மகளிர் விவகார அமைச்சு

வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஜனாதிபதி திறந்து வைத்தார்

பேண்தகு கூட்டுறவு வங்கி முறைமையின் ஊடாக வடக்கு மாகாண மக்களின் பொருளாதார வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் கைதடி முதியோர் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைமையகக் கட்டடம் 30.08.2019 வெள்ளிக்கிழமை வடக்குமாகாண ஆளுனர் கௌரவ கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் உத்தியோக பஸ்ரீர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களால் […]

வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஜனாதிபதி திறந்து வைத்தார் Read More »

யாழ்ப்பாண மாவட்ட ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட சமூக மட்ட அமைப்பிற்கும், மருதங்கேணியில் அமைந்துள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கும் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. ஆர். வரதீஸ்வரன் அவர்களால் தையிட்டி பகுதியைச் சேர்ந்த ஒன்பது  பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் உள்ளடங்களாக பத்து அங்கத்தவர்களைக் கொண்டு மணப்பெண் அலங்காரப் பொருட்கள் மற்றும் கைவினை சார் பொருட்களின் உற்பத்திகளைச் செய்யும்  பனிமலை மாதா  மகளிர் விவகாரக் குழு, தையிட்டி கிழக்கு, தெல்லிப்பளை என்ற அமைப்பிற்கு  அவர்களின்  உற்பத்தியினை மேலும் விருத்தி செய்வதற்கென (மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.200,185 பெறுமதியான இயந்திரங்கள்  மற்றும்  உபகரணங்கள்

யாழ்ப்பாண மாவட்ட ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட சமூக மட்ட அமைப்பிற்கும், மருதங்கேணியில் அமைந்துள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கும் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் Read More »

கைத்தறி நெசவு காட்சியகம் திறப்பு விழா

வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக Chrysalis அரசசார்பற்ற நிறுவனத்தின் அனுசரனையுடன் வடமாகாண கைத்தறி நெசவு காட்சியகம் இல.505, பருத்தித்துறை வீதி நல்லூர் எனும் முகவரியில் 18 ஆகஸ்ட் 2019 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு மணிக்கு திணைக்களப் பணிப்பாளர் திரு.கே.ஸ்ரீமோகனன் அவர்கள் தலைமையில திறப்பு விழா வைபவம் ஆரம்பமானது. இவ் நிகழ்விற்கு மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் அவர்கள் நாடாவினை வெட்டி வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இந்; நிகழ்விற்கு

கைத்தறி நெசவு காட்சியகம் திறப்பு விழா Read More »

வட மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் யாழ் மாவட்ட அலுவலக புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் மாவட்ட அலுவலக புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் அடப்பன் வீதி. மடத்தடி. யாழ்பாணம் எனும் முகவரியில் 18 ஆகஸ்ட் 2019 ம் திகதி காலை 9.15 மணிக்கு திணைக்களப் பணிப்பாளர் திரு.கே.ஸ்ரீமோகனன் தலைமையில் ஆரம்பமானது. இவ் வைபவத்திற்கு மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் அவர்களுடன், செயலாளர், பேரவை செயலகம் திருமதி.ரூபினி வரதலிங்கம் அவர்களும், மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் திருமதி.அஞ்சலி சாந்தசீலன் அவர்களுடன், மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர்

வட மாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் யாழ் மாவட்ட அலுவலக புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் Read More »

பனை எழுச்சி வாரம் கொண்டாட்டங்கள்

பனை எங்கள் சூ ழல், பனை எங்கள் பண்பாடு, பனை எங்கள் பொருளாதாரம் என்ற தொனிப் பொருளில் பனை மான்மிய நிகழ்வு மிகவும் விமர்சையாக நல்லூர் சங்கிலியன் பூங்காவில் 22.07.2019ம் திகதி தொடக்கம் 28.07.2019ம் திகதி வரை காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரை நடைபெற்றது. முதலாம் நாள் (22.07.2019) ஆரம்ப நிகழ்வுகள் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் திரு பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கூட்டுறவு

