாகும். அது எங்களுக்கு ஏராளமான

ஆளுநரின் தைப்பொங்கல் வாழ்த்து Read More »

வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை- வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்எம். சார்ள்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மகாணத்தில்உள்ள வாகன சாரதிகள் இன்று காலை முதல் எரிபொருள் நிரப் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. மக்கள் வீண் வததந்திகளை கேள்வியுற்று இவ்வாறு தமது நேரங்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது. இதை அவதானித்த வடக்கு

வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை- வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல்

வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடனான கலந்துரையாடல்  வட மாகாண ஆளுநர் திருமதி. பீ. எஸ். எம். சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 09 ஜனவரி 2020 அன்று இடம்பெற்றது.

வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வடமாகாண ஆளுநர் அவர்களின் வாழ்த்துக்கள்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியசரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வடமாகாண மக்களுடன் இணைந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். சர்வதேச ரீதியிலும் உள்நாட்டிலும் தனக்கான ஒரு இடத்தினை மீள்நிலைநாட்டிக் கொள்வதற்கு புதியதொரு வழிகாட்டலும் தூர நோக்கும் அர்பணிப்பு நிறைந்த கடின உழைப்பும் நமது தாய்நாட்டிற்கு  தற்போது தேவையாகவுள்ளது. இன மத அரசியல் பேதமின்றி இலங்கையின் அனைத்து மக்களையும் தனது வெற்றிப் பயணத்தில் இணைத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதற்கு புதிய

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வடமாகாண ஆளுநர் அவர்களின் வாழ்த்துக்கள் Read More »