மகளிர் விவகார அமைச்சு

மகளிர் விவகாரங்களுக்கான மகத்தான களப்பணி தொடர்பான பயிற்சிப்பட்டறை

வடமாகாண மகளிர் விவகார அமைச்சானது மகளிர் விவகாரங்களுக்கான சேவை வழங்கல் பரப்புக்கள் மற்றும் திட்டமிடல் நுட்பங்கள் என்பனவற்றை முக்கியமான சமூகவியல் அம்சங்களாகக் கருதுவதனால், வடமாகாணத்தில் பாலின சமத்துவம் மற்றும் ஒப்புரவு ஆகியவற்றில் உள்ள ,டைவெளிகளை அறிந்து புதிய செயற்றிட்டங்களை உருவாக்கவும் பெண்களை வலுவூட்டுதல், பெண்களின் குரல் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்கான உலகளாவிய சிறந்த நடைமுறைகள் பற்றிய அறிவை பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதற்காகவும் வடமாகாணத்தில் இந்த நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதற்கான உள்ளுர் தடைகளை அடையாளம் காணுவதற்காகவும் பெண்களுக்கான சேவையை மேம்படுத்தி செயல்திட்டங்களை […]

மகளிர் விவகாரங்களுக்கான மகத்தான களப்பணி தொடர்பான பயிற்சிப்பட்டறை Read More »

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் வடமாகாணத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு!

வடமாகாண மகளிர் விவகார அமைச்சினால் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முன்னிலை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட விளிம்பு நிலையிலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் கடந்த வருடம் 12.12.2024 அன்று யாழ்ப்பாண மாவட்டத்திலும் 18.12.2024 அன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் 20.12.2024 அன்று மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், மாவட்ட பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர்கள், அமைச்சின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் தீர்க்கமான பங்களிப்புடன்

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் வடமாகாணத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு! Read More »

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா 01.01.2025 அன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ வடமாகாண ஆளுநர் திரு N.வேதநாயகன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பிரதம செயலாளர் திரு.L.இளங்கோவன், துணைவேந்தர், பேராசிரியர் S.சிறிசற்குணராஜா, கலை, விஞ்ஞானம், இந்து நாகரிக பீடங்களின் பீடாதிபதிகள், பேராசிரியர் ரகுராமன், பேராசிரியர் ரவிராஜன் பேராசிரியர் பத்மநாதன் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தின துணைவேந்தர் சார்பில் தொழில்நுட்ப கற்கைகள்

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா Read More »

சமூக சேவைகள் திணைக்களத்தால் மாற்றுவலுவுடையோர் தினம் மாவட்ட ரீதியாகக் கொண்டாடப்பட்டது

வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா மாவட்டத்திற்கான மாற்றுத்திறனாளிகள் தின விழா 19.11.2024 அன்று நடைபெற்றது. மேற்படி நிகழ்வானது வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக எமது பணிப்பாளர் மற்றும் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களும் கெளரவ விருந்தினராக Varod இயக்குனர், வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரி அதிபர் மற்றும் வவுனியா நகரசபை

சமூக சேவைகள் திணைக்களத்தால் மாற்றுவலுவுடையோர் தினம் மாவட்ட ரீதியாகக் கொண்டாடப்பட்டது Read More »

மாற்றுவலுவுடையோர் தினம் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் கொண்டாடப்பட்டது

வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் சர்வதேச மாற்றுவலுவுடையோர் தின விழாவானது 06.12.2024ம் திகதி சரஸ்வதி மண்டபத்தில் சமூக சேவை திணைக்கள பணிப்பாளர் செல்வி அகல்யா செகராஜா தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவில் பிரதம விருந்தினர்களாக திருமதி எழிளரசி பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) வடக்கு மாகாணம் அவர்களும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி திரு சு.சுரேந்திரகுமாரன் அவர்களும் கலந்து கொண்டனர். மாற்றுவலுவுடையோர் தின விழாவானது மாற்றுவலுவுடைய உற்பத்தியாளர்களின் கண்காட்சி மற்றும் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

மாற்றுவலுவுடையோர் தினம் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் கொண்டாடப்பட்டது Read More »

பெற்றோரிய விழிப்புணர்வும் பால்நிலை சார் பிரச்சனைகளும் 2024 பயிற்றுநர்களுக்கான பயிற்சிப்பட்டறை (ToT)