பனை எழுச்சி வாரம் கொண்டாட்டங்கள் Read More »

வட மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் கீழ்வரும் சிறுகைத்தொழில் போதனாசிரியர் மற்றும் விற்பனை முகாமையாளர் பதவிகளுக்கான நியமனம் வழங்கல்

தொழிற்றுறைத் திணைக்களத்திற்கு சிறு கைத்தொழில் போதனாசிரியர்கள் ஆறு பேருக்கும் ஒரு விற்பனை முகாமையாளர் பதவிக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டது. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களினால் 2019.05.15 ஆம் திகதி (புதன்கிழமை) பிரதம செயலாளர் செயலகத்தில் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் திருமதி. ரூபினி வரதலிங்கம், செயலாளர், மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், திரு. இ.பத்மநாதன், பிரதிப் பிரதம செயளாலர் – நிதி, திரு.ப.காண்டீபன், கணக்காளர், தொழிற்றுறைத் திணைக்களம், வடக்கு மாகாணம் ஆகியோர்

வட மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் கீழ்வரும் சிறுகைத்தொழில் போதனாசிரியர் மற்றும் விற்பனை முகாமையாளர் பதவிகளுக்கான நியமனம் வழங்கல் Read More »

கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான சிற்றூழியர்கள் கௌரவ ஆளுநரினால் நியமிக்கப்பட்டனர்

கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான பத்து சிற்றூழியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 2019/03/27 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது வழங்கிவைக்கப்பட்டன. இந் நிகழ்வில் அ.பத்திநாதன், பிரதம செயலாளர் வடக்கு மாகாணம், எல்.இளங்கோவன், செயளாலர், ஆளுநர் செயலகம், வடக்கு மாகாணம், திருமதி.ரூபினி வரதலிங்கம், செயலாளர், மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், திருமதி.வனஜா செல்வரட்ணம், மாகாணப் பணிப்பாளர், சமூக சேவைகள்

கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான சிற்றூழியர்கள் கௌரவ ஆளுநரினால் நியமிக்கப்பட்டனர் Read More »

தேசிய தொழிற் தகைமை (NVQ Level – 3) அடிப்படையில் தொழிற்திறன் அபிவிருத்தி பயிற்சிகளை நிறைவு செய்தோரிற்கான பயிற்சி உபகரணம் மற்றும் ஊக்குவிப்பு படி வழங்கும் நிகழ்வு

தேசிய தொழிற் தகைமை (NVQ Level – 3) அடிப்படையில் தொழிற்திறன் அபிவிருத்தி பயிற்சிகளை நிறைவு செய்தோரிற்கான பயிற்சி உபகரணம் மற்றும் ஊக்குவிப்பு படி வழங்கும் நிகழ்வு கைதடி முதியோர் இல்லக் கலாச்சார மண்டபத்தில் 12 மார்ச் 2019 அன்று நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. அ.பத்திநாதன் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாகவும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி. ரூபினி வரதலிங்கம் அவர்களின் சிபாரிசுக்கும் வழிநடத்தலுக்கும் அமைவாகவும் இந் நிகழ்வானது தொழிற்துறைத் திணைக்களத்தின்

தேசிய தொழிற் தகைமை (NVQ Level – 3) அடிப்படையில் தொழிற்திறன் அபிவிருத்தி பயிற்சிகளை நிறைவு செய்தோரிற்கான பயிற்சி உபகரணம் மற்றும் ஊக்குவிப்பு படி வழங்கும் நிகழ்வு Read More »

