ஆளுநர்

வட மாகாணத்திற்கு புதிதாக 80 அதிபர்கள் நியமனம்

வட மாகாண பாடசாலைகளுக்கு புதிய 80 அதிபர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவமும் இன்று 10 பெப்பிரவரி 2020 யாழ். இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொண்டு நியமன கடிதங்களை வழங்கினார். வடமாகாணத்தின் கல்வியமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வடமாகாணத்தின் பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன், வட மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார்,வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி அமைச்சு, கல்வித் திணைக்கள அதிகாரிகள் […]

வட மாகாணத்திற்கு புதிதாக 80 அதிபர்கள் நியமனம் Read More »

வடக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு கௌரவ வடக்குமான ஆளுநர் திருமதி பி எம் எஸ் சார்ள்ஸ் அவர்கள் ஆலோசனை

வடக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான தொழிவாய்ப்பை பெற்றுக்கொள்ள அரசு தரும் வாய்ப்பை உரிய நேரத்தில் சரியான ஒழுங்கு முறையை பின்பற்றி பெற்றுக்கொள்வதற்கான முயற்சியை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு வடக்குமான ஆளுநர் திருமதி பி எம் எஸ் சார்ள்ஸ் அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார். தொழில்வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தில் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதி தினம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த திட்டத்தின் கீழ் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லை 45

வடக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு கௌரவ வடக்குமான ஆளுநர் திருமதி பி எம் எஸ் சார்ள்ஸ் அவர்கள் ஆலோசனை Read More »

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரும் அவருடைய குழுவினரும் வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுடன் 10 பெப்பிரவரி 2020 அன்று நண்பகல் ஆளுநர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். இச்சந்திப்பின் போது வடக்கில் மேம்படுத்தப்படவேண்டிய ஏற்றுமதித்துறை, சுற்றுலாத்துறை, விருந்தோம்பல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான கற்கைநெறிகள். தாதியர்களுக்கான சர்வதேச தரத்திலான கற்கைநெறி, என்பன தொடர்பில் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டன. அடுத்த 5 வருடத்திற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆர்வத்தை அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் ஆவலுடன் வெளிப்படுத்தினார். குறிப்பிட்ட துறைகளில் முன்னெடுக்ககூடிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் ஆளுநர் சந்திப்பு Read More »

பகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஆளுநர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்பு

  இலங்கையின் கல்விப் புலத்தில் உயர்கல்வியில் சித்தியடையும் மாணவர்கள் பல்கலைக்கல்வியைத் தொடருவது அவர்களின் வழமையான கற்றல் செயற்பாடுகளாக இருந்து வருகின்றது. இவற்றுக்கிடையில் அண்மை காலமாக பகிடிவதை தொடர்பான பல குற்றச்சாட்டுக்களும்சம்பவங்களும் நடைபெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. எனினும் இன்றுவரை பல்கலைகழக மாணவர்கள் பகிடிவதை தொடர்பில் பல அசௌகரியங்களை சந்திப்பதும் கல்வி தொடர்பாக பல இழப்புக்களை சந்திப்பதும் அவர்கள் வழமையாக எதிர்கொள்ளும் சவால்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. வடமாகாணம் கல்வியை முதன்மைப்படுத்துகின்ற ஒரு மாகாணமாகும். அறநெறிப்பட்ட பண்பாட்டுச் சூழல்

பகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஆளுநர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்பு Read More »

வட மாகாண ஆளுநரின் சுதந்திரதினச் செய்தி

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் இலங்கையில் சுபீட்சம் மிக்க எதிர்காலம் தேசிய ஒருமைப்பாட்டுடன் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் முன்நகர ஆரம்பித்திருக்கிறது. 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தின் பாதிப்புகள், இழப்புகளில் இருந்து, பேண்தகு அபிவிருத்தியை அடைவதற்காக, மற்ற மாகாணங்களில் இப்போது ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அபிவிருத்திக்கு இணையான வரப்பிரசாதங்களை , வடக்கின் மக்கள் துரிதமாக பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் முழுமையாக தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும், நிலைபேறுடைய ஒரு அபிவிருத்திப் பயணத்தில்