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சினால், பொருளாதார நெருக்கடி வாய்ந்த இன்றைய காலகட்டத்தில் மனித வாழ்க்கையானது ஓர் சவால் மிக்கதாக உள்ளமையால் பெற்றோர் உடல் உள ரீதியாக மிகவும் சோர்வடைந்து மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் நிலை காணப்படுவதுடன் குழந்தை வளர்ப்பு சார்ந்த போதிய அறிவுத்திறன் இல்லாமை, குடும்ப வருமானத்திற்கு ஏற்ப குடும்ப வாழ்க்கையை கொண்டு நடாத்துவதில் உள்ள சிரமம், குழந்தைகளின் மனோநிலையை புரிந்து கொண்டு அவர்களை அனுசரித்து செல்லும் திறன் போன்ற பல வகையான உளப்பிரச்சனைகளை ஒவ்வொரு

பெற்றோரிய விழிப்புணர்வும் பால்நிலை சார் பிரச்சனைகளும் 2024 பயிற்றுநர்களுக்கான பயிற்சிப்பட்டறை (ToT) Read More »

Pink October மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றது

இன்றைய காலகட்டத்தில் பலவிதமான நோய்களினால் எமது சமூகம் பாதிப்படைந்து வரும் சூழ்நிலையில் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் ஆனது பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றமை கண்கூடாக நாம் அறிந்ததே! Pink October மாதத்தினை முன்னிட்டு மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சையை விரைவாக ஆரம்பத்திலேயே மேற்கொண்டால் எந்த அளவிற்கு சிறப்பான விளைவுகளைப் பெறமுடியும் என்பவை தொடர்பான பயன்மிகுந்த விழிப்புணர்வு நிகழ்வானது பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை, கிளிநொச்சியில் வடக்கு மாகாண சபை மகளிர் விவகார

Pink October மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றது Read More »

மூன்றாம் காலாண்டிற்கான ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – வடக்கு மாகாணம்

இவ்வாண்டிற்கான 3 ஆம் காலாண்டிற்கான ஊராட்சி முற்றக் கூட்டங்கள் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ளன. பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் அந்தந்த மாவட்ட செயலகங்களின் இணைத் தலைமையில் இக்கூட்டங்கள் நடாத்தப்பட்டன. இக் கூட்டங்கள் வடக்கு மாகாண சபை மகளிர் விவகார

மூன்றாம் காலாண்டிற்கான ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – வடக்கு மாகாணம் Read More »

மாகாண சமூக சேவைகள் திணைக்களம் சர்வதேச முதியோர் தினவிழா – 2024

மாகாண மட்ட சர்வதேச முதியோர் தின விழாவானது 15.10.2024ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ Hoover மாநாட்டு மண்டபத்தில் சமூக சேவை திணைக்கள பணிப்பாளர் செல்வி அகல்யா செகராஜா தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவில் பிரதம விருந்தினர்களாக திரு இ.இளங்கோவன் பிரதம செயலாளர் வடக்கு மாகாணம் அவர்களும் யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி திரு எஸ்.ஸ்ரீசற்குணராசா அவர்களும் கலந்து கொண்டார்கள். இம் முதியோர் தின விழாவானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. சமூக சேவைத் திணைக்களப் பணிப்பாளர் செல்வி அகல்யா

மாகாண சமூக சேவைகள் திணைக்களம் சர்வதேச முதியோர் தினவிழா – 2024 Read More »

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் பொதியிடல் தொழில்நுட்பப் பயிற்சியானது வழங்கப்பட்டது

வட மாகாணத்தில் உணவு சார் உற்பத்தி முயற்சியில் ஈடுபடும் சிறுதொழில் முயற்சியாளர்களால் கோரப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கொழும்பு கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தொழில்நுட்ப பிரிவின் உதவியுடன் வடமாகாணத்தில் மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட உணவு பொதியிடல் தொழில்நுட்பங்கள் தேவைப்படும் தொழில் முயற்சியாளர்களுக்கு வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பொதியிடல் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் 13.08.2024 ஆம் திகதியன்று வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 35 தொழில்முயற்சியாளர்களுக்கும் மன்னார் மாவட்டத்தில் 14.08.2024 ஆம்

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் பொதியிடல் தொழில்நுட்பப் பயிற்சியானது வழங்கப்பட்டது Read More »