ஆளுநரின் வழிநடத்தலில் வடமாகாணத்தின் சர்வதேச மகளிர் தினம் 

பெண்கள் கல்வித்துறையில் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளனர். சுமார் 60 சதவீதமான பெண்கள் பட்டதாரிகளாக உள்ளனர்   இவர்களில் 45 சதவீதமானவர்கள் கலைத்துறையில் பட்டம் பெற்றவர்கள். இருப்பினும் 35 வீதமானவர்களே தொழிற்துறையை பெற்றுக்கொள்கின்றனர் என்று வடமாகாண மகளிர்விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி  வரதலிங்கம் அவர்கள் தெரிவித்தார். ‘சமத்துவத்திற்கான நல்வாழ்வு’ என்ற தொனிப்பொருளில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் நெறிப்படுத்தலில் பெண்களினால் பெண்களே இந்த நிகழ்வை நடத்த வேண்டும் என்ற வழிகாட்டலுக்கு இணங்க  , வடமாகாணத்தின் 2019 சர்வதேச

ஆளுநரின் வழிநடத்தலில் வடமாகாணத்தின் சர்வதேச மகளிர் தினம்  Read More »

‘இணைந்த கைத்தொழில் கரங்கள்’ கண்காட்சியும் பயிற்சிப்பட்டறையும்

‘இணைந்த கைத்தொழில் கரங்கள்’ கண்காட்சியும்பயிற்சிப்பட்டறையும் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 16.02.2019 தொடக்கம் 17.02.2019 வரை நடைபெற்றது. யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகம் இந்திய துணைத்தூதரகத்தின்அனுசரனையுடன் வடமாகாண தொழிற்துறைத்திணைக்களத்தின் இணை அனுசரனையுடனும் வடமாகாணகல்வி அமைச்சின் முறைசாரா கல்விப்பிரிவுடன் இணைந்துயாழ்ப்பாணத்தில் சிறுகைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், புதிய தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதற்காகவும் இந்தியாவில் இருந்து இயந்திர உபகரணங்கள் மற்றும்17 தொழில் துறை சார்ந்த கைத்தொழில் உற்பத்தியாளர்களை வரவழைத்து வடமாகாணத்திலுள்ள450 இற்கும் மேற்பட்ட தொழில் முயற்சியாளர்களிற்கு 02 நாட்களிற்கு சிறந்த முறையில்பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டதுடன் சிறந்த முறையில் பயிற்சியை நிறைவுசெய்தவர்களிற்கானசான்றிதழ்களும்  பயிற்சி நிறைவில் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் விருந்தினர்களாக இந்திய துணைத்தூதுவர் யாழ்ப்பாணம் ஸ்ரீமான் சங்கர்பாலசந்திரன், வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகரசபைமுதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், வட மாகாண பிரதிப் பிரதம செயலாளர்- நிர்வாகம் திருமதிசரஸ்வதி மோகநாதன், பதில் மாகாணப் பணிப்பாளர், தொழிற்துறைத் திணைக்களம் திருமதிவனஐா செல்வரத்தினம் மற்றும் யாழ் றோட்டறிக் கழகத் தலைவர் சு.டீ.பிரசாந்தன் ஆகியோர்கலந்து சிறப்பித்தனர். இப்  பயிற்சிப்பட்டறையில் உள்ளடக்கப்பட்ட தொழிற்துறைகளாவன. இயந்திரம் மூலம் சப்பாத்தி தயாரிக்கும் முறை. இயந்திரம் மூலம் கோழி உரிக்கும் முறை. இயந்திரம் மூலம் மரவள்ளி கிழங்கு சீவும் முறை. இயந்திரம் மூலம் வாழைக்காய் சீவும் முறை. இயந்திரம் மூலம் தேங்காய்ப் பூ திருவும் முறை. இலகுவில் மரம் ஏறும் முறை. இயந்திரம் மூலம் வாழை மடலை வாழை நாராக்கும்  முறை. இயந்திரம் மூலம் மோட்டார் வாகன சுத்திகரிப்பு முறை. கடதாசிப் பை தயாரிக்கும் முறை. இயந்திர செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கும் முறை. இயந்திரம் மூலம் சிறியளவான தானியங்கள் அரைக்கும் முறை.

‘இணைந்த கைத்தொழில் கரங்கள்’ கண்காட்சியும் பயிற்சிப்பட்டறையும் Read More »