வட மாகாண ஆளுநரின் சுதந்திரதினச் செய்தி Read More »

மன்னாரில் பல நிகழ்வுகளில் ஆளுநர் கலந்துகொண்டார்

27 ஜனவரி 2020 அன்று காலை மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைமைக் காரியாலய கட்டடத் திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக வடக்குமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் கலந்துகொண்டார். வடக்கு மாகாண சபையின் பிரதம செயலர் திரு அ பத்திநாதன், வன்னிமாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க தலைவர், பிரதேச செயலாளர், திணைக்கள உயரதிகாரிகள், நிறுவனத்தலைவர்கள், கூட்டுறவு சங்க அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். முழுமையாக

மன்னாரில் பல நிகழ்வுகளில் ஆளுநர் கலந்துகொண்டார் Read More »

இந்தியாவின் 70வது குடியரசு நாள் நிகழ்வில் ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்

இந்தியாவின் குடியரசு நாளின் 70வது ஆண்டு விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயத்தின் ஆதரவுடன் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த கலை விழாவில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் கலைஞர்களை கௌரவித்து பாராட்டினார். 26 ஜனவரி 2020 அன்று யாழ் இந்திய துணைத்தூதுவர் எஸ். பாலச்சந்திரன் தலைமையிலான இவ் விழாவில் சர்வமத தலைவர்கள், யாழ் மாநகர முதல்வர், அரசியல்வாதிகள் வடக்கின்

இந்தியாவின் 70வது குடியரசு நாள் நிகழ்வில் ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் Read More »

மலேசிய குழுவினர், ஆளுநர் கலந்துரையாடல்

மலேசியாவில் இருந்து வந்திருந்த குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்களை சந்தித்து பல்வேறு அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் உரையாடினர். இக்கலந்துரையாடல் 25 ஜனவரி 2020 அன்று இடம்பெற்றது. முதலீட்டு வாரியம் தொடர்பான சாதகபாதக தன்மைகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. ஆளுநர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரங்களைக்கொண்டு முன்னெடுக்க இருக்கும் திட்டங்கள் தொடர்பில் அவர்கள் பல விடயங்களை கேட்டு அறிந்துகொண்டனர். எந்தெந்த துறை சார்ந்த எத்தகைய செயற்திட்டங்களுக்கான முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் வடக்கில்

மலேசிய குழுவினர், ஆளுநர் கலந்துரையாடல் Read More »

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஆளுநர் கலந்து கொண்டார்

கோலாகலமாக ஆரம்பமாகிய யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் கண்காட்சி சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைய வாழ்த்துகளை தெரிவித்தார். யாழ்ப்பாணம் நூலகத்தின் கேட்போர்கூடத்தில் 24 ஜனவரி 2020 அன்று இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் ஆளுநர், இந்திய தூதரகத்தின் துணைத்தூதுவர், யாழ் மாநகர முதல்வர், வெளிநாட்டு விருந்தினர்கள், ஏற்பாட்டாளர்கள், யாழ் வர்த்தக சம்மேளன தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள், பிரபல வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகள், ஆளுநரின் இணைப்பு செயலாளர்கள், ஊடக

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஆளுநர் கலந்து கொண்டார் Read More »

வவுனியாவில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் ஆளுநர் கலந்து சிறப்பித்தார்

21 ஜனவரி 2020 அன்று  வவுனியாவில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில்  வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் கலந்து சிறப்பித்தார். வவுனியா இரட்டைபெரிய குளத்தில் அமைந்துள்ள சிங்கப்பூர் மஹாகருணா கல்லூரியின் கிளை நிறுவனத்தில் ஆளுநருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது வடக்குமாகாண ஆளுநர் முன்னர் வவுனியாஅரசஅதிபராக பதவி வகித்தகாலத்தில் குறித்த கல்லூரியின் கோரிக்கைக்கு அமைவாக வவுனியா மதகுவைத்தகுளத்தில் அவர்களுக்கான காணி ஒன்றை ஒதுக்கி கொடுத்து பிள்ளைகளின் கல்விவளர்சிக்கு நல்லதொரு ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் என்று

வவுனியாவில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் ஆளுநர் கலந்து சிறப்பித்தார் Read More »