ஆளுநர்

இந்திய சுற்றுலாத்துறை பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

சென்னைக்கு இரண்டுநாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இந்திய பயண முகவர் சங்கத்தின் அகில இந்திய மற்றும் தமிழ்நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு 12 நவம்பர் 2019 அன்று பிற்பகல் சென்னையில் இடம்பெற்றது. 41 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதுடன் ,சென்னைக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி தொடர்பில் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஆர்வத்துடன் செயற்பட்டுவரும் இந்திய பயண முகவர் […]

இந்திய சுற்றுலாத்துறை பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு Read More »

ஆளுநருக்கும் எம்.ஜி.முத்து குழுமத்தின் தலைவருக்குமிடையில் சந்திப்பு

சென்னைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் உலகளாவிய ரீதியில் ஹோட்டல்களை நடத்திவரும் எம்.ஜி.முத்து குழுமத்தின் தலைவரும் நிறைவேற்று பணிப்பாளருமான எம்.ஜி.எம்.ஆனந்த் அவர்களை 11 நவம்பர் 2019 அன்று பிற்பகல் சென்னையில் சந்தித்தார். சுற்றுலாத்துறையில் வெற்றிகரமான ஒரு நிறுவனமாக உலகளாவிய ரீதியில் திகழ்ந்து கொண்டிருக்கும் எம்.ஜி.முத்து குழுமத்தினை வடமாகாணத்தில் சுற்றுலாத்துறையில் முதலீடு மேற்கொள்வதற்கு கௌரவ ஆளுநர் இதன்போது அழைப்பு விடுத்தார்.  

ஆளுநருக்கும் எம்.ஜி.முத்து குழுமத்தின் தலைவருக்குமிடையில் சந்திப்பு Read More »

இயக்குனர் பாரதிராஜா – ஆளுநர் சந்திப்பு

பாரதிராஜா சர்வதேச திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு கௌரவ ஆளுநர் விஜயம் செய்து இயக்குனர் பாரதிராஜாவுடன் சுமூக கலந்துரையாடலை மேற்கொண்டார். வடமாகாணத்தில் திரைப்படத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பாரதிராஜா சர்வதேச திரைப்பட பயிற்சிக் கல்லூரியூடாக திரைக்கலை பயிற்சியினை வழங்குமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் இயக்குனர் பாரதிராஜா அவர்களிடம் கோரிக்கையினை முன்வைத்தார். வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

இயக்குனர் பாரதிராஜா – ஆளுநர் சந்திப்பு Read More »

தி.மு.க தலைவரும் தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்ராலின் – ஆளுநர் சந்திப்பு

சென்னைக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் தி.மு.க தலைவரும் தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்ராலின் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 12 நவம்பர் 2019 அன்று முற்பகல் சென்னையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது ஆளுநர் அவர்கள் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலும், வடமாகாணத்திற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலும் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் தனக்கு இருப்பதாக குறிப்பிட்டார். இதற்கான ஒரு படியாகவே தி.மு.கவின் தலைவரும்

தி.மு.க தலைவரும் தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்ராலின் – ஆளுநர் சந்திப்பு Read More »

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதலாவதாக பயணிக்கும் AL 9 102 பயணிகள் விமானத்தில் கௌரவ ஆளுநர்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னை நகரத்திற்கு முதலாவதாக பயணிக்கும் எயார் இந்தியா நிறுவனத்தின் AL 9 102 பயணிகள் விமானத்தில் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று பயணமாகவுள்ளார். இரு நாடுகளுக்குமிடையில் புதிய உறவுகளையும் புதிய வர்த்தக தொடர்புகளையும் இந்த விமான நிலையத்தினூடாக உருவாக்கமுடியும் என்று எதிர்பார்ப்பதாக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.    

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதலாவதாக பயணிக்கும் AL 9 102 பயணிகள் விமானத்தில் கௌரவ ஆளுநர் Read More »

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் – பிரித்தானியாவில் வசித்துவரும் இலங்கையினைச் சேர்ந்த தமிழர் பிரதிநிதிகள் சந்திப்பு

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பிரித்தானியாவில் வசித்துவரும் இலங்கையினைச் சேர்ந்த தமிழர் பிரதிநிதிகள் சிலரை கடந்த வரம் (ஒக்.31) லண்டனில் சந்தித்து கலந்துரையாடினார். வடமாகாணத்தில் முதலாவது தமிழ் ஆளுநராக, வடமாகாணத்தை அபிவிருத்தி பாதைக்கு முன் கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் , கட்டமைப்பு மாற்றங்கள் குறித்தும் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்த ஆளுநர் அவர்கள் , வடமாகாணத்தை மேலும் அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு அவர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இதன்போது தெரிவித்தார்.

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் – பிரித்தானியாவில் வசித்துவரும் இலங்கையினைச் சேர்ந்த தமிழர் பிரதிநிதிகள் சந்திப்பு Read More »

வடமாகாணத்தில்அதிகரித்துவரும் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் பணிப்பு

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக வடமாகாணத்தில் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஆளுநரின் செயலாளர் தலைமையிலான விசேட கலந்துரையாடல் 05 நவம்பர் 2019 அன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது வடமாகாண சுகாதார சுதேச வைத்திய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் பதில் செயலாளர் கே.தெய்வேந்திரம் , வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் , மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிராந்திய

வடமாகாணத்தில்அதிகரித்துவரும் டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் பணிப்பு Read More »

மலேசியாவிடமிருந்து நாம் விவசாயம் தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் – ஆளுநர்

விவசாயத்தில் வளர்ச்சியடைந்துள்ள மலேசியாவிடமிருந்து நாம் விவசாயம் தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வடமாகாண சர்வதேச கைத்தொழில்துறை கண்காட்சியும் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலும் நிகழ்வு 31 ஒக்ரோபர 2019 அன்று யாழ் வீரசிங்கம் மண்டபம் மற்றும் யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ் பொதுநூல கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலில் ஆளுநர் அவர்கள் டிஜிட்டல் தொடர்பாடல் ஊடாக கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு ஆளுநர் அவர்கள்

மலேசியாவிடமிருந்து நாம் விவசாயம் தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் – ஆளுநர் Read More »

ஈலிங்க் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு ஆளுநர் விஜயம்

லண்டன் ஈலிங்க் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 31 ஒக்ரோபர் 2019 அன்று முற்பகல் விஜயம் மேற்கொண்டார். ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் அவர்கள் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன் ஆலயத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களை சந்தித்தார். ஆலயத்தின் நிர்வாக சபையினர் இலங்கையின் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும் அதற்கு ஆளுநர் அவர்கள் உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.

ஈலிங்க் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு ஆளுநர் விஜயம் Read More »

கௌரவ ஆளுநர் -பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விடயங்களுக்கான அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான திணைக்களத் தலைவர் சந்திப்பு

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விடயங்களுக்கான அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான திணைக்களத் தலைவர் Mr.Fergus Auld OBE அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (ஒக்.30) லண்டனில் அமைந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது    வடமாகாணத்தை அபிவிருத்தி பாதைக்கு கொண்டுசெல்வதற்கு வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் தான் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்த கௌரவ ஆளுநர் அவர்கள்,  பல சவால்களுக்கு மத்தியில் இதனை

கௌரவ ஆளுநர் -பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விடயங்களுக்கான அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான திணைக்களத் தலைவர் சந்திப்பு Read More »